சிங்கமில்லாக் காடு

.

தற்போதுள்ள அரசியல் சூழல் குறித்து, நடிகர் கமல்ஹாசன் எழுதியதாக கவிதை ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த கவிதை தன்னுடையதல்ல என நடிகர் கமல்ஹாசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சிங்கமில்லாக் காடு என்ற பெயரில் நீளும் அந்தக் கவிதையில், ஜெயலலிதா மரணம் குறித்தும், சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றது குறித்தும் விவரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் முதலமைச்சராக இருந்த பன்னீர் செல்வம் பதவியை ராஜினாமா செய்தது பற்றியும், தமிழகத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை பணம் பெற்றுக்கொண்டு வாக்களித்த மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது போன்றும் அந்தக் கவிதை அமைந்திருக்கிறது. சமூக வலைத்தளங்களில் உலா வரும் அந்தக் கவிதை, தன்னுடையைதல்ல என நடிகர் கமல்ஹாசன் மறுத்துள்ளார். தான் தவறு செய்திருந்தால் ஒப்புக் கொள்வேன் என்றும், அந்த பதிவு தன்னுடையதல்ல என்றும் கமல்ஹாசன் டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.


புசிக்கலாம் இந்தக் காட்டையென்றே
புதிய வேடம் பூண்டது!

வேரில் ஊற்றிய வெந்நீராய்
வெடுக்கெனப் பதவியைப் பறித்ததனால்

திடுக்கிட்டுத் திருந்திய ஓநாயோ
தியான நாடகம் போட்டது!

ஊரில் உள்ள உத்தமர்கள்
ஒன்றாய்ச் சேர்ந்திட வேண்டுமென
தேரில் தன்னை ஏற்றிடவே
திருடர்கள் துணையைக் கேட்டது!

அத்தை மறைந்த நல்வாய்ப்பில்
தத்தை ஒன்றும் கிளையமர்ந்து
விழியில் தீபம் ஏற்றியே
வித்தைக் காட்டத் தொடங்கியது!

நத்தை வேகத்தில் நகர்ந்தவொரு
சொத்தை வாங்கிய வழக்கினது
திருத்தி எழுதிய தீர்ப்பாலே
நரியின் கனவோ முடங்கியது!

காட்டைக் காக்கத் தேர்ந்தெடுத்த
அடிமை விலங்குகள் ஓரிடத்தில்
அவரவர் வேலையை மறந்துவிட்டு
அடைபட்டுக் கிடந்து வியர்த்தனவே!

காசை வாங்கி வாக்களித்த
கானகத்து உயிர்களெல்லாம்
ஆசை வெறுத்த மனத்துடனே
அடுத்தடுத்த நாடகம் பார்த்தனவே!

- கமல்ஹாசன்

No comments: