இலங்கைச் செய்திகள்


வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை சந்தித்து ஆறுதல் கூறினார் ஜனாதிபதி..!

வித்தியாவின் கொலை தொடர்பிலான மக்களின் கோபமும் கொந்தளிப்பும் நியாயமானது : மாதுலுவாவே சோபித தேரர்

கேன்ஸ் திரைப்படவிருதை வென்ற ஈழத்தமிழ் அகதிகளின் கதை

அத்தே ஞானசார தேரருக்கு பிணை

சச்சிதானந்தம் கொலை: கொலையாளியை கண்டு பிடியுங்கள்: மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

பசில் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஷிராந்திக்கு அழைப்பு

யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதியாக இளஞ்செழியன் நியமனம்






வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை சந்தித்து ஆறுதல் கூறினார் ஜனாதிபதி..!


26/05/2015 யாழில் வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை சந்தித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறுதல் கூறினார்.
வித்தியாவின் படுகொலைக்குப் பின்னரான நிலைமையை நேரடியாகப் பார்வையிட வேண்டுமெனக் கேட்டதற்கு இணங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை திடீர் விஜயத்தை மேற்கொண்டிருந்தார். 
இதன்போது வித்தியாவின் தாயார், சகோதரனை அவர் சந்தித்து தனது அனுதாபத்தை வெளியிட்டதோடு, அவர்களது பாதுகாப்பு குறித்தும் தான் கவனம் செலுத்துவதாகவும் உறுதியளித்தார். நன்றி வீரகேசரி 








வித்தியாவின் கொலை தொடர்பிலான மக்களின் கோபமும் கொந்தளிப்பும் நியாயமானது : மாதுலுவாவே சோபித தேரர்

25/05/2015 புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யாவின் கொலை சம்­பவம் தொடர்பில் மக்­களின் கோபமும் கொந்­த­ளிப்பும் நியா­ய­மா­னதே. பாட­சாலை சிறு­மியை பாலியல் கொடு­மைக்கு உள்­ளாக்கி கொலை செய்த நபர்­களை மக்கள் தண்­டிக்க துடிப்­ப­தையும் ஆக்­ரோஷப்­ப­டு­வ­தையும் நாம் குறை­கூற முடி­யாது என சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் தலை­வரும் கோட்டே நாக விகா­ரையின் விகா­ரா­தி­ப­தி­யு­மான மாது­லு­வாவே சோபித தேரர் தெரி­வித்தார்.

மக்கள் தமது கோபத்தை வெளிப்­ப­டுத்த சட்­டத்தை கையில் எடுக்­க­வேண்டாம் என்றும் சட்டம் தன் கட­மையை சரி­யாக செய்­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.
புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யாவின் கொலை குழப்­ப­க­ர­மான நிலை­மையை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் அது தொடர்பில் கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அவர் மேலும் கூறு­கையில்,
மனி­தா­பி­மா­னத்­துக்கு எதி­ராக நடை­பெறும் சம்­ப­வங்­களை எந்த வகை­யி­லேனும் கட்­டுப்­ப­டுத்த வேண்டும். பாலியல் கொடு­மைகள், கொலை­களை தடுத்து மக்­களின் பாது­காப்பை பலப்­ப­டுத்­த­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். அதேபோல் மக்கள் தமது மன­ச்சாட்­சிக்கு அடி­ப­ணிந்து நடக்க வேண்டும். வட மாகா­ணத்தில் இடம்­பெற்ற பாட­சாலை மாணவி வித்­தி­யாவின் பாலியல் வன்­கொ­டுமை மற்றும் அவரை கொலை செய்­தமை கண்­ட­னத்­துக்­கு­ரிய விட­ய­மாகும். இந்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய அனைத்து குற்­ற­வா­ளி­க­ளையும் உட­ன­டி­யாக கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்த வேண்டும். இவ்­வா­றான நபர்கள் கட்­டாயம் சட்­டத்­துக்கு அமைய தண்­டிக்­கப்­பட வேண்டும். ஆனால் எந்த ஒரு சந்­தர்ப்­பத்­திலும் சட்­டத்­துக்கு முர­ணான வகையில் எந்த சம்­ப­வங்­களும் நடை­பெறக் கூடாது.
மாணவி வித்­தி­யாவின் கொலை சம்­பவம் தொடர்பில் அம் மக்­களின் கோபமும் கொந்­த­ளிப்பும் நியா­ய­மா­னதே. பாட­சாலை சிறு­மியை பாலியல் கொடு­மைக்கு உள்­ளாக்கி கொலை செய்த நபர்கள் மீது மக்கள் கோபப்­ப­டு­வ­தையும் அவர்­களை தண்­டிக்கத் துடிப்­ப­தையும் நாம் குறை கூற முடி­யாது. ஆனாலும் எல்­லா­வற்­றையும் தாண்டி நாட்டில் சட்டம் என்ற ஒன்று உள்­ளது. சட்­டத்­துக்கு முர­ணான வகையில் எவரும் செயற்­ப­டு­வது சட்­டத்தை மீறும் செய­லாகி விடும். பின்னர் சட்­டத்தை கடைப்­பி­டிக்க பலரை கைது­செய்ய வேண்­டிய நிலை ஏற்­படும். அவ்­வா­றான ஒரு நிலைமை தான் இன்று வடக்கில் ஏற்­பட்­டுள்­ளது. மக்கள் தமது கோபத்தை வெளிப்­ப­டுத்த ஆக்­ரோ­ஷமாக நடந்து கொள்­வது சாதா­ரண பொது­மக்கள் அனை­வ­ரி­னதும் செயற்­பா­டு­களை பாதித்­துள்­ளது. குற்­ற­வா­ளி­களை தண்­டிக்கும் பொறுப்பு பொலி­ஸா­ருக்கும் நீதி­மன்­றத்­துக்கும் உள்ள நிலையில் மக்கள் குற்­ற­வா­ளி­களை தண்­டிக்க நினைப்­பது ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­வொன்­றாகும்.
குற்­ற­வா­ளிகள் என சந்­தே­கிக்­கப்­படும் நபர்கள் பொலி­ஸா­ரினால் கைதுசெய்­யப்­பட்­டுள்­ளனர். அவர்­கள்­மீது இப்­போது விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இந்­நி­லையில் மக்கள் கொந்­த­ளிப்­பதும் தமது கைகளில் சட்­டத்தை எடுத்து தண்­டிக்க நினைப்­பதும் சட்­டத்­திற்கு முர­ணா­னது. ஆகவே மக்கள் அமை­தி­யாக இருந்தால் மட்­டுமே உண்­மை­யான குற்­ற­வா­ளி­களை சரி­யாக இனங்­கண்டு அவர்­களை தண்­டிக்க முடியும்.
அதேபோல் இந்த சம்­ப­வத்தில் காவல் துறையின் ஒத்­து­ழைப்பு மிகவும் அவ­சி­ய­மா­னது. ஆகவே பொது மக்கள் பொலி­ஸா­ருக்கு ஒத்­து­ழைப்பு வழங்கி குற்­ற­வா­ளி­களை தண்­டிக்க உதவ வேண்டும். ஒருசில அரசியல் தலையீடுகள் இதன் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் அது உண்மையாக இருப்பின் மக்கள் அவற்றை இனங்கண்டு உண்மையின் பக்கம் நிற்கவேண்டும். அரசியல் எதிர்பார்ப்புகளில் பொதுமக்கள் சிக்கிக்கொண்டு வடக்கில் குழப்பங்களை ஏற்படுத்திவிடாது அமைதியாக செயற்படுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். நன்றி வீரகேசரி








கேன்ஸ் திரைப்படவிருதை வென்ற ஈழத்தமிழ் அகதிகளின் கதை

26/05/2015 பிரபல பிரான்ஸ்  திரைப்பட இயக்குநர் ஷாக் அவ்தியா(த்) இயக்கிய "தீபன்" திரைப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்துக்கான பாம்தோர் (தங்கப்பனை) விருது வென்றிருக்கிறது.

 பிரான்ஸ் நாட்டுக்கு அகதித்தஞ்சம் கோரி குடியேறும் மூன்று தனித்தனி ஈழத்தமிழ் அகதிகளின் வாழ்க்கைப் போராட்டத்தை விளக்கும் இந்த திரைப்படத்தில் ஈழத்தமிழ் எழுத்தாளரும் முன்னாள்  போராளியுமான ஷோபாசக்தி கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் தமிழ்நாட்டைச்சேர்ந்த மேடை நாடகக் கலைஞர் காளீஸ்வரியும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். 
பிரான்ஸில் குடியேறும் மூன்று வெவ்வேறு ஈழத்தமிழ் அகதிகள் அகதித்தஞ்சம் பெற்றுக்கொள்வதற்காக தற்காலிகமாக தங்களை ஒரு குடும்பமாக இணைத்துக் கொள்கிறார்கள். குடியேறிய அந்நிய நாட்டில், அந்நிய சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்த திரைப்படம் விவரிக்கிறது. 
ஒருவகையில் தனது சொந்த வாழ்வின் போராட்டங்களின் பெரும்பகுதியை இந்த திரைப்படத்தின் கதாநாயகன் தீபன் பாத்திரம் சித்தரிப்பதாக இந்ததிரைப்படத்தில் தீபனாக நடித்திருக்கும் ஷோபா சக்தி தெரிவித்திருந்தார். 
புலம் பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழ் அகதிகள் சந்திக்கும் புறச்சூழல் சார்ந்த பிரச்சனைகளையும், அகச்சூழலில் அவர்கள் எதிர்கொள்ளும் அலைக்கழிப்புக்களையும், மனப்போராட்டங்களையும் பேசக்கூடிய முதல் ஐரோப்பிய திரைப்படம் "தீபன்" என்று பரவலாக பார்க்கப்படுகிறது. 
கேன்ஸில் இந்ததிரைப்படத்தை பார்த்த முன்னணி திரை விமர்சகர்கள் பலரும் இந்த திரைப்படத்தையும், ஷோபாசக்தி மற்றும் காளீஸ்வரியின் நடிப்பையும் பெரிதும் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
இந்த சர்வதேச திரைப்பட போட்டியில் ஹாலிவுட்டின் முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்கள் பல போட்டியில் இருந்தன. அவற்றையெல்லாம் பின்னுக்குத்தள்ளிவிட்டு, முற்றிலும் புதுமுகங்களும், தொழில்முறை திரைப்பட முன் அனுபவமற்ற நடிகர்களும் நடித்த தீபன் திரைப்படம் இந்த சிறப்பு விருதினை வென்றிருப்பது ஐரோப்பிய திரை விமர்சகர்கள் பலரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.  நன்றி வீரகேசரி











அத்தே ஞானசார தேரருக்கு பிணை

26/05/2015 பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரை 5 ஆயிரம் காசுப்பிணையிலும் பத்து இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் செல்ல கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டோக்கியோவிலிருந்து நேற்று நாடு திரும்பிய ஞானசார தேரர்  கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் இன்று காலை வாக்குமூலம் ஒன்றை அளித்தன் பின்னர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட ஞனசார தேரரை கருவாத்தோட்ட பொலிஸார் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது 5 ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும் பத்து இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.







நன்றி வீரகேசரி











சச்சிதானந்தம் கொலை: கொலையாளியை கண்டு பிடியுங்கள்: மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்


27/05/2015 சமூக சேவை உத்தியோகத்தர் சச்சிதானந்தம்  சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்கக் கோரி சமூக சேவை உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்னால் இன்று புதன்கிழமை காலை கவனயீரப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.





மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களிலுமுள்ள சமூக சேவை உத்தியோகத்தர்கள், மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் கவனயீரப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஆயுத கலாசாரத்தை ஒழியுங்கள், கொலையாளியை கண்டு பிடியுங்கள், அமைதியான சூழலை ஏற்படுத்துங்கள், விரைவாக தண்டனை வழங்குங்கள், அரச உத்தியோகத்தருக்கு பாதுகாப்பு தாருங்கள், நிதியினை நிலை நாட்டுங்கள் போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்; கொலையாளியை விரைவாக கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த உதவுங்கள் என ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும் முகமாக மகஜர் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனிடம் கையளிக்கப்பட்டது.
அவ்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது!
'எமது சக உத்தியோகத்தரான சச்சிதானந்தம் மதிதயன் அவர்கள் 2015.05.26ம் திகதி அன்று இனந்தெரியாத ஆயுததாரிகளால் மண்டூரில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். குடும்பஸ்தரான இவர் கடந்த 1999ம் ஆண்டிலிருந்து சமூக சேவை உத்தியோகத்தராக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த வேளையிலேயே இத்துக்ககரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தினை வண்மையாக கண்டிக்கின்றோம்.
நாட்டில் வன்செயல்கள் ஓய்ந்து நல்லாட்சி நிலவும் இவ்வேளையில் இவ்வாறான ஒரு துப்பாப்பிச் சூடு நிகழ்ந்துள்ளது. மழை ஓய்ந்தும் துவானம் முடியவில்லை என்பது போல இந்நிலை காணப்படுகின்றது.
எனவே இவ்வாறான குற்றவாளிகளை வளரவிடாது உடனடியாக கொலைக்கான காரணத்தினையும், சூத்திதாரிகளையும் கண்டுபிடித்து தண்டனை வழங்குவதன் மூலம்  நாட்டின் நல்லாட்சியை உறுதிப்படுத்துவதுடன், அரச உத்தியோகத்தரிடையேயும், பொதுமக்களிடையேயும் காணப்படும் பீதியை தடுத்து நிறுத்த உதவுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்” என அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.'நன்றி வீரகேசரி










பசில் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு


27/05/2015 திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்க மறுத்த கடுவலை நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் ஜுன் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.
முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உட்பட பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜயதிலக்க மற்றும் திவிநெகுமவின் முன்னாள் பணிப்பாளர் கே.ரணவக்க, மேலதிக பணிப்பாளர் பந்துல திலக்கசிறி ஆகியோருக்கும் ஜுன் 10 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தும் பகுதியில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் உடல்நிலை கருதி பிணை வழங்குமாறு அவரது வழக்கறிஞர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
எனினும் அதனை நிராகரித்த நீதவான் தம்மிக ஹேமபால விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்தார்.  நன்றி வீரகேசரி









ஷிராந்திக்கு அழைப்பு



27/05/2015 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவை 
நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு தங்காலை பொலிஸாரால் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் இணையத்தளத்தில் தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி








யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதியாக இளஞ்செழியன் நியமனம்

28/05/2015 யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­யாக நீதி­ப­தி­ எம்.இளஞ்­செ­ழியன் பிர­தம நீதி­ய­ரசர் கே.சிறி­ப­வனால் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். ஜுன் மாதம் முத லாம் திகதி முதல் அமு­லுக்கு வரும் வகையில் இந்த நிய­மனம் செய்­யப்­பட்­டுள்­ளது.

செம்­மணி புதை­குழி வழக்கில் யாழ்ப்­பா­ணத்தில் விசேட நீதி­ப­தி­யாக நிய­மனம் செய்­யப்­பட்டு, 1999 இலி­ருந்து 2000 ஆம் ஆண்டு வரை யாழ்ப்­பா­ணத்தில் இவர் கட­மை­யாற்­றி­யி­ருந்தார்.
அதன் பின்னர் 3 வரு­டங்கள் மன்னார் மாவட்ட நீதி­ப­தி­யா­கவும் பின்னர் 2008 ஆம் ஆண்டு வரை­யி­லான யுத்த காலத்தில் வவு­னியா மாவட்ட நீதி­ப­தி­யா­கவும் நீதி­பதி இளஞ்­செ­ழியன் கட­மை­யாற்­றி­யி­ருந்தார்.
அத­னை­ய­டுத்து 2008 ஆம் ஆண்டு அவர் திரு­கோ­ண­மலை மேல் நீதி­மன்ற ஆணை­யா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார்.  திரு­கோ­ண­ம­லையில் 2008 முதல் 2010 ஆம் ஆண்டு வரையில் கட­மை­யாற்­றிய அவர், பின்னர் கல்­மு­னைக்கு மாவட்ட நீதி­ப­தி­யாக இடம் மாற்றம் பெற்­றி­ருந்தார்.
கல்­முனை மாவட்ட நீதி­ப­தி­யாக 2010 முதல் 2012 ஆம் ஆண்டு வரையில் கட­மை­யாற்­றிய பின்னர், 2012 ஆம் ஆண்டு அவர் மீண்டும் திரு­கோ­ண­மலை மேல் நீதி­மன்ற ஆணை­யா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டு அங்கு 2014 ஆம் ஆண்டு வரை மேல் நீதி­மன்ற ஆணை­யா­ள­ராகக் கட­மை­யாற்­றினார்.
அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு கல்­முனை மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, அவர் தற்­போது அங்கு கட­மை­யாற்றி வரு­கின்றார். இப்­போது பிர­தம நீதி­ய­ரசர் அவரை எதிர்­வரும் முதலாம் திகதி முதல் யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­யாக நியமித்திருக்கின்றார்.
மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.    நன்றி வீரகேசரி









No comments: