உயில் – கவிதை - பரீட்சன்

.
உச்ச நவீனத்தின் பிந்திய காலத்தில் ஒரு பாம்பு
நூற்றாண்டுகளுக்கு முந்திய வரலாற்றுப் பதிவுகளை
தன் இறக்கையில் சுமந்து பறக்கும்
புறாவின் புரிதலை பரீட்சிக்க விரும்பி
உள்ளடக்கத்தை வாசிக்குமாறு கேட்டால்
இது அழிந்து போன மனித மொழியொன்றால்
எழுதப்பட்ட உயில் என்று கூறி  காலம் கடந்து வாழும்
காற்றிடம்  உதவும் படி இரைஞ்சும்
அனைத்தும் என் படைப்புகளே என்று பறைசாற்றும்
இறைவனுக்கு தனி உரிமம் கொண்டாடியும்
பற்களுக்கு இடையிலுள்ள சதைத்துண்டின்
ஓசையில் பிரிந்தும் அழிந்துபோன ஒரு  நிமிர்ந்து
நிற்கும் பாக்கியம் பெற்ற இரண்டு கால்
இனமொன்றின் காலச்சுவடு என்று காற்று மொழிந்த
போதுதான் புரிந்து கொண்டன
ஏன் மொழியும் மதமும் நம் முன்னோரால் காட்டில்
தடை செய்யப் பட்டன என்று


******************************************
பிரிக்காத கோடுகள்- கவிதை
ஆயினும் கேள்!
தூக்கத்தின் அணைப்பு;
அது அறியாத  இழப்பு!
அறிந்தே தூங்கினோர் விழித்தே இருந்தனர்
கேட்டுப்பார்;
தூங்கிய நொடியை கண்டவர் யார்?
எல்லாப்பிரிவுக்கும்
எல்லா சேர்வுக்கும் இடையிலொரு அறியாமைப் பெரு வெளியொன்று ஆட்சியில் இருக்கும்
நேற்றும் கேட்டாய்
வெளிச்சத்திலிருந்து  எந்தக்கோட்டில் பிரிகிறது இருள்?
உயிரிலிந்து மரணம் பிரியும் அதே கோட்டில்தால்!
புலப்படாத வெளியொன்றில்  புலன்களுக்கு பின்புறத்தில்!

Nantri 

No comments: