தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள் !


















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் 

மெல்பேண் ... அவுஸ்திரேலியா     



" தைபிறந்தால் வழிபிறக்கும் " என்று தமிழர்கள் சொல்லுவது வழக்கமாகும். அந்த வழக்கம் தொடர்ந்து வரவேண்டும் என்பதுதான் பலரின் ஆசையாகும். அதனால் தை எப்போதுவரும் , நல்ல வழி எப்ப டிப் பிறக்கும் என்னும் எதிர்பார்ப்பும் இருந்து கொண்டே இருக்கும்.  

"தை பொறந்தால் (பிறந்தால்) வழி பிறக்கும் தங்கமே தங்கம்

தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்   

முத்துச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம் 

முத்தத்திலே சோறு பொங்கி தங்கமே தங்கம்

குத்து விளக்கேத்தி வச்சு ( வைத்து ) தங்கமே தங்கம்

கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம் "    

                                                                                                                                                                       

என்னும் இந்தப் பாடல் மனமகிழ்ந்த பொங்கலை, மலர்ந்த பொங்கலை, மண்வாசனை தரும் பொங் கலை , உயிர்த்துடிப்பான பொங்கலை, கலாசாரம் பண்பாடு கலந்த பொங்கலை நினைவூட்டிகிறதல் லவா ?  இப்படி ஒரு காலம் இருந்தது. ஆனால் அப்படி ஒரு காலம் வரவேண்டும் என்பதுதான் எல்லோ ரினதும்  பேராவலும் ஆகும்.   

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்

 உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் "  

                         

" உழுதுண்டு வாழ்வார்க்கு ஒப்பில்லைக் கண்டீர்

 பழுதுண்டு வேறோர் பணிக்கு "   

                                   

"சேற்றில் கால் வைக்காவிட்டால் 

சோற்றில் கைவைக்க முடியாது " 

இவையெல்லாம் பொங்கலை மனமிருத்தும் அமுத வாக்குகள்.  பொங்கல் என்றாலே உற்சாகம் பிறந்துவிடும். புத்தாடை வாங்குவது ! புதுப்பானை வாங்குவது ! சர்க்கரையும் , தேனும், நெய்யும் , பருப்பும் , பாலும் தான் முன்னால் வந்து நிற்கும். கூடவே பழங்களும் , கரும்பும் சேர்ந்து விடும்! இவையெல்லாம் அனுபவித்து ஆனந்தம் அடைவதற்கு வருவதுதான் தைப் பொங்கலாகும்.     

தைமலர்ந்து வருக வருகவே

 


இயற்றியவர்

பல்மருத்துவக் கலாநிதி சிவஞானச்சுடர் பாரதி இளமுருகனார்

                                (வாழ்நாட் சாதனையாளர்)





முந்துதமிழ் முச்சங்கம் எல்லாம் கண்டு

    முதுசொம்பல கொண்டதமிழ் எல்லாம் பெருமை! 

சந்ததிக்குத் தமிழைநாம் தருதல் விடுத்துத்

    தமிழின்புகழ் பேசுவதில் அர்த்தம் உண்டோ?

எந்தநாட்டில் வாழ்ந்தாலும் மானம் இருந்தால்

    என்னசொன்னாய்?   தமிழன்நான் என்று பொங்கி

வந்திடுமெம் சந்ததிக்கு ;தமிழ்கொடுப் போரை

    வாழவைக்கத் தைமலர்ந்து வருக வருகவே!

 

 


 










பொங்கல்தனை இனிமைபொங்கப் பொங்கலோ பொங்கல்

      பொலிந்திடுக என்றேபுத் தரிசி கொண்டு

பொங்கியதைப் புடவிவாழப் பொற்கதிர் வழங்கும்

     பொற்புமிகு பரிதிக்குப் படையல் செய்து

பொங்கpநிற்கும் இந்நாளில் தமிழ ரெல்லாம்

     புகலரிய ஒற்றுமையை மனதிற் பொங்கிப்

பொங்குமின்பத் தமிழனென்ற தனித்து வத்தைப்

      போற்றிடவே தைமலர்ந்து வருக வருகவே!

வள்ளலாம் இறைவன் வந்துமே அமர்ந்திடுவான் !














மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ் மொழிக்  கல்வி இயக்குநர் 
மெல்பேண்   …… அவுஸ்திரேலியா 



உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
தெள்ளத் தெளிவாய் செப்பினார் திருமூலர் 
கள்ளமிலா உள்ளம் கருணையுடை உள்ளம்
கடவுளுமே வந்து தங்கிவிடும்  இல்லம் 

வெள்ளத் தனையது மலர் நீட்டம்
மாந்தரின் உள்ளத் தனையது உயர்வென
தெள்ளத் தெளிவாய் செப்பிய வள்ளுவனார்
கருத்திலும் கடவுள் தெரிகிறார் தேடுங்கள் 

வெள்ளை நிறமலருமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது
தெள்ளத் தெளிவாய் செப்பினார் விபுலாநந்தர்
உள்ளத்தில் இறைவான் உறைவது நிச்சயமே 

கள்ள மனத்தைக் கலைத்திடவே வேண்டுமென
தெள்ளத் தெளியாவாய் தேர்ந்துமே செப்பினார்
கள்ளமிலா உள்ளமே கடவுளுக்குக் கருவறையே
வெள்ளை மனமே விடிவுக்கு விளக்காகும்

உள்ளந் தெளிந்தால் உணரலாம் உண்மையினை
உள்ளந் தெளிந்தால் உயிர்ப்போடு வாழ்ந்திடலாம்
உள்ளங் கலங்காமல் உயர்வினை உன்னினால்
வள்ளலாம் இறைவன் வந்துமே அமர்ந்திடுவான் !



 

பாரதிதாசன் கேட்டபடி யாழை மீட்டி நான் சேர்த்த இன்பம்!

 



-சங்கர சுப்பிரமணியன்





துன்பம் வருகையில் யாழை மீட்டி நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா? - நல்
வலுவில்லா பொழுதில் தமிழில் பாடிநீ
வலிமை சேர்க்க மாட்டாயா?-  கண்ணே
வலிமை சேர்க்க மாட்டாயா?
                                                              (துன்பம்)
அன்பும் அறனும் சூழும் நாட்டிலே
பண்பும் பயனும் சேர்க்க - நல்
பண்பும் பயனும் சேர்க்க - நீ
அன்னை செந்தமிழ்ப் பாட்டின் வழியினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? -கண்ணே
ஆடிக் காட்ட மாட்டாயா?
                                                                (துன்பம்)
வாழ்வதென்றும் யாம் வீழ்வதென்றுமே
தெளிந்திடாத போது - யாம்
தெளிந்திடாத போது - தெய்வ
புலவரவரின் அருங்குறளில் ஒன்றினால்
வழியைச் சொல்ல மாட்டாயா? - நீ
வழியைச் சொல்ல மாட்டாயா?
                                                                (துன்பம்)
நற்றினையென்றும் குறுந்தொகையென்றும்
புலவர் கண்ட நூலின் - அரும்
புலவர் கண்ட நூலின் - உன்
திறமை காட்டி வாழுந் தமிழின் சிறப்பைச்
சொல்லிக் காட்ட மாட்டாயா? அதனைச்
சொல்லிக் காட்ட மாட்டாயா?
                                                               (துன்பம்)

.



தமிழன் அன்று சீனாவில் வணிகம்! தமிழன் இன்று சீனாவில் பயணம்!! தொடர்- 10…..சங்கர சுப்பிரமணியன்.


நம் முன் வாழ்ந்தோர் செய்த செயலைத்தான் பின்பற்றினோம். மயில் மீதேறி உலகைச் சுற்றினால் என்ன பெற்றோரைச் சுற்றினால் என்ன? ஆதலால் டவர் வரை சென்று திரும்பினோம். எங்கள் வழியை பலர் பின்பற்றினர். அதில் எனக்கு விருது கிடைத்தது போன்ற பெருமை. விருது எல்லோருக்கும்தான் கிடைக்கிறது. இதிலென்ன பெருமை என்று மாடசாமி அண்ணாச்சி என்றோ சொன்னது என் தலையில் நறுக்கென குட்டுவது போல் இருந்தது.


சீனப் பெருஞ்சுவரை அவரவர்களின் உடல் ஒத்துழைப்புக்கு ஏற்ப நடந்துசென்று பார்த்து மகிழ்ந்தனர். எல்லாம் மனம்தான் காரணம். கோவிலில் ஆண்டவனை கையெடுத்து கும்பிடுபவர்களும் இருக்கிறார்கள். தரையில் விழுந்து கும்பிடுபவர்களும் இருக்கிறார்கள். தரையில் விழுந்ததோடு மட்டுமின்றி சிலர் தண்ணீரில் நீச்சல் அடிப்பதுபோல் கைகளை மாற்றி மாற்று தலைக்கு முன் நீட்டி கும்பிடுபவர்களும் இருக்கிறார்கள். கும்பிடுவதற்கு ஏற்ப சொர்க்கத்தில் முன்னுரிமை கிடைக்குமோ என்னவோ?

யாரையும் குறை சொல்ல முடியாது. ஒருவன் கஞ்சி குடிக்கிறான்.

ஒருவன் கறி கூட்டு குழம்புடன் உண்கிறான். மற்றொருவன் வடை பாயாசத்துடன்  விருந்து சாப்பிடுகிறான் என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும். சீனப் பெருஞ்சுவர் பார்க்கவேண்டிய ஒன்று. நடந்து முடித்த களைப்புடன் இறங்கினோம். வெயிலின் கொடுமை தாங்கமுடியவில்லை. யாரோ ஒருவர் தன் மகள் தீகார் சிறையில் இருப்பத்தப் பார்த்து ஒரு ரோஜாமலர் வாடித் துவண்டதுபோல் இருக்கிறாள் என்று சொன்னது நினைவில் வந்தது.

அங்கு வந்தவர்கள் அனைவருக்கும் அதே நிலைதான். ஒருவழியாக சீனப் பெருஞ்சுவரில் இருந்து இறங்கி பேருந்தில் வந்து அமர்ந்தபின் சிறிது நேரத்தில் கால்களில் வலி தெரிந்தது. ஓட்டலுக்கு வந்து வென்னீர் குளியல் எடுத்தபின் ஓரளவு களைப்பும் கால்வலியும் குறைந்தது. இரவு உணவுக்குப் பிறகு மறுநாள் பயணத்துக்குண்டான ஏற்பாடுகளைச் செய்தோம்.

சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்                    

31 - 01 - 2026 Satதமிழ் இசை விழா  - மாலை 5.30 மணி - தமிழ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பும்  நடைபெறும்.  இடம்: சிட்னி ஸ்ரீ துர்கா தேவி அரங்கம்

07 - 02 - 2026 Sat: சிவம் நடனப் பாடசாலை பெருமையுடன் சம்ஹிதாவை வழங்குகிறது.  இடம்: பிரையன் பிரவுன் தியேட்டர், பாங்க்ஸ்டவுன், NSW 2200
நேரம்: மாலை 6 மணி

20 - 02 - 2026 Fri: சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில்  திருவிழா ஆரம்பம்

21 - 02 - 2026 Satசிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் கொடியேற்றம்

28 - 02 - 2026 Satசிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் சப்பரத் திருவிழா

01 - 03 - 2026 Sunசிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழா

02 - 03 - 2026 Monசிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் மாசி மக தீர்த்தத் திருவிழா

07 - 03 - 2026 Sat: அபயகரம் வழங்கும் 34வது ஆண்டு நிதிசேகரிப்பு விழா

                                at 6 PM Bryan Brown Theatre, Bankstown NSW 2200

இலங்கைச் செய்திகள்

யாழ்ப்பாணம் கந்தரோடை விகாரை பெயர் பலகை அகற்றப்பட்டது

முன்னாள்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை!

யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத பேரழிவை சந்திக்கும் - விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா

பாதுகாப்பு பிரதி அமைச்சருடன் இந்திய இராணுவத் தளபதி சந்திப்பு

சீதையம்மன் ஆலயத்திற்கு வருகை தரவிருந்த இந்திய இராணுவ தளபதியின் விஜயம் இரத்து



யாழ்ப்பாணம் கந்தரோடை விகாரை பெயர் பலகை அகற்றப்பட்டது

08 Jan, 2026 | 02:24 PM

யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால் , கந்தோரோடை பகுதியில் விகாரைகள் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் "கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்" என அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து, "கந்தரோடை விகாரை" என நாட்டப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் , சுன்னாகம் சந்தைக்கு அருகில் , தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றினால் "கந்தரோடை விகாரை" என திசை காட்டும் பெயர் பலகை நடாத்தப்பட்டிருந்தது. 

இந்நிலையில் கந்தரோடை விகாரைகள் அமையப்பெற்றுள்ளதாக கூறப்படும் , புராதன இடத்தினை , " தொல்லியல் ஆய்வு மையம்" என அடையாளப்படுத்தப்பட வேண்டும் என பிரதேச சபையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

உலகச் செய்திகள்

அமெரிக்காவால் மதுரோ சிறைப்பிடிப்பு : “உலகின் நீதிபதியாக எந்த நாடும் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” – சீனா

வெனிசுவேலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக பதவி ஏற்றார் டெல்சி ரோட்ரிக்ஸ்

வெனிசுவெலாவுடன் தொடர்புடைய 2 கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா பறிமுதல் ; ஒரு கப்பலில் ரஷ்யாவின் தேசியக் கொடி!

கிரீன்லாந்தை கையகப்படுத்த இராணுவத்தை பயன்படுத்த அமெரிக்கா கலந்துரையாடல்

ஈரானில் இணையம், தொலைபேசி சேவைகள் முடக்கம் 



அமெரிக்காவால் மதுரோ சிறைப்பிடிப்பு : “உலகின் நீதிபதியாக எந்த நாடும் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” – சீனா

Published By: Digital Desk 3

06 Jan, 2026 | 04:24 PM

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலாஸ் மதுரோவை அமெரிக்கா சிறைப்பிடித்ததை தொடர்ந்து, “உலகின் நீதிபதியாக எந்தவொரு நாடும் செயல்படுவதை பீஜிங் ஏற்றுக்கொள்ளாது ” என்று சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை பீஜிங்கில் நடைபெற்ற சந்திப்பின் போது, பாகிஸ்தானின் துணை பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான இஷாக் தாரிடம் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“உலகின் காவலராக எந்த நாடும் செயல்பட முடியாது என்பதையும், உலகின் நீதிபதியாக தன்னை அறிவிக்க எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என்பதையும் நாம் ஒருபோதும் நம்பியதில்லை,” என்று அவர் கூறினார்.

மகர ஜோதி 14/01/2026

 





தைத்திருநாள் பொங்கல் விழா 15/01/2026

 


ஷ்யாமளா நவராத்திரி திருவிழா 19 - 27 /01/2026

அறிவு, கலை, நற்சொல் வளர்ச்சிக்காக ஷ்யாமளா நவராத்திரி திருவிழா



சண்டி மகா ஹோமம் 25/01/2026

 





தமிழ் இசை விழா - சனிக்கிழமை 31/01/2026 - மாலை 5.30 மணி

 

நடைபெறும் இடம் – சிட்னி ஸ்ரீ துர்கா தேவி அரங்கம்

நேரம்: மாலை 5:30 மணிக்கு

1    தமிழ் இசை விழாவில் சிறப்பு உரைகள்

2    தமிழ் இசை விழாவில் மாணவர்கள் பங்கேற்பு
3    தமிழ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

இலக்கியவெளி நடத்தும் “பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் அவர்களின் தமிழியல் சுவடுகளும் நூற்றாண்டு தின நிகழ்வும்” 07/02/2026

 


ஒருங்கிணைப்பு:  பேராசிரியர் அ.சண்முகதாஸ்

 நாள்:  சனிக்கிழமை 07-02-2026

நேரம்:

 இந்திய நேரம் - மாலை 6.30

இலங்கை நேரம் - மாலை 6.30

கனடா நேரம் - காலை 8.00

இலண்டன் நேரம் - பிற்பகல் 1:00

 வழி: ZOOM

 Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 https://us02web.zoom.us/j/3890729245...

 சிறப்புப் பேச்சாளர்கள்:

 பேராசிரியர் எம்.ஏ. நுஃமான்

இ.இராஜேஸ்கண்ணன்

சு.குணேஸ்வரன்

எம்.எம்.ஜெயசீலன்

சி.ரமேஷ்

மேலதிக விபரங்களுக்கு: அகில் - 001416-822-6316

 https://www.ilakkiyaveli.com

சம்ஹிதா 07/02/2025

 சிவம் நடனப் பாடசாலை பெருமையுடன் சம்ஹிதாவை வழங்குகிறது

இடம்: பிரையன் பிரவுன் தியேட்டர், பாங்க்ஸ்டவுன், NSW 2200

நேரம்: மாலை 6 மணி





சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் திருவிழா 2026 : 20/02/2026 - 04/03/2026


 









அபயகரம் வழங்கும் 34வது ஆண்டு நிதிசேகரிப்பு விழா 07/03/2026