ஏன் கொன்றார்கள்.! ?

 

02 Jan, 2025 | 04:44 PM
image

ராஜ்குமார் ராஜீவ்காந் 

2006ம் வருடம் மாலை 7.30 மணியில் இருந்து 9 மணி வரை திருகோணமலை ஒரு திகிலான அனுபவத்தை சந்தித்தது. 

அதே இடங்களில் எம் நண்பர்களில் பலர் இருந்தார்கள் எத்தனையோ சாட்சிகள் இருந்தது.

கடற்கரையில் இருந்து கதைத்துக் கொண்டிருந்த அப்பாவி 5 மாணவர்களை, எந்த அர்த்தமும் இல்லாமல் வெறித்தனமாக கொன்றது இலங்கை இராணுவம். 

அதி காலையில் வைத்தியசாலையில் தலைகளில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்ட அந்த உடல்களைப் பார்த்தது நான் இறக்கும் வரை மறக்காது. 

அன்று முழு நகரமும் பேரதிர்ச்சியில் மூழ்கிப்போயிருந்தது, அதன் பின் பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீரில் இறுதிச் சடங்கு இடம்பெற்றது. 

இதன் பின்னர் நீதி கேட்ட பெற்றோர்கள் மிரட்டப்பட்டார்கள், இந்த கொலை நிகழ்ந்து 31வது நாள் நிகழ்வில் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்த பெளத்த பிக்கு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பான பல தகவல்களை தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்த எம் அன்பின் ஊடகவியலாளர் சுகிர்தராஜன் சுட்டுக்கொல்லப்பட்டார். 

இந்த வழக்கை முன் எடுத்துச் சென்ற பெற்றோரில் ஒருவரான வைத்தியர் மனோகரன் அவர்கள் மிக மோசமாக மிரட்டப்பட்டார். 

சென்ற வருடம் இந்த வழக்கின் நிலையும் அடுத்த கட்டமும் தொடர்பாக மீண்டும் சர்வதேச மன்னிப்பு சபையிடம் பேசியிருந்தேன். 

மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச , ஹொட்டகதெனிய என்று இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களின் பட்டியல் நீழ்கிறது. 

கடற்படையினர் சிலர் கைதாகி போதிய சாட்சியம் இல்லை என்று விடுதலையாகியிருந்தனர். 

இலங்கை அரசின் கொலைகள் ஆயிரக்கணக்காக இருந்தாலும் இந்த கொடூரக் கொலை அரச கட்டுப்பாட்டுப் பகுதியில், யுத்தம் கூட இடம்பெறாத பகுதியில் இடம்பெற்றது. 

இதற்கும் இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. யாரை நாம் நோவது.

ஒற்றன்













2025 ரணிலின் வியூகம் என்ன?

 

29 Dec, 2024 | 06:28 PM
image

 (லியோ நிரோஷ தர்ஷன்)

ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயம் தொடர்பாக பல்வேறு கிசு கிசுக்கள் தேசிய அரசியலில் உலா வருகின்ற நிலையில், அரசாங்கமும் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளது. 2025ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு சவால் மிக்கதொரு ஆண்டாக இருக்கும் என்று பிரதான எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.

இவ்வாறானதொரு நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தாவில் வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயம் உட்பட சமகால அரசியல் விடயங்கள் குறித்து பேசப்பட்டது.

ரணிலின் இந்திய விஜய கிசுகிசுக்கள்

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்புகள் தொடர்பிலான பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பினை ருவன் விஜேவர்தன மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோரிடம் கையளித்து விட்டு ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு சென்றுள்ளார்.

ஆனால் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயம் குறித்து மேலதிக தகவல்களை அறியும் வகையில் முக்கிய பிரமுகர்கள் பலர் தொலைபேசி ஊடாக வஜிர அபேவர்தனவை தொடர்புக் கொண்டு கேள்வியெழுப்பியிருந்தனர்.

'என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவுப் பேருரையை நடத்துவதற்காக ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு சென்றுள்ளார். ஏனெனில் வாஜ்பாயிக்கும் ரணிலுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்புகள் கடந்த காலங்களில் இருந்துள்ளன. கடந்த வருடமும் அழைக்கப்பட்டிருந்த போதிலும் அத்தியாவசிய காரணிகளின் அடிப்படையில் செல்ல முடியாமல் போனது. தற்போது ஓய்வில் இருக்கின்ற நிலையில் இம்முறை தவிர்க்காமல் சென்றுள்ளார். எனினும் இனிவரும் நாட்களில் சற்று அதிகமாக அரசியல் சார்ந்த நடவடிக்கைளில் ஈடுபடவுள்ளார். அப்போது ஓய்வு எடுப்பது கடினம்' என தொலைப்பேசியில் கேள்வியெழுப்பியவர்களுக்கு பதிலளித்திருந்தார்.

மீட்சி தொடங்கிவிட்டது

 Published By: Digital Desk 3

01 Jan, 2025 | 04:55 PM
image

கலாநிதி ஜெகான் பெரேரா

கிறிஸ்மஸ் பிறந்த நள்ளிரவில் கொழும்பிலும் குறிப்பாக வசதிபடைத்த உயர்வர்த்தக பகுதிகளிலும் தொடங்கிய ஜொலிப்பு புத்தாண்டு பிறப்பையும் கடந்து தொடருகிறது. தலைநகரின் இந்த இரவு வெளிச்சத்தில்  மூன்று வருடங்களுக்கு முன்னர் அது படுமோசமான பொருளாதார வீழ்ச்சியை  கண்டது என்பதற்கான எந்த அறிகுறியையும் காணமுடியவில்லை.

அரசாங்கத்தை பதவி கவிழ்த்து ஜனாதிபதியை  நாட்டைவிட்டு தப்பியோட வைத்த 'அறகலய ' போராட்டத்தின் குவிமையமாக அன்று விளங்கிய கொழும்பு கோட்டை காலிமுகத்திடல் புத்தாண்டு கொண்டாட்டங்களின் மையமாக மாறியது. அந்த மையத்தை நோக்கி ய வீதிகளின்  வாகன நெரிசல் அன்று எரிபொருட்களை பெறுவதற்காக  பெட்ரோல் விற்பனை  நிலையங்களுக்கு வெளியே காணப்பட்ட நீண்ட வரிசைகளை கிரகணம் செய்துவிட்டது.

தலைநகரின் ஆடம்பரமான பகுதிகளில் ஹோட்டல்களும் இரவுவிடுதிகளும் நிரம்பிவழிந்தன. இந்த கொண்டாட்டங்களுக்கான செலவு மிகப்பெரியது.  ஆனால், அங்கெல்லாம் கூடிய பெருமளவானோரினால் குறைந்தபட்சம் எப்போதாவது ஒரு தடவையாவது அவ்வாறு செலவழிக்கக்கூடியதாக இருக்கிறது. நீர்நிலைகளை நோக்கி அமைந்திருக்கும் ஐ.ரி.சி. ரத்னதீப மற்றும் சிறாறி ஒஃவ் ட்றீம்  போன்ற புதிய ஹோட்டல்கள் இரவில் துபாயில் காணக்கூடிய தோற்றத்தை கொழும்பில்  தோற்றுவிக்கின்றன.

இலங்கைச் செய்திகள்

40 ஆண்டுகளுக்குப் பிறகு மட்டு.வில் புதிய பஸ் சேவை! : மாவலையாறு, மாவடிச்சேனை முதலான கிராமங்களின் ஊடாக 28 கி.மீ. பயணம்

நடுக்கடலில் தத்தளித்த பயணிகள் படகு பாதுகாப்பாக மீட்பு ! 

10 ஆயிரத்து 400 மெற்றிக்தொன் அரிசி முதற்கட்டமாக இறக்குமதி செய்யப்படும் ; அரச வாணிப கூட்டுத்தாபனம்

தொல்லியல் திணைக்களத்தினால் காணிகள் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு

 தமிழினப்படுகொலை குற்றவாளிகள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் ; தமது நிலைப்பாட்டைத் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்கிறது கனேடிய கன்சர்வேட்டிவ்




40 ஆண்டுகளுக்குப் பிறகு மட்டு.வில் புதிய பஸ் சேவை! : மாவலையாறு, மாவடிச்சேனை முதலான கிராமங்களின் ஊடாக 28 கி.மீ. பயணம் 

02 Jan, 2025 | 12:51 PM
image

உலகச் செய்திகள்

 சிரியாவில் ஐ.எஸ். இலக்குகள் மீது பிரான்ஸ் வான் தாக்குதல்

ஐஎஸ் அமைப்பின் கொடியுடன் வாகனத்தை செலுத்தி பொதுமக்கள் மீது தாக்குதல் - நியுஓர்லியன்ஸ் சம்பவம் குறித்து அதிகாரிகள் தகவல்

நியுஓர்லியன்ஸ் தாக்குதலை மேற்கொண்டவர் அமெரிக்க இராணுவத்தில் 13 வருடங்கள் பணியாற்றினார் - அமெரிக்க இராணுவம்



சிரியாவில் ஐ.எஸ். இலக்குகள் மீது பிரான்ஸ் வான் தாக்குதல்

02 Jan, 2025 | 01:01 PM
image

சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீது பிரான்ஸ் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

பேர்த் பால முருகன் கோவில் - திருவெம்பாவை 04/01/2025 - 13/01/2025

 


அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மூத்த படைப்பாளி அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்புலகம் – மெய்நிகரில் கருத்தரங்கு 19-01-2025 – ஞாயிற்றுக்கிழமை

 


கனடாவில் வதியும் மூத்த இலக்கியவாதி – எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரின் இலக்கிய படைப்புலகம் தொடர்பான கருத்தரங்கு .

தலைமை :  கிறிஸ்ரி நல்லரெத்தினம் ( தலைவர்  அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய  கலைச் சங்கம். )

அறிமுகவுரை    லெ  முருகபூபதி. -  அவுஸ்திரேலியா

முத்துலிங்கம் சிறுகதைகள்

    அனோஜன்  பாலகிருஸ்ணன் - பிரித்தானியா

முத்துலிங்கம் நாவல்கள்

    கேசநந்தன் அகரன் ( பூமிநேசன்) பிரான்ஸ்

முத்துலிங்கம் புனைவுசாரா  எழுத்துக்கள்

     ஜிஃப்ரி ஹாஸன்- இலங்கை .

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்  இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய ( 2023 )  இலக்கியப்போட்டி முடிவுகள்:

 அறிவிப்பு :   பாடும்மீன் சு. சிறிகந்தராசா

 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : நோயல் நடேசன்.  

அவுஸ்திரேலியா நேரம் மதியம் 12.00 மணி

நியூசிலாந்து :  மதியம் 2.00 மணி

இங்கிலாந்து :  அதிகாலை 1.00 மணி

ஜெர்மனி : அதிகாலை 2.00 மணி

பிரான்ஸ் : அதிகாலை 2.00 மணி

இலங்கை – இந்தியா : காலை 6.00 மணி

கனடா  : இரவு 8.00 மணி (Saturday 18th)

வைகுண்ட ஏகாதசி 10/01/2024

 

வைகுண்ட ஏகாதசி இந்துக்களுக்கு முக்கியமான மற்றும் புனிதமான நாட்களில் ஒன்றாகும், இது விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது இந்து நாட்காட்டியில், "மார்கழி" மாதத்தில் (டிசம்பர் மற்றும் ஜனவரி இடையே) நிகழ்கிறது. கவனித்தபோது, ​​அது மறுபிறப்புகளின் சுழற்சியிலிருந்து விடுதலையை அளிக்கிறது.
பத்ம புராணத்தின் படி, விஷ்ணுவின் பெண் ஆற்றல் "முரன்" என்ற அரக்கனைக் கொன்று 'தேவர்களை' பாதுகாத்தது. இது சந்திர மாதத்தின் பதினோராம் நாளில் தனுர் ராசியில் சூரியனின் சஞ்சாரத்தின் போது நடந்தது. இந்தச் செயலால் கவரப்பட்ட விஷ்ணு, அவளுக்கு ‘ஏகாதசி’ என்று பெயரிட்டு, முரண் மீது அவள் வெற்றி பெற்ற நாளில் ‘ஏகாதசி’யை வழிபடுபவர்கள் ‘வைகுண்டம்’ (அவரது இருப்பிடம்) அடைவார்கள் என்ற வரம் அளிக்கிறார்.
வைகுண்ட ஏகாதசியின் முக்கியத்துவம் பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. 'முரன்' - ஒரு அரக்கனின் கொடுங்கோன்மையைத் தாங்க முடியாத தேவர்கள், சிவபெருமானை அணுகினர், அவர் அவர்களை விஷ்ணுவிடம் வழிநடத்தினார் என்று புராணம் கூறுகிறது. விஷ்ணுவிற்கும் அரக்கனுக்கும் இடையே ஒரு போர் நடந்தது & முரனைக் கொல்ல ஒரு புதிய ஆயுதம் தேவை என்பதை விஷ்ணு உணர்ந்தார். ஓய்வு எடுத்து ஒரு புதிய ஆயுதத்தை உருவாக்க, விஷ்ணு பதரிகாஷ்ரமத்தில் உள்ள ஹைமாவதி தேவிக்காக ஒரு குகைக்குச் சென்றார். தூங்கிக் கொண்டிருந்த விஷ்ணுவை முரன் கொல்ல முயன்றபோது, ​​விஷ்ணுவிடம் இருந்து வெளிப்பட்ட பெண்ணிய சக்தி முரனை தன் பார்வையால் எரித்துச் சாம்பலாக்கியது. மகிழ்ந்த விஷ்ணு, தேவிக்கு ‘ஏகாதசி’ என்று பெயரிட்டு, வரம் கேட்கச் சொன்னார். ஏகாதசி, அதற்கு பதிலாக, அன்று விரதம் அனுஷ்டிப்பவர்கள் தங்கள் பாவங்களில் இருந்து மீட்கப்பட வேண்டும் என்று விஷ்ணுவிடம் மன்றாடினார். அன்றைய தினம் விரதம் இருந்து ஏகாதசியை வழிபடுபவர்கள் வைகுண்டம் அடைவார்கள் என்று விஷ்ணு அறிவித்தார்.

இரண்டாயிரத்து இருபத்தைந்து இன்பம் கொடுத்து நிற்கட்டும் !

 




 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 




நல்லன நடக்க வேண்டும்

நாடெலாம் சிறக்க வேண்டும்
வல்லமை பெருக வேண்டும்
வாழ்வது உயர வேண்டும்  

தொல்லைகள் தொலைய வேண்டும்

தோல்விகள் அகல வேண்டும் 
இல்லது என்னும் வார்த்தை
இன்மையாய் ஆதல் வேண்டும்

போரெனும் எண்ணம் மண்ணில்

பொசுங்கியே போதல் வேண்டும்
மாசுடை  ஆட்சி மண்ணில்
மடிந்துமே ஒழிய வேண்டும் 

மார்கழி என்றுமே மாண்புடை மாதமே !


 



மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … அவுஸ்திரேலியா

 

மார்கழி என்பது மாண்புடை மாதம்

தேவர்கள் விரும்பும் சிறப்புடை மாதம்
பூதலம் பூஜைகள் பொலிந்திடும் மாதம்
சீதளம் நிறையும் சிறப்புடை மாதம்  

ஆலயம் அனைத்தும் அடியவர் நிறைவார்

அரனை வணங்குவார் ஐயப்பன் துதிப்பார்
தீப ஒளியில் ஆலயம் யாவுமே
தேவ லோகமாய் பொலிந்துமே நிற்கும்

மக்களின் மனத்தில் மார்கழி மாதம்

மங்கலம் அற்றது என்னும் எண்ணம்
இருப்பது என்பது பொருத்தம் அல்ல
மார்கழி என்றுமே மங்கல மாதமே 

சிட்னி பொங்கல் விழா 14/01/2025