மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
உலகிலே பல மொழிகள் காணப்படுகின்றன. அந்த
மொழிகளில் எங்கள் தமிழ் மொழியும் ஒன்றாகும். ஏனைய மொழிகளுக்கெல்லாம் இல்லாத ஒரு பெருமையை எங்கள் தமிழ் மொழி பெற்றிருக்கிறது. எல்லா மொழிகழுமே இலக்கியத்தைக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த இலக்கியத்தால் அந்த மொழிகளும் பெருமையினையும் பெற்றிருக்கின்றது. அப்படிப் பெருமையி னைப் பெற்றாலும் , தமிழ் பெறும் பெரு மைக்கு ஈடாக முடியாது என்பதுதான் கவனத்துக்குரியதாகும். ஏனைய மொழிகளைவிட தமிழ் மொழி அப்படி என் னதான் முக்கியத்துவத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்று அறிந் தி டும் ஆவல் ஏற்படுகிறதல்லவா ? அதுதான் " பக்தி இலக்கியம் " ஆகும். பக்தி க்கு என்று இலக்கியங்கண்ட உலகின் ஒரே மொழி எங்கள் தமிழ்மொழி மட்டுமேயாகும்.
இலக்கியம் என்றால் ஒரு இலக்கை நோக்கி அழைத்துச்
செல்லுவது என்று தான் அறிஞர்கள் சொல்லு வார்கள். இலக்கியம் என்னும் பொழுது அதில் பக்தி யினைப் புகுத்த வேண்டும் என்னும் சிந்தனை புதியதோர் சிந்தனை என்றுதான் கொள்ளல் வேண்டும். அதனைத் தமிழ் சமூகத்தார் செய்திருக்கிறா ர்கள் என்பதிலிருந்து அவர்களின் மனப்போக்குப் புலப்பட்டு நிற்கிறதல்லவா. சுவைத்துப் படிக்கும் இலக்கியத்திலும் பக்தியானது இருக்க வேண்டும் என்னும் கருவா னது மிகவும் உன்னதமான ஒன்றாகவே பார்க்கப்பட வேண்டியதேயாகும். எப்ப டியும் வாழலாம் என்று வாழும் வாழ்க்கையைவிட இப்படித்தான் வாழ வேண் டும் என்று வாழுதல்தான் சிறந்த வாழ்வாகும். அப்படி வாழும் வாழ்வினைத் தான் " வையத் துள் வாழ்வாங்கு வாழுதல் " என்கின்றோம்.அப்படி வாழ்வதற்கு உரிய வழியினைக் காட்டிடக் கைகொ டுத்து நிற்கும் நிலையில் முகிழ்த்ததுதான் பக்தி இலக்கியம் என்னும் புதுக்கரு என்று கூட எடுத்துக் கொள் ளலாம் அல்லவா !
பக்தியினால் பக்குவம் வருகிறது. பக்தியினால் பண்பு வளர்கிறது. பக்தியினால் அன்பு துளிர்க்கிறது. பக்தியினால் உயர்வு தாழ்வு அகல்கிறது. பக்தியினால் தர்மம் செழிக்கிறது. அறம் மலர்கிறது. பக்தி யினால் விருந்தோம்பல் சிறக்கிறது. பக்தியினால் ஒழுக்கம் உயர்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நல் லதோர் சமூகமே உருவாகிறது என்பதுதான் கருத்திருத்த வேண்டிய கருத்தெனலாம். இவை எல்லாவற் றையும் மனமிருத்தி பக்தி இலக்கியப் பாதையிலே ஒருவர் ஆசையுடன் பயணிக்கிறார். அந்தப்பயண த்தை அவர் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் யாவருக்கும் பயன்படும் வண்ணம் ஆக்கியும் விட்டி ருக்கிறார் என்பது இங்கு நோக்கத்தக்கதாகும். அப்படி பயணிணித்த அவர் பக்தியினால் ஒரு பரிசினை யும் எமக்கெல்லாம் வழங்கியும் நிற்கிறார். அந்தப் பரிசு என்ன என்று அறிந்திடும் ஆவல் எழுகிறதல் லவா ? அந்தப்பரிசுதான் " பெரிய புராணம் ". பக்தியின் பரிசாக எமக்கெல்லாம் பயனுற வழங்கியர் தான் " சேக்கிழார் பெருமான் ".. இவரின் பரிசின் பெருமை காரணமாக " பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ " என்று தமிழுலகமே இவரை வியந்து போற்றி நின்றது.
நாயன்மார்களும் பக்தியினைப் பாடினார்கள். ஆழ்வார்களும் பக்தியினைப் பாடினார்கள். அவர்களின் பக்தியின் அனுபவம் வேறாக இருந்தது. அந்த அனுப வங்கள் அத்தனையும் அவர்களுக்கு வாய்த்த அனு பவங்களின் வெளி ப்பாடாக வேதான் இருந்திருக்கிறது. ஆனால் சேக்கிழார் காட்டும் பக்தி அனுபவ மும் அதற்காக எடுத்துக் கொண்ட முறையும் முற்றிலும் வேறு பட்டதாகவே காணப்படுகிறது. ஆண்ட வனின் அருளினை அடியார்கள் தங்களின் திருப்பாடல்கள் வாயிலாக எமக்கெல்லாம் காட்டி நின்றா ர்கள். அந்த அடியார்களையும் அவர்களின் பக்தியின் நிலையினையும், பக்குவத்தையும் யாவருக்கும் காட்டும் புதிய உத்தியினையே வெளிப்படுத்தும் நிலையில் சேக்கிழாரின் செயலமைந்தது என்பதுதான் இங்கு முக்கிய திருப்பமாய் அமைகிறது எனலாம்.
சேக்கிழார் காட்டும் அடியார்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு விதமானவர்கள். அவர்களின் சிந் தனை , செயல்கள் அனைத்துமே மாறுபாடானவை. அது மட்டுமட்டுமல்ல வேறு பாடானவையாயும் அமைந்திருந்தன. ஆனால் அவர்கள் அனைவரையும் பக்தி என்னும் ஒரு குடைக்கீழ் வந்து நிற்கச் செய் கிறார் சேக்கிழார் என்பதுதான் மிகவும் சிறப்பாகும். அப்படி அவரின் குடைக்குள் வந்து நிற்கும் வித்தி யாசமான ஒரு அடியார்தான் , " தன்னையே மறந்து கண்ணையே கொடுத்த கண்ணப்பர்."
பெரியபுராணத்தில் பல அடியார்களின் பக்தியின் நிலையினைப் பார்க்கலாம். ஆனால் கண்ணப்பரின் நிலையினை இக்காலச் சமூகத்தார் ஏற்றுக் கொள்ளுவார்களா என்னும் கோணத்தில் , சேக்கிழாரின் அடிச்சுவட்டில் நாமும் பயணித்து , சேக்கிழாரின் சிந்தனை எப்படி அமைகிறது என்பதைப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் அல்லவா !
சரியை, கிரிகை, யோகம் , ஞானம்,
வெல் படைத் தறுகண் வெஞ்சொல்
வேட்டுவர் கூட்டம் தோறும்
கொல் எறி குத்து என்று
ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச்
கண்ணப்பர் பிறந்த சூழலை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து சேக்கிழார் காட்டுவது மிகவும் முக்கியமான கருத்தெனலாம். " கொல் , எறி , குத்து " என்னும் ஓசைதான் அங்கே முன்னிற்கும் ஓசையாகக் காட்டப்படுகி றது.
மைச்செறிந் தனைய மேனி
வன்தொழில் மறவர் தம்பால்
அச்சமும் அருளும் என்றும்
அடைவிலார் உடைவன் தோலார்
பொச்சையி னறவும் ஊணின்
புழுக்கலும் உணவு கொள்ளும்
நச்சழற் பகழி வேடர்
கண்ணப்பரின் வேடர் கூட்டம் கரிய மேனியைக் கொண்டவர், அச்சம் என்பது அவர்களிட ம் இல்லை. அதேவேளை அருளுங்கூட அவர்களிடம் இல்லை.அவர்கள் தொழிலே கொடுந்தொழிலாகவே இருப்பதாய் சேக்கிழார் படம் பிடிப்பதுபோல் ஆரம்பத்திலே காட்டி நிற்கிறார். அதுமட்டுமல்ல கண்ணப்பரின் தகப்பன் குற்றமே குணமாகக் கொண்டிருக்கிறானாம். காரணம் அவனின் இந்தப்பிறவியில் அவனுக்கு வாய்த்த சூழலேயாகும்.அதனால் அவன் கொலை செய்யவும் அஞ்சா நிலையினை உடையவனாகவே காணப்படு கிறான்.அப்படி இருக்க அவனுக்கு எப்படி கண்ணப்பராகப் போகின்றவர் பிள்ளையாகப் பிறக்க முடிந்தது என்னும் ஐயம் எழுத்தானே செய்யும் ? அதற்கும் பொருத்தமாய் சேக்கிழார் பதிலினைப் பகர்ந்து நிற்கிறார்.
பெற்றியால் தவமும் செய்தான்
ஆயினும் பிறப்பின் சார்பால்
குற்றமே குணமா வாழ்வான்
கொடுமையே தலைநின் றுன்னான்
முற்பிறப்பில் செய்த தவப்பயனால்த்தான் கண்ணப்பர் அவனுக்குப் பிள்ளையாக வாய்க்கும் நல்வாய்ப்புக் கிடைத்திருக்கிறதாம் என்பதையே " பெற்றியால் தவமும் செய்தான் " என்று சேக்கிழார் தகுந்த பதிலாகக் காட்டுகின்றார். ஆனால் இப்பிறப்பில் கண்ணப்பரின் தந்தையின் இயல்பு வேடர்க்குரியதாகவே ஆகிவிட்டது என்பதையும் சேக்கிழார் காட்டி நிற்கத் தவறவே இல்லை என்பதைத்தான் இப்பாடலின் அடுத்த வரிகள் காட்டி நிற்கின்றன.
வேடர் குலத் தலைவனுக்கு எல்லாவளமும் இருந்தும் பிள்ளைச் செல்வம் இல்லா நிலையில் தங்களின் குலதெய்வமான முருகக்கடவுளை வேண்டி நிற்கிறான். அவனின் முன்வினைப் பயனாக ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. வேடர் குலமே ஆனந்தப் பரவசப்பட்டு நிற்கிறது. பிறந்த குழந்தையை தந்தை ஆசையுடன் தூக்கு கிறான். அந்தக் குழந்தை மற்றைய குழந்தைகள் போலல்லாமல் கனமாக அதாவது திண்மையாக இருந்தத படி யால் " திண்ணன் " என்று பெயர் சூட்டி மகிழ்கிறான். வேடர் குலமே திண்ணன் , திண்ணன் என்று வானைத் தொட கோஷமிட்டு நிற்கிறது.திண்ணன் என்னும் பெயரும் கூட பின்னால் வரப்போகின்ற நிகழ்வுக்கு கட்டியங் கூறுவதாக அமைகிறதோ என்பதும் சிந்திக்க வேண்டியதேயாகும். தன்னையே இழக்கும் திடம் அதாவது திண்ணம் அவனின் கருவிலேயே கருக்கொண்டு விட்டிருக்கிறது என்பதைத்தான் தந்தையின் வாயிலிருந்து அந்தக் குழந்தைக்குப் பெயராக வாய்ததோ என்றும் எடுத்துக் கொள்ளும் நிலையும் இருக்கிறதல்லவா ?
திண்ணன் வளர்கிறான். வளர்ந்த திண்ணன் வேடர்குல வழக்கப்படி காட்டுக்குக் கன்னி வேட்டையாடச் செல்கிறான். அவனுடன் வேடர்கள் பலர் செல்கிறார்கள் வேட்டை நாய்களும் செல்லுகின்றன. திண்ணனின் அணுகு தொண்டராக நாணன் என்பவனும் காடன் என்பவனும் கூடவே செல்கிறார்கள். வேட்டையின் பொழுது முரட்டுப் பன்றி ஒன்றினால் திண்ணனும் கூட் டமும் களைத்தே போகும் நிலை உண்டாகிறது. களைத்தாலும் திண்ணனின் தீரத்தால் அந்த மூர்க்கமான பன்றி குத்திக் கொல்லப்படுகிறது.களைத்த திண்ணன் நீரருந்தும் இட த்தை நாட நிற்கும் நிலையில் அவனுடன் வந்த நாணன் பக்கத்தில் பொன்முகலி ஆறு இருக்கிறது என்னும் செய்தியைச் சொல்லி அவனை அழைத்துச் செல்லுகிறான். ஆற்றில் நீருண்டு களைப்பாறும் திண்ணனுக்கு அங் கிருக்கும் மலைபற்றிச் சொல்லுகிறான். திண்ணனும் மலையிலேறி மலைவளத்தைப் பார்த்திட விரைகிறான். அங்கு குடுமித்தேவரைக் காணுகிறான். அதன் பின் அவன் எப்படியெல்லாம் நடந்து கொள்ளுகிறான் என்னும் கதைகளை நாமனைவருமே நன்கு அறிந்து வைத்திருக்கிறோம்.
திண்ணன் என்னும் வேடன் , ஒரு காடன் , எப்படி இவ்வாறு ஆகினான் என்பதுதான் அனைவரின் மனத் திலும் இன்றுவரை எழுந்து கொண்டே இருக்கும் கேள்வி எனலாம்.கொத்து, வெட்டு, கொல்லு,
தன்னை மறக்கும் நிலை பற்றி இத்திருப்பாடலின் கருத்தாகவேதான் திண்ணனின் செயலும் அமைந்திருக்கிறது.
நல்வினையும் , தீவினையும் , ஆன்
கண்ணப்பரை மணிவாசகர் காட்டினார். எம்பெருமானே கண்ணப்பரின் அன்பின் உயர்வினைக் காட்டு வதாக சேக்கிழார் தரும் இச்செய்திதான் மிகவும் உச்சமான உயர்வுடை செய்தியாகும். இது ஒன்றே கண்ணப்பரைக் காட்டுவதற்குப் போதுமானதாக இருக்கும் அல்லவா !
No comments:
Post a Comment