உலகச் செய்திகள்


பிலிப்பைன்ஸ் கப்பல் விபத்து: 24 உடல்கள் மீட்பு

பீகாரில் ரயில் மோதியதில் 30 பேர் பலி

பிரித்தானிய அரச குடும்ப வாரிசின் முதலாவது உத்தியோகபூர்வ புகைப்படங்கள்

சிரியாவில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்; 1000பேர் வரை பலி?

மீண்டும் பதவியேற்றார் முகாபே!


==================================================================


பிலிப்பைன்ஸ் கப்பல் விபத்து: 24 உடல்கள் மீட்பு

18/08/2013    பிலிப்பைன்சில், பயணிகள் கப்பலுடன் சரக்கு கப்பல் மோதியதில் பலியான 24 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

காணமல் போன 240க்கும் மேற்பட்டோரை, தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பிலிப்பைன்சின் சிபு நகரை ஒட்டிய துறைமுகம் அருகே 870 பேருடன் சென்ற பயணிகள் கப்பல் மீது நேற்று முன் தினம் இரவு சரக்குக் கப்பல் ஒன்று மோதியது.



இதில் பயணிகள் கப்பலுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. கப்பலில் பெரிய துளை ஏற்பட்டதால் கடல் நீர் உள்ளே சென்றதால் கப்பல் மூழ்கத் தொடங்கியது.
இதுபற்றிய தகவல் அறிந்த பிலிப்பைன்ஸ் கடற்படை மற்றும் விமானப் படை வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூழ்கும் கப்பலில் இருந்த பயணிகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களின் முயற்சியால் 570 பேர் மீட்கப்பட்டனர். எனினும், பயங்கர விபத்து ஏற்பட்டதால் கப்பலில் பயணம் செய்தவர்களில் 240க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

இவர்கள் அனைவரும் கடலில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மீட்புப் படையினர், கடலிலும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேநேரத்தில் விபத்தில் உயிரிழந்த, 24 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

காணாமல் போனவர்களில் 100க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி   








பீகாரில் ரயில் மோதியதில் 30 பேர் பலி

19/08/2013   இந்திய, பீகார் மாநிலத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யாத்ரீகர்கள் மீது கடுகதி ரயில் மோதியதில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த சக யாத்ரீகர்கள் மோதிய ரயிலின் சில பெட்டிகளுக்கு தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது.
பீகாரின் தாமரா ரயில் நிலையத்தில் சாஹர்சா மாவட்டத்தில் உள்ள கோயிலுக்குச் செல்வதற்காக உள்ளூர் ரயில் ஒன்றில் இருந்து யாத்ரீகர்கள் குழுவினர் இறங்கியுள்ளனர்.
பின்னர் மற்றொரு ரயிலுக்காக தண்டவாளம் அருகேயே சிலர் காத்திருந்தனர். மேலும் சிலர் தண்டவாளத்தைக் கடக்கவும் முயற்சித்துள்ளனர்.
அப்போது சாஹர்சாவிலிருந்து பாட்னா நோக்கி நோக்கி சென்ற ராஜ் ராணி கடுகதி ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்தோர் மற்றும் தண்டவாளத்தைக் கடக்க முயன்றோர் மீது அதிவேகத்தில் மோதியது.
இதில் பலரது உடல் துண்டு துண்டாக சிதறியது. பலரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில காவல்துறை அதிகாரி எஸ்.கே. பரத்வாஜ், ரயில்வே தண்டவாளத்தை சிலர் கடக்க முயன்றதால் இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் நிறுத்தப்பட்ட ராஜ் ராணி  ரயிலுக்கு சிலர் தீ வைத்துள்ளனர்.
அப்பகுதிக்கான சாலை போக்குவரத்து மோசமாக இருப்பதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 20 பேர் வரை பலியாகி இருப்பதாக கூறப்பட்டாலும் உறுதியான எண்ணிக்கை தெரியவில்லை என்றார்.
தற்போது இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே இச்சம்பவத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரயில்வே நிர்வாகம் தலா ரூ10 லட்சம் வழங்க வேண்டும்.உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.   நன்றி வீரகேசரி   






பிரித்தானிய அரச குடும்ப வாரிசின் முதலாவது உத்தியோகபூர்வ புகைப்படங்கள்

20/08/2013     பிரித்தானிய இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கத்தரீனும் தமது குழந்தை ஜோர்ஜுடன் காட்சியளிக்கும் முதலாவது உத்தியோகபூர்வ புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மேற்படி புகைப்படங்களை கத்தரீனின் தந்தையான மைக்கேல் மிடில்டன் பேர்க்ஷியரிலுள்ள அவர்களது குடும்ப இல்லத்திலுள்ள தோட்டத்தில் வைத்து எடுத்துள்ளார்.

குழந்தையான இளவரசர் ஜோர்ஜ் தனது தாயாரான கத்தரீனின் கைகளில் தன்னை மறந்து உறங்குவதை அந்தப் புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன.

அந்தப் புகைப்படங்களில் லுபோ மற்றும் வில்லி ஆகிய நாய்களும் காட்சியளிக்கின்றன.

மேற்படி புகைப்படங்கள் சாதாரண புகைப்படக்கருவி ஒன்றால் எடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய கென்ஸிங்டன் மாளிகை தெரிவித்தது.
  நன்றி வீரகேசரி   

 

 

 

 சிரியாவில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்; 1000பேர் வரை பலி?

22/08/2013 சிரி­யாவின் டமஸ்கஸ் நகரின் புற­ந­கர் ­ப­கு­தியில் அந்­நாட்டுப் படை­யினர் இர­சா­யன ஆயு­தங்­களைப் பயன்­ப­டுத்தி புதன்­கி­ழமை நடத்­திய தாக்­கு­தலில் 1000 இற்கும் மேற்பட்டோர் பலி­யா­கி­யுள்­ள­தாக அந்­நாட்டு அர­சாங்க செயற்­பாட்­டா­ளர்கள் தெரி­விக்கின்றனர்.

கோயுடா பிராந்­தி­யத்தில் புற­நகர் பகு­தியில் இர­சா­யன வெடி­குண்­டு­களை கொண்ட ஏவு­க­ணை­களை ஏவி தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில், தாம் இர­சா­யன ஆயு­தங்­களைப் பயன்­ப­டுத்தி தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­தாக கூறு­வது எது­வித அடிப்­ப­டை­யு­மற்ற குற்­றச்­சாட்­டு என சிரிய அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.
கிழக்கு புற­ந­கரப் பகு­தி­க­ளி­லான சமல்கா, அர்பீன், என்­டர்மா ஆகிய பிராந்­தி­யங்­களில் உக்­கிர ஷெல் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன.
சிரி­யாவின் தாக்­குதல் நட­வ­டிக்­கை­க­ளின்­போது இர­சா­யன ஆயு­தங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை தொடர்பில் ஏற்­க­னவே தெரி­விக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுகள் சம்­பந்­த­மாக விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் முக­மாக ஐக்­கிய நாடுகள் குழு­வொன்று சிரி­யா­வுக்கு விஜயம் செய்­துள்ள நிலை­யி­லேயே இந்தத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளன.

கடந்த மார்ச் மாதம் கான் அல் –- அஸ்ஸல் பிராந்­தி­யத்தில் 26 பேர் பலி­யா­கு­வ­தற்கு கார­ண­மாக அமைந்த தாக்­குதல் உட்­பட 3 இடங்­களில் இடம்­பெற்ற தாக்­கு­தல்­களில் இர­சா­யன ஆயு­தங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­ததா என்­பதைக் கண்­ட­றி­யவே மேற்­படி ஐக்­கிய நாடுகள் குழு சிரி­யா­வுக்கு விஜயம் செய்­தி­ருந்­தது.
இந்த தாக்­கு­தல்­களில் காய­ம­டைந்­த­வர்கள் தற்­கா­லிக மருத்­து­வ­ம­னை­யொன்றில் சிகிச்சை பெறும் காட்­சிகள் யூரியூப் இணை­யத்­த­ளத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. மேலும் படங்கள் பலவும் வெளியாகியுள்ளன.

பலி­யா­ன­வர்கள் மற்றும் காய­ம­டைந்­த­வர்­களில் பெண்­களும் சிறு­வர்­களும் உள்­ள­டங்­கு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.
இந்­நி­லையில் பிந்­திய தாக்­கு­தலில் இர­சா­யன ஆயு­தங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக கூறு­வது ஐக்­கிய நாடுகள் இர­சா­யன ஆயு­தங்கள் தொடர்­பான விசா­ரணை ஆணை­யகத்தின் கடமைகளை நிறைவேற்றுவதை திசை திருப்பும் முயற்சி என சிரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிரி­யாவில் இடம்பெற்று வரும் மோதல்களில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக அரசாங்கப் படையினரும் கிளர்ச்சியாளர்களும் ஒருவரை யொருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.    நன்றி வீரகேசரி  














மீண்டும் பதவியேற்றார் முகாபே!

22/08/2013   சிம்பாவே நாட்டின் ஜனாதிபதியாக ரொபேர்ட் முகபே 7 ஆவது தடவையாகவும் பதவியேற்றுள்ளார்.
இதனையொட்டி வியாழக்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது ஆதரவாளர்கள் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் பொருட்டே இவ்விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 31 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவின் படி 61 % வாக்குகளை ரொபர்ட் முகபே பெற்றுக்கொண்டார்.அவருக்கு அடுத்ததாக வங்கிராய் 34% வாக்குகளைப் பெற்றார்.
எனினும் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன. நன்றி வீரகேசரி 





No comments: