தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு
அத்துவித நிலைதன்னை ஆனைமுகா தந்தருளாய்!
சிவனவன்
திருநிறை சீர்உருக் கொண்டவா!
திருவடி
தொழுதிடச் சிறியனேன் சிந்தையில்
குவலயங்
காப்பவா! குஞ்சர முகத்தவா!
குருபரா
நல்லதோர் மனநிலை தந்திடாய்!
வேழ முகத்தவா!தாள்தொழு தரற்றிடும்
ஏழையின்
ஓலமுன் செவிகளில் ஒலிக்குமா?
வாழ்வதா
சாவதா வஞ்சனை யுலகினில்
வல்வினை
கழைவையோ? மலரடி சேர்ப்பையோ?
கந்தவேள்
அழைத்ததும் கடிதினற் சென்றுநீ
காதலுக்(கு)
அருளினை! கருணையால் அவ்வையின்
செந்தமிழ்த்
தேறலை மாந்தி மகிழ்ந்தனை!
சிறியனேன் புலம்பலுன் செவியிடஞ் சேருமோ?
கடவுளை நம்பினால் கைவிட மாட்டார் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்
இருளிலும் இருப்பார் ஒளியிலும் இருப்பார்
அருமறை அனைத்திலும் ஆண்டவன் இருப்பார்
நோயாய் வருவார் வைத்தியம் செய்வார்
நன்றி முத்தம் (கன்பரா யோகன்)
நான்
நடந்து கொண்டிருந்த தெரு, நில
மட்டத்திலிருந்து
ஒரு நாலைந்து மீற்றர் உயரத்திலிருந்தது. அங்குள்ள வீடுகளையும்,
கட்டடங்களையும் அவற்றின் கூரை
உச்சிகளையும் ஒரு பறவையைப் போல
என்னால் பார்க்க முடிந்தது. பெரும்பாலும் பழைய வீடுகள், அவற்றுள் சில பலகை வீடுகள். தெரு
மட்டத்திலிருந்து வீட்டு முற்றங்களுக்கு இறங்க செங்குத்தான படிகள் இருந்தன.
காலை
ஏழு மணி. வெயில் ஆறுமணிக்கே
விழத் தொடங்கியிருந்த கோடை
காலக் காற்றிலும் குளிர்
இருந்தது. தூரத்தே அடர்த்தியான பைன் மரக் கூம்புகள் கொண்ட
மலைகள் மெல்லிய நீல பனிப் புகாரினூடே
தெரிந்தன. பளிச்சென்ற வெய்யில் வந்து மலை விளிம்புகள் தெளிவாகத்
தெரியும் வரை இந்தப் புகார்
இருக்கும்.
ஏழு
மணிக்கே சூப்பர் மார்க்கட் கடைத் தொகுதியின் நுழைவாயில் தானியங்கிக் கதவு திறந்திருந்தாலும் உள்ளே இன்னும்
பல கடைகள் பூட்டிக் கிடந்தன. ஒரேயொரு சுவர்களில்லாத திறந்த காலையுணவுக்கடையில் இரு சீனச் சிறுமிகள்
பிசியாக நின்றனர். அவர்களிடம் கேட்டபோது கோப்பி, தேநீர் விற்பதில்லையென்றனர். வெளியே ஒரு கடை உண்டு
என்றாள் அவர்களில் ஒருத்தி.
வெளிச்செல்லும்
தானியங்கிக் கதவினூடு
வர இடப்புறத்தில் நான் தேடி வந்த
GPS காட்டிய கடை இருந்தது
கடையுள்ளே
ஐந்தாறு வட்ட மேசைகளும்
சுற்றிவர அலுமீனியக் கதிரைகளும் இருந்தன.
வெயில் உள்ளேயும் வந்திருந்தது . நின்றபடி ஒருத்தி பேப்பர் படித்துக் கொண்டிருந்தாள். கவுண்டரில் நீல ஜம்பர் அணிந்த
ஐம்பது வயது மதிக்கத் தக்க
ஒருவனும் உள்ளே கோப்பி மெஷினில் கருப்பு உடையும் ஏப்ரனும் அணிந்த நாற்பது மதிக்கத்தக்க பெண்ணும் நின்றனர்.
எனது
வழக்கமான கப்பசீனாவும் இரண்டு சுகரும் என்று சொன்னேன். அடுக்கப்பட்டிருந்த மூன்று ஸைஸ் பிளாஸ்டிக்
கப்புகளில் நடுத்தரமான ஒன்றைக் காட்டினேன். உள்ளிருந்த
பெண் எடுத்துச் செல்லவா இல்லையா என்று கேட்டாள். மூடியில்
துளை வைத்த டேக் எவே கப்பில் அருந்துவது என் வழக்கம். அப்படியே
எடுத்துச் செல்லவும் வசதி. ‘டேக் எவே’ என்றேன்.
இதே நேரம் தானியங்கிக் கதவு திறக்க ஒரு மின்சார மூன்று சில்லு ஸ்கூட்டரில் கட்டைக் காற்சட்டை அணிந்த ஒருவன் உள்ளே நுழைந்தான். அவனுக்கு இடது கால் இல்லை. ஸ்கூட்டரில் அவனது வலது காலுக்கு அருகில் படுத்திருந்த படி வந்த கருப்பு நிற நாயொன்று ஸ்கூட்டர் நின்றதும் குதித்துக் கீழே இறங்கியது.
பதித்தவர் தடத்தில் பயணிக்கிறேன் பயணம் - 1…..
காதலி… காதலி…
என் உயிர்க் காதலி
என் காதலி…என் காதலி
உன்னை நான் கண்டதும்
என்னை நீ வென்றாயே
நீ…வென்றாயே…என் காதலி
மண்ணில் நடக்கிறேன்
காலாய் இருக்கிறாய்
நீ காலாய் இருக்கிறாய்
விண்ணில் பறக்கிறேன்
நீ சிறகாய் இருக்கிறாய்
சிறகாய் இருக்கிறாய்
மண்ணில் நடக்கிறேன்
காலாய் இருக்கிறாய்
நீ காலாய் இருக்கிறாய்
விண்ணில் பறக்கிறேன்
நீ சிறகாய் இருக்கிறாய்
சிறகாய் இருக்கிறாய்
மண்ணில் நானும் நடந்தாலும்
விண்ணில் நானே பறந்தாலும்
நீ காலாய் இருந்து சிறகாய் இருந்தும்
என்னில் துணையாய் வருகின்றாய்
நீ என்னில் துணையாய் வருகின்றாய்
காதலி… காதலி…
என் உயிர்க் காதலி
என் காதலி…என் காதலி
வாழும் வாழ்விலே
வறுமை வந்தாலும்
கொடும் வறுமை வந்தாலும்
கண்ணப்பன் நிலையைக் கணக்கிடல் அரிது !
மனிதநேயம் மறையவில்லை!(உண்மைக்கதை உருமாறியுள்ளது)
-சங்கர சுப்பிரமணியன்.
தமிழன் அன்று சீனாவில் வணிகம்! தமிழன் இன்று சீனாவில் பயணம்!! தொடர்- 12…..சங்கர சுப்பிரமணியன்.
இதில் கொடுமை என்னவென்றால் தமிழை வைத்துப் பிழைப்பவர்களும் தமிழால் பெயரும் புகழும் அடைபவர்களும்கூட தமிழ்பற்றி மூச்சுவிடாது மௌனம் சாதிப்பதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போது சங்கப்பலகையின் சூட்சுமத்தை சொல்கிறேன். தமிழரின் அறிவியல் திறன் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்ற அநுமானத்தில் சொல்கிறேன்.
நடத்துவதில்லையா? அதுபோலத்தான் இதுவும். அது சரிவருமா? அவர் நேர்மையுடையவராக இருக்க வேண்டுமே. அவர் என்றால் அவர் மட்டுமே அல்ல. ஒரு புலவர்கள் குழாம் இருக்கும். அவர்களில் தலைமைப் புலவரிடம் விசை இருக்கும். இந்த புலவர்களின் குழாமிடம் முன்னதாகவே சங்கப்பலகையில் வைக்கப்படும் நூல்கள் கொடுக்கப் பட்டுருக்கும்.
சித்தி - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்
சித்தி என்பவள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் இருப்பாள், மூத்த தாரத்தின் குழந்தைகளை கொடுமைப் படுத்துவாள் என்ற கருத்தை மறுதலிப்பது போல் பிரபல நாவலாசிரியை வை .மு . கோதைநாயகி பல ஆண்டுகளுக்கு முன் ஒரு கதையை எழுதியிருந்தார். சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆண்களின் கைகளில் இருந்த எழுத்தாட்சியை தன் பக்கம் திருப்பிக் கொண்டவர் இந்த கோதைநாயகி. தமிழின் முதல் பெண் பத்திரிகை ஆசிரியை என்ற பெருமையும் இவரையே சேரும். இவர் எழுதிய கதை 1966ம் வருடம் சித்தி என்ற பேரில் படமானது.
கண்ட கே .எஸ் . கோபாலகிருஷ்ணன் சித்தி படத்தை உருவாக்கியிருந்தார். ஏற்கனவே மங்கையர் திலகம் படத்தில் சித்தியாக நடித்து ரசிகர்களின் மனதை கட்டிப் போட்ட பத்மினி இந்தப் படத்திலும் சித்தியாக பாத்திரம் ஏற்றார். அப்படி சொல்வதை விட பாத்திரமாகவே மாறி விட்டார் எனலாம். இது படத்துக்கு பெரிய பலமாக அமைந்தது. தன்னைக் கண்டு நடுங்கும் குழந்தைகளிடம் அன்பு காட்டுவது , மாமியார் மனதை மாற்றுவது, கணவனை அனுசரித்து போவது என்று காட்சிக்கு காட்சி தன் நடிப்பு திறனை நிருபித்துக் கொண்டிருந்தார் பதமினி. போதாக் குறைக்கு இளமையாகவும் காட்சியளிக்கிறார்!
சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025
.
உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க tamilmurasu1@gmail.com or paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்
சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்
31 - 01 - 2026 Sat: தமிழ் இசை விழா - மாலை 5.30 மணி - தமிழ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பும் நடைபெறும். இடம்: சிட்னி ஸ்ரீ துர்கா தேவி அரங்கம்
07 - 02 - 2026 Sat: சிவம் நடனப் பாடசாலை பெருமையுடன் சம்ஹிதாவை வழங்குகிறது. இடம்: பிரையன் பிரவுன் தியேட்டர், பாங்க்ஸ்டவுன், NSW 2200
நேரம்: மாலை 6 மணி
20 - 02 - 2026 Fri: சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் திருவிழா ஆரம்பம்
21 - 02 - 2026 Sat: சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் கொடியேற்றம்
28 - 02 - 2026 Sat: சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் சப்பரத் திருவிழா
01 - 03 - 2026 Sun: சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழா
02 - 03 - 2026 Mon: சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் மாசி மக தீர்த்தத் திருவிழா
07 - 03 - 2026 Sat: அபயகரம் வழங்கும் 34வது ஆண்டு நிதிசேகரிப்பு விழா
at 6 PM Bryan Brown Theatre, Bankstown NSW 2200
இலங்கைச் செய்திகள்
யாழில் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்த தேசிய சமாதானப் பேரவை கலந்துரையாடல்
யாழ். சுழிபுரத்தில் உள்ள இராணுவ முகாமில் இருந்து வெளியேறிய இராணுவம்: பண்டத்தரிப்பு முகாமும் அகற்ற நடவடிக்கை!
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் கண்டறிதலுக்காக 12 கோல்போஸ்கோப் இயந்திரங்கள் 12 மாவட்டங்களுக்கு விநியோகம்
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வனப்பகுதியாக 'நீல்கல' உத்தியோகபூர்வமாக பிரகடனம் -அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
2026 யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு: யாழ்ப்பாண பல்கலைக்கழகம் – இந்தியாவின் சுரானா & சுரானா சட்ட நிறுவன இணைப்பு
யாழில் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்த தேசிய சமாதானப் பேரவை கலந்துரையாடல்
Published By: Vishnu
23 Jan, 2026 | 04:44 AM
தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் வியாழக்கிழமை (22) மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
உலகச் செய்திகள்
அமெரிக்க கடற்படைகள் ஈரானை நோக்கி நகர்த்தப்படுவதால் மத்திய கிழக்கில் பதற்றம்: ஈரான் அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை
காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் 3 ஊடகவியலாளர்கள் உட்பட 11 பேர் பலி
ஓய்வு பெற்றார் நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்
கிரீன்லாந்து விவகாரம்: ஐரோப்பிய நாடுகள் மீதான வரி அச்சுறுத்தலைத் திரும்பப் பெற்றார் ட்ரம்ப்
ஈராக்கை விட்டு முழுமையாக வெளியேறியது அமெரிக்க படை! ; சதாம் ஹுசைன் ஆட்சியை கவிழ்ப்பதற்காக சென்ற படைகள் சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேற்றம்!
அமெரிக்க கடற்படைகள் ஈரானை நோக்கி நகர்த்தப்படுவதால் மத்திய கிழக்கில் பதற்றம்: ஈரான் அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை
24 Jan, 2026 | 01:54 PM
ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வை எதிர்த்து அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த போராட்டங்களை கட்டுப்படுத்த ஈரான் அரசு எடுத்த கடும் நடவடிக்கைகளின் காரணமாக வன்முறை வெடித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளில் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ள நிலையில், இது ஈரான்–அமெரிக்கா இடையிலான பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழ் இசை விழா - சனிக்கிழமை 31/01/2026 - மாலை 5.30 மணி
நடைபெறும் இடம் – சிட்னி ஸ்ரீ துர்கா தேவி அரங்கம்
நேரம்: மாலை 5:30 மணி
இலக்கியவெளி நடத்தும் “பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் அவர்களின் தமிழியல் சுவடுகளும் நூற்றாண்டு தின நிகழ்வும்” 07/02/2026
ஒருங்கிணைப்பு: பேராசிரியர் அ.சண்முகதாஸ்
நாள்: சனிக்கிழமை 07-02-2026
நேரம்:
இந்திய நேரம் - மாலை 6.30
இலங்கை நேரம் - மாலை 6.30
கனடா நேரம் - காலை 8.00
இலண்டன் நேரம் - பிற்பகல் 1:00
வழி: ZOOM
Join Zoom Meeting:
Meeting ID: 389 072 9245
Passcode: 12345
https://us02web.zoom.us/j/
சிறப்புப் பேச்சாளர்கள்:
பேராசிரியர் எம்.ஏ. நுஃமான்
இ.இராஜேஸ்கண்ணன்
சு.குணேஸ்வரன்
எம்.எம்.ஜெயசீலன்
சி.ரமேஷ்
மேலதிக விபரங்களுக்கு: அகில் - 001416-822-6316
சம்ஹிதா 07/02/2025
சிவம் நடனப் பாடசாலை பெருமையுடன் சம்ஹிதாவை வழங்குகிறது
இடம்: பிரையன் பிரவுன் தியேட்டர், பாங்க்ஸ்டவுன், NSW 2200நேரம்: மாலை 6 மணி

.jpeg)
.jpeg)


.jpg)
.jpeg)
.jpeg)


.png)
.png)




-page-001.jpg)
