உலகச் செய்திகள்

* ஜக்சனின் வைத்தியர் முரேவிற்கு 4 ஆண்டுகள் சிறை

* கொதித்தெழுந்த ஈரானியர்கள்: தடுமாறிய பிரித்தானியா (பட இணைப்பு)

ஜக்சனின் வைத்தியர் முரேவிற்கு 4 ஆண்டுகள் சிறை


30/11/2011

பாடகர் மைக்கல் ஜக்சனின் இறப்பிற்கு காரணமாக இருந்த மருத்துவருக்கு 4 சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் தன்னுடைய வீட்டில் திடீரென மரணமடைந்தார். இவரது மரணம் உலகத்தையே உலுக்கியது. ஜக்சனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது குடும்ப வைத்தியர் முர்ரே மீது சந்தேகம் இருப்பதாகவும் ஜாக்சனின் குடும்பத்தினர் தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து குடும்ப வைத்தியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கு லொஸ் ஏஞ்சல்ஸ் நகர நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

ஜக்சனின் இறப்பு குறித்த விசாரணையில் மன அழுத்தத்தி்ல் தவித்து வந்த அவர் அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரை உட்கொண்டதால் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து முர்ரே ஜக்‌சனை கருண‌ை கொலை செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து நீதிபதி மைக்‌கேல் பாஸ்டர் வைத்தியருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்‌டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் ஜக்சனின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
நன்றி வீரகேசரி


கொதித்தெழுந்த ஈரானியர்கள்: தடுமாறிய பிரித்தானியா (பட இணைப்பு)


கவின் 30/11/2011

ஈரானிலுள்ள பிரித்தானிய தூதரகம் தாக்கப்பட்டதையடுத்து அங்குள்ள தனது அனைத்து இராஜதந்திரிகளையும் பிரித்தானியா வாபஸ் பெற ஆரம்பித்துள்ளது.

இதன்படி தெஹ்ரானிலுள்ள பிரித்தானிய தூதரகத்திலிருந்த முதல் தொகுதி இராஜதந்திர குழுவினர் அங்கிருந்து துபாய்க்குச் சென்றுள்ளனர்.

ஈரானிலுள்ள பிரித்தானிய தூதரகம் நேற்று நூற்றுக்கணக்கானோரின் பயங்கரத்தாக்குதலுக்குள்ளாகியது.

இதன்போது தூதரகம் அடித்து நொறுக்கப்பட்டதுடன், பொருட்களும் களவாடப்பட்டன.










நன்றி வீரகேசரி











No comments: