தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

மவுண்ட் றூயிட் தமிழ் கல்வி நிலையத்தின் 35ம்ஆண்டின் கலைவிழா

 .

                      

மவுண்ட் றூயிட் தமிழ் கல்வி நிலையத்தின்  35ம் ஆண்டின் கலை விழா-2025 St Memorial Hall இல் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை பள்ளியின் அதிபர் திரு. தேவராசா சதீஸ்கரன், மற்றும் நிர்வாகத் தலைவர் திரு. ரோசாந் ரூபன் அருளப்பு  அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. முதலில் சம்பிரதாய நிகழ்வுகளான மங்கள விளக்கேற்றலினை பள்ளியின் அதிபர், திரு.தேவராசா சதீஸ்கரன் அவர்தம் பாரியார் திருமதி.கஜந்தி சதீஸ்கரன் அவர்களும், நிர்வாகத் தலைவர் திரு.ரோசாந் ரூபன் அருளப்பு அவர்தம் பாரியார் திருமதி.ரேணுகா ரோசாந் ரூபன் அவர்களும் அவர்களும், ஆசிரியர் திருமதி. பாமரதி மகேஸ்வரமூர்த்தி, பிரதம விருந்தினரான பள்ளியின் முன்னாள் செயலாளரும் பொருளாளருமான திரு.நோயல் ரொபின்சன், அவர்தம் பாரியார் திருமதி .லெனிட் ரொபின்சன், மற்றும் சிறப்பு விருந்தினர்களான சட்டத்துறை நிபுணரும், Western Sydney பல்கலைக்கழகத்தில் கல்வியாளருமான திருமதி. துர்க்கா ஓவன், councillor for Cumberland city council  திரு .சுஜன் செல்வேந்திரன், ஈஸ்ட்வுட் பள்ளியின் முதல்வர் திரு. பிரபாகர் தியாகராஜா ஆகியோர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளிக்கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து, அவுதிரேலியா கீதம் ஆகியன இசைக்கப்பட்டது. 


அடுத்து நாம் வாழும் நாட்டின் பூர்வீக மக்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு தொடர்ந்து தாயக விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களையும், போராட்டத்தின்பால், உயிர்நீத்த பொதுமக்களையும், நாட்டுப்பற்றாளர்களையும் மாமனிதர்களையும் தமிழர் நிலம், மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றை பாதுகாப்பதற்காக ஈகைச்சாவடைந்த அனைத்து தமிழ் உறவுகளையும் நினைவு கூர்ந்து 1 நிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து பள்ளியின் 9ம், 10ம், 11ம் வகுப்பு மாணவர்களால் வரவேற்பு நடனமும். நிர்வாக உறுப்பினர் திருமதி.அனுசா பிரஜீவ் அவர்களால் வரவேற்புரையும் வழங்கப்பட்டது.


திருமந்திரத்தைப் படிப்போம் திருமூலரை நினைப்போம் !

 .

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

                மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
                  மெல்பேண் ..... அவுஸ்திரேலியா

 


   பழமைக்குப் பழமையாய் புதுமைக்குப் புதுமையாய் மூவாயிரம் ஆண்டு வரலாற்றைக் கொண்டது எங்கள் தமிழ் மொழி. இலக்கணத்தை , இலக்கியத்தை , இசையை , நாடகத்தை , சமயத்தை , தத்து வத்தை , அரசியலை , அறவியலை , அறிவியலை - ஆழமாய் , அகலமாய் , நுண்மாண் நுழை புலத் துடன் கொண்டு விளங்கும் பெருமை மிக்க ஒரே மொழி தமிழ் எனபதை மறுத்து விட முடியாது. தமிழ் மொழியில் காணப்படும் ஒவ்வொரு நூல்களுமே - உயரிய பண்பாட்டை , வாழும் வாழ்வியல் முறை களை- பக்குவமாய் பகர்ந்து நிற்பதுதான் மிகவும் உன்னதமாகும். அந்தவகையில் மூவாயிரம் பாடல் களைக் கொண்டதாய் முத்திரை பதித்து நிற்பதுதான் " திருமந்திரம் " ஆகும்.

  இந்தத் திருமந்திரம் தமிழுக்குக் கிடைத்த பெரும் பொக்கிஷமாகும். இதனைத் தத்துவ நூல் என்பதா,   சமய நூல் என்பதாமருத்துவ நூல் , என்பதா அறிவியல் நூல் என்பதா அல்லது புதுமைக் கருத்துக் களை உரத்துச் சொல்லும் புரட்சி நூல் என்பதா ! இப்படிப் பல நிலையில் பன்முகங் கொண்டதாக இத் திருநூல் அமைந்திருக்கிறது என்றுதான் எண்ணிட வைக்கிறது. அந்த அளவுக்கு தமிழ்ப்  உலகில் திரு மந்திரம் தனித்துவமான ஒரு நூலாக மிளிர்ந்து நிற்கிறது என்பதை மறுத்துரைத்துவிடல் இயலாது.

  திருமந்திரத்தை எமக்களித்த அந்தத் திருவருளாளரைப் பற்றிய செய்தி பெரிய புராணத்தில் சேக்கி ழார் பெருமானால் எடுத்துச் சொல்லப்படுகிறது. திருத்தொண்டர் தொகையினைப் பாடிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவரை " நம்பிரான் " என்று உயர் நிலைப்படுத்தியே அறிமுகம் செய்கிறார் என்பது நோக்க த்தகது. சம்பந்தப் பெருமானை " எம்பிரான் " என்றவர் திருமூலரை " நம்பிரான் " என்று சுட்டுவது மன மிருத்த வேண்டிய கருத்தாகும்.

 திருமூலர் என்பவர் யார் ? அவரின் ஆதி என்ன ? அவரின் மூலந்தான் என்ன ? என்பது பற்றிக் கதைகள் பல இருக்கின்றன. வள்ளுவரைப் பற்றியும் இப்படிப் பல கதைகள் இருக்கின்றன. இங்கு கதைகளைக் கவனத்தில் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதே பொருத்தமாகும். அவர்களால் மக்களுக்கு வழங் கப்பட்ட கருவூலமான நூலே முக்கியமானது என்பதை கவனத்தில் எடுப்பதே சாலச் சிறந்ததாகும்.

    
 " என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
  தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே "

துர்காதேவி தேவஸ்தானத்தில் வராகி அம்மனுக்கு லட்ஷர்ச்சனை

 .



  • The Sri Durga Devi Devasthanam is arranging the Laksharchanai to VARAHI AMMAN  
    this Sunday 9th November 2025 from 7:30am onwards.
  • The Laksharchanai is particularly performed for the sake of washing away one's sins and afflictions, for bringing peace, prosperity and happiness along with family togetherness.
  • On this special day, more than 100,000 Archana will be offered our newly Prana Pratisshta Varahi Amman for the welfare and prosperous life of all devotees.
  • We are kindly inviting you to participate by submitting your Name & Nakshatra.
  • Let us unite in prayer to our beloved Varahi Amman for a safe, prosperous and healthy future for everyone.

Sydney Sri Durga Devi Devasthanam

21 Rose Crescent, Regents park, NSW -2143 Ph: (02) 9644 6682 , 04502 09724
https://www.sydneydurgatemple.org/    sydneydurga@gmail.com
Find us at: www.facebook.com/sydneydurga

  • Please forward this email to Your Friends & Relatives  who might be interested.

புரட்சியாளனுக்கு உயிர் முதன்மையன்று! - -சங்கர சுப்பிரமணியன்.

 .


ஒரு கருத்தை மக்களிடம் யார் வேண்டுமானாலும் விதைக்கலாம். நல்ல கருத்தென்றல் முளைக்கும். நல்ல கருத்தல்ல என்றால் என்னதான் உரமிட்டு நீர் பாய்ச்சினாலும் முளைக்காது. முளைக்காது போனாலும் பரவாயில்லை. கருகிவிடும். அதுபோல் எழுத்தாளர்களின் எழுத்தும். இதில் பொழுதுபோக்குக்காக எழுதுபவர்களின் கருத்துக்களை கணக்கிட வேண்டியதில்லை.

ஆனால் புரட்சியாளர்களின் கருத்துக்கள் அப்படிப்பட்டதல்ல. முதலில் புரட்சியாளர்கள் எப்படிப்பட்ட எழுத்தாளர்கள் என்பதைப் பார்க்கவேண்டும். புரட்சிகரமான கருத்துக்களை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் விதைத்துச் செல்லலாம்.

இப்படி விதைப்பவர்கள் தன் மனதில் தோன்றிய புரட்சிகரமான கருத்துக்களை பதிவிடுவார்கள். அவ்வளவுதான் அவர்கள் வேலை. அது மக்களிடம் போய்ச் சேர்கிறதா? இல்லையா என்று பார்ப்பது அவர்கள் வேலையில்லை. எழுத்தாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கருத்துத்தான் தோன்றும் என்று குறிப்பிட முடியாது. காதல், வீரம், நகைச்சுவை, கருணை சம்பந்தப்பட் கருத்துக்கள் தோன்றலாம்.

அவ்வாறு தோன்றுகின்ற கருத்துக்களுக்கு ஏற்ப அவ்வப்போது படைப்புகளைத் தந்து செல்வான். அப்படித்தான் புரட்சிகரமான கருத்துக்கள் தோன்றும்போது அதைப் பதிவிடுவார்கள். பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று. அவர்களை புரட்சியாளர்கள் என்று சொல்ல முடியாது.

ஆனால் பன்முகத் தன்மை கொண்ட புரட்சி எழுத்தாளர்களில் புரட்சிக்கென்றே வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள் மற்றும் இருந்திருக்கிறார்கள். முண்டாசுக் கவிஞர் பாரதியார் அவ்வாறு இருந்தார். அவர் பக்தி ததும்பவும் எழுதினார் வீரத்துக்கும் எழுதினார். காதலுக்கும் எழுதினார் கருணைக்காகவும் எழுதினார். அதேவேளை புரட்சிக்காகவும் எழுதினார்.

பாரதியார் பருவத்தே பயிர் செய் என்பதற்கிணங்க இந்திய விடுதலைப் போராட்ட விடுதலை வேட்கையை தூண்டும் வண்ணமும் எழுதினார். அதனால் ஏற்படும் பின் விலைவுகளைப்பற்றி எல்லாம் எண்ணிப்பார்க்காமல் எழுதினார். பாரதி வருமானத்துக்காகவோ புகழுக்காகவோ எழுதவில்லை என்பது ஊரறிந்த உண்மை.

அவர் வருமானத்துக்காகவோ புகழுக்காகவோ எழுதியிருந்தால் தான் எழுதியவை அனைத்தையும் நூலாக்கியிருப்பார். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. அதற்கு சான்றாக அவர் எழுதிய பற்பல கெயெழுத்துப் படைப்புக்கள் இன்னும் அச்சேறாமலேயே இருக்கிறது. இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் தனக்கு ஏன் வம்பு என்று அந்தநேரத்தில் அமைதி காத்திருக்கலாம்.

புரட்சிகரமான கருத்துக்களை அதனால் தனக்கு பாதிப்பு ஏற்படாதபோது பாதுகாப்பான இடத்தில் இருந்து பதறாமல் எழுதலாம். ஆனால் பாரதி தன் குடும்பத்தைக் கூட காப்பாற்றாமல் மனைவியை பக்கத்து வீட்டில் அரிசியைக் கடனாகப் பெறும் சூழ்நிலையில் விட்ட நிலையில் புரட்சிக் கருத்துக்களை விடாது எழுதி வந்தார்.

அதனால் ஓரிடம் விட்டு ஓரிடம் தலைமறைவாக ஓடி ஒளிந்தபடியே வாழ்ந்து வந்தார். அவர் உயிருக்கு பயந்து ஓடி ஒளியவில்லை. அடிமை இந்தியாவுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் இருந்ததால் தலைமறைவாகவும் இருக்க தேர்ந்தது.

சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்                    

26-10-2025 Sun: ஈழத் தமிழர் கழகம் கலைக்கதம்பம் 2025 நிகழ்வு 6.00 PM at Redgum Centre, Wentworthville

29-11- 2025  Sat: Australian Medical Aid Foundation proudly presents முத்தமிழ் மாலை

30-11-2025  Sunமாத்தளைசோமுவின்  100 சிறுகதைகள் நூல் வெளியீடு   ANTHONY CATHOLIC CHURCH-TOONGABBIE-4-00 pm to 6-30 pm.

அவன்தான் மனிதன் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 .

ஏனைய நட்சத்திர நடிகர்களுக்கு இல்லாத ஒரு பெருமை சிவாஜிக்கு உண்டு. அதுதான் அவர் நடித்த முதலாவது படமான பராசக்தி, நூறாவது படமான நவராத்திரி, நூற்று இருபத்தைந்தாவது படமான உயர்ந்த மனிதன், நூற்று ஐம்பதாவது படமான சவாலே சமாளி என்பன வெற்றிப் படங்களாகவே அமைந்தன. அந்த வரிசையில் அவரின் நூற்றுஎழுபத்தைந்தாவது படமான அவன்தான் மனிதன் படமும் அவரின் வெற்றிப் பட வரிசையில் இணைந்தது. 



ஆனால் ஆரம்பத்தில் இப் படத்தின் கதை சிவாஜியினால் நிராகரிக்கப்பட்டு , பின்னர் அவர் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம். தமிழில் பிரபல கதாசிரியராக விளங்கியவர் ஜி . பாலசுப்ரமணியம். இவரின் கதையில் உருவான பாலும் பழமும், ஆலய மணி, அன்னை இல்லம் , பணமா பாசமா, தங்கச் சுரங்கம், முகராசி , போன்ற படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படங்களாகின. இந்த பாலசுப்ரமணியம் ஒரு சந்தர்ப்பத்தில் சிவாஜியிடம் ஒரு கதையை கூறினார். 



ஒரு கோடிஸ்வரன் சிங்கப்பூரில் காதலித்து திருமணம் செய்கிறான். ஒரு விபத்தில் அவன் மனைவி இறக்க , அந்த அதிர்ச்சியில் இருந்து மீளும் முன்பே அவன் குழந்தையும் இறக்கிறது. மீண்டும் இந்தியா திரும்பி தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தும் அவன் வாழ்வில் மற்றுமொரு பெண் குறுக்கிடுகிறாள் . ஆனால் அவன் தன் காதலை சொல்லும் முன்பே அவனின் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவனை அவள் மணக்கிறாள். தொடர்ந்து தீப்பெட்டி தொழிற்சாலையில் இடம் பெறும் தீ விபத்தினால் ஓட்டாண்டி ஆகிறான் கோடீஸ்வரன். தொழிற்சாலை ஒடிந்து போகிறது. கோடிஸ்வரன் எல்லாவற்றையும் இழந்து குடிசைக்கு குடி பெயருகிறான். ஆனாலும் அவனின் ஈகை குணம் அவனை விட்டு விலகுவதில்லை. இதனால் மேலும் மேலும் துன்பத்துக்கு உள்ளாகி அவன் உயிர் பறி போகிறது. 

மாத்தளை சோமுவின் நூல் வெளியீட்டு விழா 30.11.2025

 .



எது விரதம்?

 .




சிவஞானச்சுடர் பல்மருத்துவகலாநிதி

பாரதி இளமுருகனார்

(வாழ்நாள் சாதனையாளர்)

 

 

வண்ணமயில் ஊர்தியிலே வடிவழகன் முருகனவன்

கண்ணனைய வள்ளியொடு கரங்கோத்துத் திருப்பொலியப்

பண்சுமந்த திருமுறையைப் பன்னிரெண்டு செவிகளினால்

விண்ணிருந்து செவிமடுக்கும் வியனுருவைத் தொழுவோமே!

 

சண்முககவ சந்தன்னைச் சந்தமிகு திருப்புகழை 

எண்ணமெலாம் சரவணனை எண்ணிமெய்யு ருகிநிற்ப 

மண்ணில்நல் லவண்ணமவன் வாழவைப்பான் எனநம்பிக் 

கண்ணுதலான் அருள்வடிவின் காதுமாந்த இசைத்திடுவீர்!

 

செம்மைவாழ்வு வாழாது தெரிந்திருந்தும் பலவழியில்

தீங்கியற்றி வருவோரும் செய்பாவம் தீர்த்திடவா

அம்மையப் பரோடவரின் அருட்சத்;தி வெளிப்பாட்டை 

ஆசரித்துப் பத்தரைப்போல் அனுசரிப்பர் விரதங்கள்?. 

 

முத்தமிழ் மாலை 29/11/2025

 


பிரசாதத்துக்கு நன்றி! - -சங்கர சுப்பிரமணியன்.

 .

தமிழ் இணைத்தது என்று
தலை நிமிர்ந்து இருந்தேன்
அழையா விருந்தாளியாய்
எனை ஆக்கியதேன் தமிழே

தலை மறைவாய் நானில்லை
நிமிர்ந்த பார்வையுடன் நான்
நேரில் நின்றிருந்த போதும்
காணாமல் இருந்ததேன் தமிழே

அருகில் வந்து கை தொழுதேன்
சருகண்டி என்பது திருப்பதியில்
அங்கே அவர் சிலையாக நிற்பார்
முன் நிற்பவர் அப்படி சொல்வார்

இங்கு தமிழே நீ அமைதியானாய்
விரும்பி உன்னை வந்து பார்த்தும்
பராமுகமாய் நீ  ஏன் இருந்தாயோ
குற்றம் தமிழே உன்னிடம் இல்லை

எதிர்பார்த்து நின்றது என் குற்றமே
கோவிலுக்கு வந்தவன் கும்பிடவே
சாமி வந்து பேசுமென்றால் எப்படி
பிரசாதம் தந்ததற்கு மிக்க நன்றி!

-சங்கர சுப்பிரமணியன்.

தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் 15ம் ஆண்டில்

 .

15ம் ஆண்டில் காலடி வைத்து சேவைகள் புரியும் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் தொடர்ந்து பணிபுரிய தமிழ்முரசு வாழ்த்துகிறது. 



கற்பனை உணர்வு அற்புதம் மனிதர்க்கு !

 .



மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
     மெல்பேண் …. அவுஸ்திரேலியா



உள்ள மென்பது உன்னத மாகும்
உள்ள மென்பது ஆலய  மாகும்
உள்ள மென்பது உயிர்ப்பிட மாகும்

உள்ள மென்பதை ஒளியுடை யாக்கு 

உள்ள மிருந்தே கள்ளம் வரும்
உள்ள மிருந்தே உண்மை வரும்
உள்ள மிருந்தே தெளிவும் வரும்
உள்ள மிருந்தே யாவும் வரும்  

கற்பனை யுள்ளம் கதையினைப் பகரும்
கற்பனை  யுள்ளம் கவிபல சொல்லும்
கற்பனை யுள்ளம் களியினைக் கொள்ளும்
கற்பனை யுள்ளம் கண்டிடும் கடவுளை

கற்சிலை கற்பனை கவிதையும் கற்பனை
நாடகம் கற்பனை நாட்டியம் கற்பனை
உரையிலும் உணர்விலும் கற்பனை கலந்தால்
உண்மைப் பொருளைக் காண்பது கடினமே

அருவமே உருவம் ஆகியே இருக்கு
அதுவே கந்தனின் தோற்றமாய் தெரியுது
கற்பனை இங்கே கருப்பொரு ளானது
கநதனின் கற்பனை கடவுளாய் மலர்ந்தது

புராணம் கற்பனை புழுகு மூட்டையே
என்றே சிலரும் இயம்பியே திரிகிறார்
கற்பனை யூடாய் தெரியும் கருவை
கருத்தில் கொண்டால் தத்துவம் விளங்கும்

கற்பனைக் கெட்டா ஒன்றே பரம்பொருள்
கற்பனைக் கடந்த ஜோதியே பரம்பொருள்
ஆதியு மில்லா அந்தமு மில்லா
அனாதியே அந்த ஆனந்தப் பரம்பொருள்

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியும்
கடவுளைப் பற்றிய அடியார் கற்பனை
கருத்தில் இருத்தினால் கடவுளே தெரிவார்

திருமுறைப் பாடல்கள் அடியார் கற்பனை
திருந்தா மனத்தைத் திருத்திடும் கற்பனை
உண்மையை உயர்வை உணர்த்திடும் கற்பனை
உளமதைத் தூய்மை ஆக்கிடும் கற்பனை 

கற்பனை உணர்வு அற்புதம் மனிதர்க்கு 
பிறந்தவர் அனைவர்க்கும் கற்பனை உரித்தே
தப்பிதக் கற்பினை தவறினைக் காட்டும்
தரமிகு கற்பனை உயர்வினைச் சேர்க்கும் ! 

தமிழ் மொழி /யாப்பு இலக்கண வகுப்புகள் (29/10/2025 முதல்)