தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

பேராசிரியர் இளையதம்பி அம்பிகைராஜாவிற்கு Officer of the Order of Australia (AO) எனும் ஆஸ்திரேலியாவின் உயரிய தேசிய விருது Professor Eliathamby Ambikairajah honoured as an Officer of the Order of Australia (AO)

 


UNSW பல்கலைக்கழகத்தின் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் துறையின் முன்னாள் துணைவேந்தரும், மின்சாரம் மற்றும்   தொலைத்தொடர்புப் பொறியியல் பீடத்தின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் இளையதம்பி அம்பிகைராஜா, 2026-ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலிய தின கௌரவப் பட்டியலில் Officer of the Order of Australia (AO) என்னும் ஆஸ்திரேலியாவின் உயரிய தேசிய விருதைப் பெற்றுள்ளார். இவர் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி, மின்சாரப் பொறியியல், தொழில்நுட்பப் புத்தாக்கம் மற்றும் ஆஸ்திரேலியாவின் இலங்கைச் சமூகத்திற்கு அவர் ஆற்றிய சிறப்பான சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.  Order of Australiaவின் நான்கு முக்கிய விருது பிரிவுகளில், Officer of the Order of Australia (AO) என்பது நாட்டின் மிக உயரிய கௌரவமாகும்.

 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர், UNSW பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட தலைமைப் பதவிகளை வகித்த முதல் இலங்கையை சேர்ந்த முதல் கல்வியலாளர் ஆவார். அவர் கல்வித்துறைக்கு ஆற்றிய வாழ்நாள் பணிக்காக இந்த உயரிய விருது வழங்கப்பட்டிருப்பது, அவரது அர்ப்பணிப்புக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும். இது ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கைச் சமூகத்திற்கு ஒரு பெருமைமிக்க தருணமாகும்.

 

மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டத்தைப் பெற்ற இவர், இலங்கையில் CISIR நிறுவனத்தில் அறிவியல் ஆராய்ச்சியாளராக தனது பணியைத் தொடங்கினார். நெதர்லாந்தில் மதிப்புமிக்க புலமைப்பரிசிலை (Philips Research Scholarship) வென்ற முதல் இலங்கையர் இவராவார். அங்கு இவரின் ஆராய்ச்சிகள் கார் வானொலிகளில் நவீன தானியங்கி ட்யூனிங் (Automatic Radio Tuning) கண்டுபிடிப்பிற்கு பங்களித்தது. ஐக்கிய இராச்சியத்தின் கீல் (Keele) பல்கலைக்கழகத்தில் Signal Processing துறையில் முனைவர் (PhD) பட்டம் பெற்றார். பின்னர் அயர்லாந்தின் அத்லோன் தொழில்நுட்பக் கல்லூரியில் (Athlone Institute of Technology) விரிவுரையாளராகச் சேர்ந்து, துறைத் தலைவர் மற்றும் பொறியியல் பீடாதிபதி என மிக விரைவாக உயர்ந்தார். அயர்லாந்தில் பேராசிரியர் அம்பிகைராஜா தான் முதல் முறையாக வெளிநாட்டு கல்வியாளராகவும், தலைமைப் பொறுப்பில் பீடாதிபதியாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துவித நிலைதன்னை ஆனைமுகா தந்தருளாய்!

 













சிவனவன் திருநிறை சீர்உருக் கொண்டவா!

திருவடி தொழுதிடச் சிறியனேன் சிந்தையில்

குவலயங் காப்பவா! குஞ்சர முகத்தவா!

குருபரா நல்லதோர் மனநிலை தந்திடாய்!

 

வேழ முகத்தவா!தாள்தொழு தரற்றிடும்

ஏழையின் ஓலமுன் செவிகளில் ஒலிக்குமா?

வாழ்வதா சாவதா வஞ்சனை யுலகினில்

வல்வினை கழைவையோ? மலரடி சேர்ப்பையோ?

 

கந்தவேள் அழைத்ததும் கடிதினற் சென்றுநீ

காதலுக்(கு) அருளினை! கருணையால் அவ்வையின்

செந்தமிழ்த் தேறலை மாந்தி மகிழ்ந்தனை!

சிறியனேன் புலம்பலுன் செவியிடஞ் சேருமோ?

கடவுளை நம்பினால் கைவிட மாட்டார் !



 












மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 



தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்

காணும் இடமெல்லாம்  கடவுள் இருப்பார் 
ஆணவும் உள்ளார் காணவும் மாட்டா
அரும் பொருளாகி  இருக்கிறார் ஆண்டவன்

இருளிலும் இருப்பார் ஒளியிலும் இருப்பார்

இல்லம் இருக்கும் விளக்கிலும் இருப்பார்
இரும்பிலும் இருப்பார் செம்பிலும் இருப்பார்
கரும்பினில் சுவையாய் யாகியும் இருப்பார்  

அருமறை அனைத்திலும் ஆண்டவன் இருப்பார்

ஆதியும் அந்தமும் இல்லார் ஆண்டவன்
ஓசையின் உள்ளே  ஆண்டவன் இருப்பார்
ஓவியம் காவியம் அனைத்திலும் இருப்பார்  

நோயாய் வருவார் வைத்தியம் செய்வார் 

மருந்தாய் அமைந்து சுகத்தைக் கொடுப்பார்
விருந்தாய் இருப்பார் வேற்றுமை காட்டார்
விண்ணும் மண்ணும் நிறைவார் இறைவன்   

கவிதை..."பாவை நீயும் யாரடி?"... மெல்போர்ன் அறவேந்தன்

 













நன்றி முத்தம் (கன்பரா யோகன்)

நான் நடந்து கொண்டிருந்த தெரு,  நில மட்டத்திலிருந்து  ஒரு நாலைந்து மீற்றர் உயரத்திலிருந்தது. அங்குள்ள வீடுகளையும், கட்டடங்களையும் அவற்றின் கூரை உச்சிகளையும் ஒரு பறவையைப் போல என்னால் பார்க்க முடிந்தது. பெரும்பாலும் பழைய வீடுகள், அவற்றுள் சில  பலகை வீடுகள். தெரு மட்டத்திலிருந்து வீட்டு முற்றங்களுக்கு இறங்க  செங்குத்தான  படிகள் இருந்தன.   

காலை ஏழு  மணி. வெயில்  ஆறுமணிக்கே விழத் தொடங்கியிருந்த கோடை காலக் காற்றிலும் குளிர் இருந்தது. தூரத்தே அடர்த்தியான பைன்  மரக் கூம்புகள் கொண்ட மலைகள் மெல்லிய நீல பனிப் புகாரினூடே தெரிந்தன. பளிச்சென்ற வெய்யில் வந்து மலை விளிம்புகள் தெளிவாகத் தெரியும் வரை இந்தப் புகார் இருக்கும்

 அருகிலிருந்த கோப்பிக் கடை ஒரு நிமிட  நடை தூரத்திலிருப்பதை கைத்தொலைபேசியின் GPS காட்ட அந்த  பத்து  நிமிட நடை என்னை பீகா நகரின் சூப்பர் மார்க்கட் உள்ள தெரு  வரைக்கும் கொண்டு சென்றதுதெருவிலிருந்த சிறிய கடைகள் இன்னும் திறக்கவில்லை.

ஏழு மணிக்கே சூப்பர் மார்க்கட் கடைத் தொகுதியின் நுழைவாயில் தானியங்கிக் கதவு திறந்திருந்தாலும் உள்ளே இன்னும் பல கடைகள் பூட்டிக் கிடந்தனஒரேயொரு சுவர்களில்லாத திறந்த காலையுணவுக்கடையில் இரு சீனச் சிறுமிகள்  பிசியாக நின்றனர். அவர்களிடம் கேட்டபோது கோப்பி, தேநீர் விற்பதில்லையென்றனர். வெளியே ஒரு கடை உண்டு என்றாள் அவர்களில் ஒருத்தி.  

வெளிச்செல்லும் தானியங்கிக்  கதவினூடு வர இடப்புறத்தில்  நான் தேடி வந்த GPS காட்டிய கடை இருந்தது 

கடையுள்ளே ஐந்தாறு  வட்ட  மேசைகளும் சுற்றிவர அலுமீனியக் கதிரைகளும்  இருந்தன. வெயில் உள்ளேயும் வந்திருந்தது . நின்றபடி ஒருத்தி பேப்பர் படித்துக் கொண்டிருந்தாள். கவுண்டரில் நீல ஜம்பர் அணிந்த ஐம்பது வயது மதிக்கத் தக்க ஒருவனும் உள்ளே கோப்பி மெஷினில் கருப்பு உடையும் ஏப்ரனும் அணிந்த நாற்பது மதிக்கத்தக்க பெண்ணும் நின்றனர்.

எனது வழக்கமான கப்பசீனாவும் இரண்டு சுகரும் என்று சொன்னேன். அடுக்கப்பட்டிருந்த மூன்று ஸைஸ் பிளாஸ்டிக்  கப்புகளில் நடுத்தரமான ஒன்றைக் காட்டினேன்.  உள்ளிருந்த பெண் எடுத்துச் செல்லவா இல்லையா என்று கேட்டாள்மூடியில் துளை வைத்த டேக் எவே  கப்பில் அருந்துவது என் வழக்கம். அப்படியே எடுத்துச் செல்லவும் வசதி.டேக் எவே’  என்றேன்.

இதே நேரம் தானியங்கிக் கதவு திறக்க ஒரு மின்சார  மூன்று சில்லு ஸ்கூட்டரில் கட்டைக் காற்சட்டை  அணிந்த ஒருவன் உள்ளே நுழைந்தான். அவனுக்கு இடது கால் இல்லை. ஸ்கூட்டரில் அவனது வலது காலுக்கு அருகில் படுத்திருந்த படி வந்த கருப்பு நிற நாயொன்று ஸ்கூட்டர் நின்றதும் குதித்துக் கீழே இறங்கியது.

பதித்தவர் தடத்தில் பயணிக்கிறேன் பயணம் - 1…..

சங்கர சுப்பிரமணியன்.


காதலி… காதலி…
என் உயிர்க் காதலி
என் காதலி…என் காதலி

உன்னை நான் கண்டதும்
என்னை நீ வென்றாயே
நீ…வென்றாயே…என் காதலி

மண்ணில் நடக்கிறேன்
காலாய் இருக்கிறாய்
நீ காலாய் இருக்கிறாய்

விண்ணில் பறக்கிறேன்
நீ சிறகாய் இருக்கிறாய்
சிறகாய் இருக்கிறாய்

மண்ணில் நடக்கிறேன்
காலாய் இருக்கிறாய்
நீ காலாய் இருக்கிறாய்

விண்ணில் பறக்கிறேன்
நீ சிறகாய் இருக்கிறாய்
சிறகாய் இருக்கிறாய்

மண்ணில் நானும் நடந்தாலும்
விண்ணில் நானே பறந்தாலும்
நீ காலாய் இருந்து சிறகாய் இருந்தும்
என்னில் துணையாய் வருகின்றாய்
நீ என்னில் துணையாய் வருகின்றாய்

காதலி… காதலி…
என் உயிர்க் காதலி
என் காதலி…என் காதலி

வாழும் வாழ்விலே
வறுமை வந்தாலும்
கொடும் வறுமை வந்தாலும்

கண்ணப்பன் நிலையைக் கணக்கிடல் அரிது !

 











மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண்…. அவுஸ்திரேலியா 



சேக்கிழார் பெருமான் செப்பிய கதையில்
மாக்கதை யாக மனமதில் பதிவது
கண்ணினை அப்பிய கண்ணப்பன் கதையே 
எண்ணிட  எண்ணிட வியப்பாய் விரியுது 

நடக்குமா என்று கேட்டிட வைக்கும்
நம்பவே இயலா கண்ணப்பன் கதையே
படித்திடும் தோறும் பதறுதே நெஞ்சம்
கண்ணைப் பிடுங்கிட எண்ணிய காரியம்

வெட்டுக் குத்து ரத்தம் இறைச்சி
பார்த்துப் பழகிய வேடுவர் வாழ்க்கை
அந்த வாழ்க்கையை பற்றியே வாழ்ந்தவன்
பக்தி வலைக்குள் புகுந்தது வியப்பே

கொல்வதும் தின்பதும் கொண்டாடிக் களிப்பதும்
நல்லது என்றுமே நாளுமே வாழ்ந்தவர்
வாழ்ந்தவர் மரபில் வந்தவன் கண்ணப்பன்
எப்படி மாறினான் என்பதே அதிசயம்

மனிதநேயம் மறையவில்லை!(உண்மைக்கதை உருமாறியுள்ளது)


 -சங்கர சுப்பிரமணியன்.


ஒரு சிறுகிராமத்தில் வளர்ந்த நான் விமானத்தை உள்ளங்கை அளவில் மட்டுமே வானில் பார்த்திருந்தேன். என்றாவது ஒருநாள் இதுபோன்ற விமானத்தில் பயணிக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டது உண்டு. ஒவ்வொருவருக்கும் வாழ்நாளில் ஒருதடவையாவது எதையாவது சாதிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும்.

மருத்துவமனை ஒன்றில் செவிலியாக பணிபுரிந்த மார்கரெட்டுக்கு விமானத்தில்
முன்பகுதியில் இருக்கும் முதல் வகுப்பு இருக்கையில் அமர்ந்து பயணிக்க வேண்டும் என்று நெடுநாள் ஆசை. ஆனால் அந்த ஆசை நிறைவேறாமலே போனது. இப்போது பணியிலிருந்து ஓய்வுபெற்று வயதும் என்பத்துமூன்று ஆகிவிட்டது.

கால் முட்டில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டிருந்ததால் நெடுநாட்களாக நியூயார்க்கிலுள்ள மகளைபார்க்க முடியாமல் இருந்தாள். ஒருநாள் மகளைப் பார்க்க விமானத்தில் சென்று கொண்டிருந்தாள். அப்போது யாரும் எதிர்பார்க்க முடியாத அதிசயம் நடந்தது.

அந்த அதிசயம், அவள் பயணித்த அதே விமானத்தில் பயணித்த ஜோசப் என்ற இளைஞன் செய்த செயல்தான். அந்த செயல் விமானத்தில் பயணித்தவர்களை மட்டுமின்றி உலகில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து பாராட்டைப் பெற்றது.

அந்த விமானத்தின் பணிப்பெண்ணான ஏஞ்சலா, “நான் பணிபுரிந்த நூற்றுக் கணக்கான விமானங்களில் பணிப்பெண்ணாக எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறேன். அவர்களில் புகழ்பெற்ற கால்பந்து வீரர்கள், விளம்பர அழகிகள், ஹாலிவுட் நடிகர்கள் போன்ற எத்தனையோ பேரை கவனித்துக் கொள்ளும் சந்தர்ப்பமும் எனக்கு கிடைத்தது. ஆனால் இந்த விமானத்தில் நான் பெற்ற அனுபவம் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாகும். அதற்கு காரணம் ஜோசப்பின் செயல்தான்.” என்று வியப்போடு கூறினாள்.

மேலும் கழிவறைக்குப் பின்னால் வரிசையாக இருந்த இருக்கைகளில் ஒன்றில் ஜோசப்
அமர்ந்திருந்தான். அழைப்புமணியை அழுத்தவோ விமானப் பணிப்பெண்களை  அழைக்கவோ இல்லை. எவ்வித சிரமத்தையும் கொடுக்காமல் எந்த அசௌகரியத்தையும் காட்டிக் கொள்ளாமல் பயணம் முடியும்வரை அமைதியாகவே இருந்தான் என்றாள்.

தமிழன் அன்று சீனாவில் வணிகம்! தமிழன் இன்று சீனாவில் பயணம்!! தொடர்- 12…..சங்கர சுப்பிரமணியன்.

இதில் கொடுமை என்னவென்றால் தமிழை வைத்துப் பிழைப்பவர்களும் தமிழால் பெயரும் புகழும் அடைபவர்களும்கூட தமிழ்பற்றி மூச்சுவிடாது மௌனம் சாதிப்பதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போது சங்கப்பலகையின் சூட்சுமத்தை சொல்கிறேன். தமிழரின் அறிவியல் திறன் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்ற அநுமானத்தில் சொல்கிறேன்.


சங்கப்பலகையின் அடியில் பலகையை நீருக்குள் மூழ்கச் செய்யவும் திரும்பவும் மேலெழச் செய்யவும் விசையொன்று கண்ணுக்கு தெரியாதபடி இணைக்கப் பட்டிருந்திருக்கும். இந்த விசையா ஒரு நூலின் தகுதியை தீர்மானிக்கிறது? அது எப்படி விசை தகுதியைத் தீர்மானிக்கும்? விசை தீர் மானிக்காது விசையை
இயக்குபவர்தான் தீர்மானிப்பார்.

எங்கோ இருந்து கொண்டு ரிமோட் மூலம் திறப்புவிழா

நடத்துவதில்லையா? அதுபோலத்தான் இதுவும். அது சரிவருமா? அவர் நேர்மையுடையவராக இருக்க வேண்டுமே. அவர் என்றால் அவர் மட்டுமே அல்ல. ஒரு புலவர்கள் குழாம் இருக்கும். அவர்களில் தலைமைப் புலவரிடம் விசை இருக்கும். இந்த புலவர்களின் குழாமிடம் முன்னதாகவே சங்கப்பலகையில் வைக்கப்படும் நூல்கள் கொடுக்கப் பட்டுருக்கும்.

அந்த நூலைப்படித்த புலவர்கள் கருத்துக்களை தெரிவிப்பார்கள். அந்த கருத்துக்களின் பெரும்பான்மையை வைத்து தகுதி நிர்ணயிக்கப்படும். இந்த முடிவை வெளியிடமாட்டார்கள். சங்கப்பலகையின் மூலம் அன்றுதான் முடிவு வெளிவரும். சங்கப்பலகையை இயக்கும் விசையை எங்கோ இருந்து கொண்டு தலைமைப் புலவர் இயக்குவார். இது வெறும் கற்பனை என்றாலும் ஏற்கும்படி உள்ளதா?

இல்லாவிடில் சங்கப்பலகை எப்படி தானாகவே முடிவெடுக்கும்? இதைத்தான் இறையனார் குறளில் எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு என்று இயம்பியிருக்கிறார். அறிவை எந்த தளத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம். தளத்தில் வேறுபாடு கண்டால் அது அறிவல்ல.
வள்ளுவர் கூற்றுப்படி நுண்பொருள் அறிவதன்றோ அறிவு.

ஹுட்டாங்கை கடந்து வந்தோம். மழை பெய்வதும் விடுவதுமாக இருந்தது. நாங்களும் குடையை திறந்து மூடியபடியே இருந்தோம். நீண்ட வரிசை இருந்தது. ஒருவழியாக சோதனையிடும் இடத்துக்கு வந்தோம். சோதனை செய்யும் இடத்தில் பாஸ்போர்ட் மட்டுமின்றி ஆட்களையும் சோதனைக்கு உள்ளாக்கினார்கள். ஒரு இடத்தில் எனக்கு நடந்த சோதனை விசித்திரமாக இருந்தது.

சோதனை செய்பவர் என்னிடம் பதிவு செய்ததற்குண்டான சான்றைக் கேட்டார். டியானன்மன் ஸ்கொயருக்கும் ஃபோர்பிடன் சிட்டிக்கும் அனுமதி என்னவோ இலவசம் ஆனால் முன்பதிவின்றி வந்தால் உள்ளே செல்லமுடியாது. அடுத்ததாக அவர் என்னைக் கேட்டதுதான் தூக்கிவாரிப் போட்டது. வீசா வீசா என்று கேட்டுக் கொண்டிருந்தார். ரொம்பவும் சோதனையை கடுமையாக செய்கிறார்களாம்.

சித்தி - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 

சித்தி என்பவள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் இருப்பாள், மூத்த தாரத்தின் குழந்தைகளை கொடுமைப் படுத்துவாள் என்ற கருத்தை மறுதலிப்பது போல் பிரபல நாவலாசிரியை வை .மு . கோதைநாயகி பல ஆண்டுகளுக்கு முன் ஒரு கதையை எழுதியிருந்தார். சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆண்களின் கைகளில் இருந்த எழுத்தாட்சியை தன் பக்கம் திருப்பிக் கொண்டவர் இந்த கோதைநாயகி. தமிழின் முதல் பெண் பத்திரிகை ஆசிரியை என்ற பெருமையும் இவரையே சேரும். இவர் எழுதிய கதை 1966ம் வருடம் சித்தி என்ற பேரில் படமானது. 



குடும்பப் படங்களுக்கு கதை வசனம் எழுதி இயக்குவதில் வெற்றி

கண்ட கே .எஸ் . கோபாலகிருஷ்ணன் சித்தி படத்தை உருவாக்கியிருந்தார். ஏற்கனவே மங்கையர் திலகம் படத்தில் சித்தியாக நடித்து ரசிகர்களின் மனதை கட்டிப் போட்ட பத்மினி இந்தப் படத்திலும் சித்தியாக பாத்திரம் ஏற்றார். அப்படி சொல்வதை விட பாத்திரமாகவே மாறி விட்டார் எனலாம். இது படத்துக்கு பெரிய பலமாக அமைந்தது. தன்னைக் கண்டு நடுங்கும் குழந்தைகளிடம் அன்பு காட்டுவது , மாமியார் மனதை மாற்றுவது, கணவனை அனுசரித்து போவது என்று காட்சிக்கு காட்சி தன் நடிப்பு திறனை நிருபித்துக் கொண்டிருந்தார் பதமினி. போதாக் குறைக்கு இளமையாகவும் காட்சியளிக்கிறார்!



இவரின் கணவராக வருபவர் எம் .ஆர் . ராதா. நடிப்பில் புதுமை ஏதும் இல்லாவிட்டாலும் ரசிக்கும் படி நடித்திருந்தார். ஆரம்பத்தில் ஏனோதானோ என்று காட்டப்பட்ட நாகேஷின் பாத்திரம் பின்னர் அழுத்தமாக பதியப்படுகிறது. நாகேஷ் நடிப்பு, ஆட்டம், பாட்டம் எல்லாம் பிரமாதம். ஜெமினிக்கு அளவான காட்சிகள். அளவான நடிப்பு. படத்தில் காதல் காட்சிக்கு குறை வைக்க கூடாது என்பதற்காக முத்துராமன், விஜய நிர்மலா டூயட்டும் உண்டு. படத்தில் பாட்டியாக வரும் சுந்தரிபாயின் நடிப்புக்கு சபாஷ் போடலாம். இவர்களுடன் வி . கே . ராமசாமி, குலதெய்வம் ராஜகோபால், சாமிக்கண்ணு, விஜயஸ்ரீ, சதன் ஆகியோரும் நடித்தனர். 

சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்                    

31 - 01 - 2026 Satதமிழ் இசை விழா  - மாலை 5.30 மணி - தமிழ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பும்  நடைபெறும்.  இடம்: சிட்னி ஸ்ரீ துர்கா தேவி அரங்கம்

07 - 02 - 2026 Sat: சிவம் நடனப் பாடசாலை பெருமையுடன் சம்ஹிதாவை வழங்குகிறது.  இடம்: பிரையன் பிரவுன் தியேட்டர், பாங்க்ஸ்டவுன், NSW 2200
நேரம்: மாலை 6 மணி

20 - 02 - 2026 Fri: சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில்  திருவிழா ஆரம்பம்

21 - 02 - 2026 Satசிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் கொடியேற்றம்

28 - 02 - 2026 Satசிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் சப்பரத் திருவிழா

01 - 03 - 2026 Sunசிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழா

02 - 03 - 2026 Monசிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் மாசி மக தீர்த்தத் திருவிழா

07 - 03 - 2026 Sat: அபயகரம் வழங்கும் 34வது ஆண்டு நிதிசேகரிப்பு விழா

                                at 6 PM Bryan Brown Theatre, Bankstown NSW 2200

இலங்கைச் செய்திகள்

 யாழில் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்த தேசிய சமாதானப் பேரவை கலந்துரையாடல்

யாழ். சுழிபுரத்தில் உள்ள இராணுவ முகாமில் இருந்து வெளியேறிய இராணுவம்: பண்டத்தரிப்பு முகாமும் அகற்ற நடவடிக்கை!

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் கண்டறிதலுக்காக 12 கோல்போஸ்கோப் இயந்திரங்கள் 12 மாவட்டங்களுக்கு விநியோகம்

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வனப்பகுதியாக 'நீல்கல' உத்தியோகபூர்வமாக பிரகடனம் -அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

2026 யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு: யாழ்ப்பாண பல்கலைக்கழகம் – இந்தியாவின் சுரானா & சுரானா சட்ட நிறுவன இணைப்பு



யாழில் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்த தேசிய சமாதானப் பேரவை கலந்துரையாடல்

Published By: Vishnu

23 Jan, 2026 | 04:44 AM


தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் வியாழக்கிழமை (22)  மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் அதிபர் கருத்து தெரிவிக்கையில், இன்றைய நிகழ்வு மதங்களுக்கு இடையிலான நல்லுறவை பேணுகின்ற ஒரு விடயமாக காணப்படுவதாகவும், மனிதனின் ஒவ்வொருவரினதும் வாழ்க்கையிலும் மதம் அடிப்படையாகவுள்ளது எனவும், பிறப்பிலிருந்து அம் மதத்தை கடைப்பிடித்து ஒழுகி வருவதாகவும், நல்லிணக்க செயற்பாட்டை வெற்றிகரமாக கொண்டு செல்ல மதம் ஒரு ஊடகமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், சமூகத்தை ஒன்றிணைக்கின்ற செயற்பாட்டை மதங்கள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். 

உலகச் செய்திகள்

அமெரிக்க கடற்படைகள் ஈரானை நோக்கி நகர்த்தப்படுவதால் மத்திய கிழக்கில் பதற்றம்: ஈரான் அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை

காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் 3 ஊடகவியலாளர்கள் உட்பட 11 பேர் பலி

ஓய்வு பெற்றார் நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்

கிரீன்லாந்து விவகாரம்: ஐரோப்பிய நாடுகள் மீதான வரி அச்சுறுத்தலைத் திரும்பப் பெற்றார் ட்ரம்ப்

ஈராக்கை விட்டு முழுமையாக வெளியேறியது அமெரிக்க படை! ; சதாம் ஹுசைன் ஆட்சியை கவிழ்ப்பதற்காக சென்ற படைகள் சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேற்றம்!  




அமெரிக்க கடற்படைகள் ஈரானை நோக்கி நகர்த்தப்படுவதால் மத்திய கிழக்கில் பதற்றம்: ஈரான் அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை 

24 Jan, 2026 | 01:54 PM

ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வை எதிர்த்து அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த போராட்டங்களை கட்டுப்படுத்த ஈரான் அரசு எடுத்த கடும் நடவடிக்கைகளின் காரணமாக வன்முறை வெடித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளில் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ள நிலையில், இது ஈரான்–அமெரிக்கா இடையிலான பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழ் இசை விழா - சனிக்கிழமை 31/01/2026 - மாலை 5.30 மணி

 


நடைபெறும் இடம் – சிட்னி ஸ்ரீ துர்கா தேவி அரங்கம்

நேரம்: மாலை 5:30 மணி

தமிழ் இசை விழா 2026 நடைபெறவிருப்பதை மகிழ்ச்சியுடன் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ் இசை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை போற்றும் இந்த சிறப்புமிக்க நிகழ்வில் தங்கள் அனைவரின் பங்குபற்றுதலும் எங்களுக்கு பெருமையாக இருக்கும்.

நிகழ்ச்சியின் தேதி, நேரம் மற்றும் இடம் தொடர்பான முழு விபரங்கள் இணைக்கப்பட்டுள்ள விளம்பரப் பிரசுரத்தில் (Flyer) குறிப்பிடப்பட்டுள்ளன. தயவுசெய்து அதனைப் பார்த்து அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த விழாவில் தங்கள் குடும்பத்தினருடனும் கலந்து கொண்டு, ஒரு இனிய கலாசார மாலை அனுபவிக்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு தயவுசெய்து நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ளவும்.

இலக்கியவெளி நடத்தும் “பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் அவர்களின் தமிழியல் சுவடுகளும் நூற்றாண்டு தின நிகழ்வும்” 07/02/2026

 


ஒருங்கிணைப்பு:  பேராசிரியர் அ.சண்முகதாஸ்

 நாள்:  சனிக்கிழமை 07-02-2026

நேரம்:

 இந்திய நேரம் - மாலை 6.30

இலங்கை நேரம் - மாலை 6.30

கனடா நேரம் - காலை 8.00

இலண்டன் நேரம் - பிற்பகல் 1:00

 வழி: ZOOM

 Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 https://us02web.zoom.us/j/3890729245...

 சிறப்புப் பேச்சாளர்கள்:

 பேராசிரியர் எம்.ஏ. நுஃமான்

இ.இராஜேஸ்கண்ணன்

சு.குணேஸ்வரன்

எம்.எம்.ஜெயசீலன்

சி.ரமேஷ்

மேலதிக விபரங்களுக்கு: அகில் - 001416-822-6316

 https://www.ilakkiyaveli.com