திருவெம்பாவை திருவிழா & ஆருத்ரா தரிசனம் ஜனவரி 4, 2025 சனிக்கிழமை முதல் திங்கள் வரை ஜனவரி 13, 2025

 




























ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றேநம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்சித்தம் களிகூர நீரொருகால் ஓவாநெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்துஅணையாள் விண்ணோரைத் தான் பணியாள்பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடிஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.


அவ்வப்போது அவள், "என் இறைவா" என்று உச்சரிக்கிறாள், இதனால் அவள் வாய் நம் இறைவனின் மகிமையின் புகழ்ச்சியில் ஒருபோதும் மனம் தளராது! மனம் மகிழ்ந்து, கண்ணை நனைக்கும் நீண்ட கண்ணீரை நிறுத்தாமல், ஒருமுறை கூட இவ்வுலகிற்கு வராமல், விண்ணுலக சக்திகளுக்கு தலைவணங்காமல், எம்பெருமானுக்கு இப்படிப் பைத்தியமாகிறது. இப்படி அடிமைகளை அழைத்துக் கொள்பவர், அந்த வல்லுனரின் பாதம், அலங்கரிக்கப்பட்ட மார்பகங்களை உடைய பெண்களே, நாங்கள் பாடி, மலர் நீரோட்டத்தில் நீந்துவோம்.


திருவெம்பாவை:

பேர்த் பால முருகன் கோவில் - தைப்பொங்கல் & மகரஜோதி 14/01/2025

 


ஸ்ரீ சாய் காயத்ரி பீடம்

 













சுடரி - 18/01/2025

 

Sudari tickets: 

பரந்த வானும் விடியுது !

 





















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 




நீல வானில் வெண்ணிலா
நீந்தி நீந்திப் போகுது
சோலைக் குயில்கள் பாடுது
சொக்க வைத்து நிற்குது 

காலை வேளை வந்ததை

கூவிக் கோழி சொல்லுது
கதிரவனும் கண் திறந்து
ஒளியை வீசி நிற்கிறான்

பூக்கள் விரியத் தொடங்குது

புள்ளி மான்கள் துள்ளுது
பனித் துளிகள் அகலுது
பரந்த வானும் விடியுது

தேனை உண்ண வண்டுகள்

பூவை நாடிப் பறக்குது
தேன் குடித்த வண்டுகள்
திசை அறியா மயங்குது 

திருவெம்பாவையும் மார்கழியும்



                          

             
       
















மகாதேவஐயர்
 ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .. அவுஸ்திரேலியா 




   மார்கழி மாதத்தைப் பீடை பிடித்தமாதம் என்று சொல்லி - சுபநிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்த்து  விட்ட நிலையினைக் காண்கின்றோம். இது பற்றிய விளக்கத்தை நாம் அறிந்து கொள்ளுதல் அவசியமானதே. பல பெயர்கள் காலத்தின் போக்கால் கருத்து மாறுபட்டு வேறு ஒரு பொருளை உணர்த்துவது நடந்தே வந்திருக்கிறது." ஒப்பிலி அப்பன்" என்னும் சுவாமியின் பெயரை உப்பிலி அப்பன் என மாற்றி - அந்த சுவா மிக்கு உப்பில்லாத பொருட்களையே நிவேதனம் செய்யும் வழக்கம் நாளடைவில் ஏற்பட்டுவிட்டது.அதே போன்றதே மார்கழி மாதம் பற்றியதுமாகும்." பீடுடைய மாதம்" என்பது பீடை உடைய மாதமாக்கப் பட்டு விட்டது.பீடு என்றால் பெருமையானதுஉயர்வானது என்பது பொருளாகும்.
   திருவாதிரை நட்சத்திரம் " ஆருத்ரா " என சமஸ்கிருதத்தில் வழங்கப்படுகின்றது.சிவனையும் ஆதிரை யான் எனக் குறிப்பிடும் வழமையும் எமது சமயத்தில் இருக்கிறது.மார்கழியில் வரும் திருவாதிரை நட் சத்திரதுக்கு முந்திய பத்து நாட்களும் திருவெம்பாவையாகக் கருதி திருவாதிரை இடம்பெறும் பத்தாம் நாளை " ஆருர்த்தா " தரிசனம் எனப் போற்றி சிவனை வழிபடும் வழக்கமும் இந்த மார்கழிக்கே உரியது என்பதும் முக்கியமானதாகும்.அதுமட்டுமல்ல சம்பந்தப் பெருமான் அவதாரம் செய்ததுகூட மார்கழித் திரு வாதிரை என்றும்சேந்தனார் திருப்பல்லாண்டு பாடி அசையாத தேரை அசையச் செய்து சிவனது தேரினை வலம்வரச் செய்ததும் மார்கழித்திருவாதிரை என்றும்வியாக்கிரபாதர்.. பதஞ்சலி ஆகிய சிவனருள் பெற்ற முனிவர்களுக்குச் சிவன் தனது அருட் கூத்தினை நிகழ்த்திக் காட்டியதும் கூட மார்கழித் திருவாதிரையி ல்த்தான் என்றும் அறியக் கிடக்கின்றது. இந்த வகையிலும் மார்கழி மாதம் முக்கியத்துவம் மிக்கதாகவும் கொள்ளப் படுகின்றது.

மெல்பேண் மேடையில் எல்லோரையும் கவர்ந்த "சிலப்பதிகாரம்" ! -சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா-

 அவுஸ்திரேலியாவில், விக்ரோறிய மாநிலத்தில் உள்ள பாரதிபள்ளி


தயாரித்து வழங்கிய, “சிலப்பதிகாரம்" நாடக ஆற்றுகையின் அரங்கேற்ற நிகழ்ச்சிகள் கடந்த 2024 டிசெம்பர் 6 ஆம், 8ஆம் திகதிகளில் விக்டோரியாவில், டண்டினோங்க் நகரத்தில் அமைந்துள்ள, ட்றம்ப் எனப்படும் அழகிய உள்ளரங்கில் நடைபெற்றன. இந்த நாடக ஆற்றுகை பற்றிய எனது பார்வையைப் பதிவுசெய்வதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் முழுவதையும்


உரைவடிவில் எழுதியும், உரைச்சித்திரமாக வெளியிட்டும்,  சிலப்பதிகாரம் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியும், பட்டி மன்றங்களை, வழக்காடு மன்றங்களையும் நடத்தியும் உள்ளவன் என்பதால், அந்த ஒப்பற்ற காப்பியத்தில் எனக்குள்ள ஒரளவு பரிச்சியத்தின் பின்னணியில் இந்த நிகழ்ச்சி எப்படி  இருக்கப்போகின்றது என்ற ஆர்வத்துடனும், அங்கலாய்ப்புடனும் இரண்டாம் நாள் அரங்கேற்றத்தின்போது, மண்டபத்தின் மத்தியில் வசதியான பார்வைக் கோணத்தில் எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தேன்.

 குறிப்பிட்டபடி, சரியாக பி.. 5.30 மணிக்கு, நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் அறிவித்தல் கம்பீரக் குரலில் ஒலித்தது. மங்கல விளக்கேற்றும் சம்பிரதாயமான நிகழ்ச்சி சில நிமிடங்களில் நிறைவு பெற்றதும்,

" திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!

கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்று இவ்

அம்கண் உலகு அளித்த லான்"

என்று தொடங்கும், சிலப்பதிகாரத்தின் மங்கல வாழ்த்துப் பாடல், பின்னணிப் பாடகர்களின் கணீரென்ற குரலும், பக்கவாத்தியங்களின் இசையும் கலந்து இனிமை ததும்ப மண்டபத்தில் எழுந்து, பார்வையாளர்களை இருக்கைகளில் நிமிர்ந்து உட்காரவைத்தது. பாடலுக்குப் பொருத்தமாக மேடையின் பின்னணியில் தோன்றிய அழகான காட்சி, இது நடப்பது திரையிலா அல்லது தரையிலா என்று அடையாளம் காண்பதற்கு அரியதாக, இனிமையான பாடலுக்குப் பொருத்தமாக இருந்தது. முறையான நல்ல தொடக்கம்!  

NSW மாநிலத்தின் தமிழ் மொழிக் கல்வியில் புதிய பாடத்திட்டம்

 NSW மாநிலத்தின் தமிழ் மொழிக் கல்வியில் புதிய பாடத்திட்டம் குறித்துக் கல்விச் சமூகத்தில் இருந்து திரு.திருநந்தகுமார் அவர்கள் வழங்கும் விரிவான பகிர்வைக் கேட்கலாம்.


YouTube வழி கேட்க




Spotify வழி கேட்க


இந்தப் பகிர்வில் நவீன மொழிகளுக்கான பாடத்திட்டம் என்ற நோக்கில்
K  to 10 வரையான வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தினை அமல்படுத்தியதன் நோக்கம் என்ன?

பாடத்திட்டத்தில் நிகழ்ந்த மாற்றத்தில் முன்னர் இருந்த ஒன்பது அடைவுகளுக்குப் பதில் மூன்று அடைவுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது, இந்த மாற்றம் எத்தகையது?

சிட்னியில் தோழர் சி.மகேந்திரன் வழங்கிய "தமிழரின் பண்பாட்டு அரசியல்" பகிர்வும், உரையாடலும்

 சிட்னியில் தோழர் சி.மகேந்திரன் வழங்கிய "தமிழரின் பண்பாட்டு அரசியல்" பகிர்வும், உரையாடலும்


நின்றேனும் கொல்லும் தீங்கு (03): (திகில் தொடர்)



- சங்கர சுப்பிரமணியன்.




மாலைஆறு மணிக்கு ஒடுக்கத்தூர் முருகன் 

கோவிலுக்கு வருமாறு மெஸேஜ் இருந்ததுஅலசூர்

ஏரிக்கரையில் சிவாஜி நகருக்கு ருகில் அந்த சின்ன முருகன் கோவில் அமைதி தழுவும் டமாகக் 

காட்சி அளித்ததுஐந்தே முக்கால் மணிக்கே வந்து 

காத்திருந்தேன்

 

சரியாக ஆறு மணிக்கு ஆட்டோவில் ந்து 

இறங்கியவள் ஓடோடி என்னிடம் வந்து,

 

"சிவாவந்து நேரமாகி விட்டதா?" என்று கேட்டாள்.

 

"பதினைஞ்சு நிமிடம்தான் ஆச்சுசரிசொல்லு.

அவசரமா வரச்சொன்னியே என்ன காரணம்?"

 

"அவசரம் தான்அப்பாவுக்கு எதிர்பாரா விதமா 

டிரான்ஸ்பர் ஆயிடுச்சுஇன்னும் ஒரு மாதம் கூ இங்க 

இருக்க மாட்டோம்அதனால் சீக்கிரமே வீட்டில

நம்மைப் பற்றி பேசிடுங்கஇனிமேலும் இதை என்னால்மறைக்க முடியது." என்றாள்.

“கலாநிதி த.கலாமணியின் ஆளுமையும் புலமைத்துவமும்”



https://youtu.be/bH_d8HYIbyg?si=LbVKT28M8JP3iMtc

 

https://www.ilakkiyaveli.com

கனவு காணும் உலகம் – கட்டுரை - கே.எஸ்.சுதாகர்


பன் நெடுங்காலமாக இலங்கையில் வாழ்ந்து வரும் எமது மக்கள்---மூதாதையர்கள்---ஆவணங்களைக் பாதுகாத்து வைப்பதிலும், பதிவு செய்வதிலும் தவறிவிட்டார்கள். யாழ்.நூலகம்  எரிந்து போனதும், போர் காரணமாக பல ஆவணங்கள் அழிந்து போனமையும் துர்ப்பாக்கியமாகும்.

அவுஸ்திரேலியாக்கண்டம் 200 வருடங்கள் பழமை வாய்ந்தது. ஆனால் அதற்கு முன்னரே அங்கு ஆதிவாசிகள் வசித்து வருகின்றார்கள். அவர்களுக்கு பல இன்னல்கள் நேர்ந்த போதிலும், ஓரளவிற்கு அவர்கள் தமது ஆவணங்களை பாதுகாத்து வைத்திருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். சமீபத்தில்கூட அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலப்பரப்புகளில் சிலவற்றை அவுஸ்திரேலிய அரசு மேற்கு அவுஸ்திரேலியாவில் மீளக் குடுத்திருக்கின்றது. அவுஸ்திரேலிய முன்னைநாள் பிரதமர் ஹெவின் ரட் 2008 ஆம் ஆண்டு, ஆதிக்குடிகளுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களை ஒரு மனித உரிமை மீறல் என அறிவித்து அவர்களிடம் மன்னிப்புக் கோரியிருந்தார்.

இந்தக் கட்டுரை மெல்பேர்ணில், டண்டினோங் மலைச்சாரலில்


இருக்கும் ஆதிவாசிகள் பற்றிய சிற்பங்கள் ஓவியங்களைப் பற்றிச் சொல்கின்றது. ஆனால் இந்தப் படைப்புகளுக்குச் சொந்தக்காரர் ஆதிவாசி அல்ல. வில்லியம் பில் றிக்கெற்ஸ் (William Bill Ricketts) எனப்படும் வெள்ளையினத்தவர் ஆவார்.

வில்லியம் பில் றிக்கெற்ஸ்…

மெல்பேர்ணில் சனத்தொகைப் பெருக்கம் மிகவும் குறைவாக இருந்த காலப்பகுதியில், தங்கவேட்டை காரணமாக பலர் புலம்பெயர்ந்து வரத் தொடங்கியிருந்தார்கள்.

இவரது தாத்தா வில்லியம் றிக்கெற்ஸ் 1857 ஆம் ஆண்டளவில் தனது மனைவி மேரி ஆன் சகிதம் பிரித்தானியாவில் இருந்து மூன்று நான்கு மாத கடல் பிரயாணத்தின் பின்னர் மெல்பேர்ண் வந்து சேர்ந்தார். இவர்களுக்கு 12 பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் அல்பிரட் என்பவர் சுசான் என்னும் பெண்மணியைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு 5 பிள்ளைகள் பிறந்தார்கள். கடைசிப் பிள்ளையாக பில் 1898 ஆம் ஆண்டு பிறந்தார். இவர்கள் றிச்மண்ட்  என்னும் பகுதியில் குடியிருந்தார்கள்.

பில் தனது ஆரம்பக்கல்வியில் பெரிதும் நாட்டம் கொள்ளவில்லை. பாடசாலையை விடுவது என்று தீர்மானித்ததும் தமது உறவினரின் நகை செய்யும் தொழிற்சாலை ஒன்றில் பயிலுனராகச் சேர்ந்தார்.  அப்போது அவருக்கு வயது பதின்னான்கு. இசையில் ஆர்வம் கொண்ட இவர் வயலின் வாசிப்பதில் கெட்டிக்காரர்.

வில்லியம் பில் றிக்கெற்ஸ், 1935 ஆம் ஆண்டளவில் மவுன்ற் டண்டினோங்  பகுதியில் நாலரை ஏக்கர் நிலப்பரப்பை வாங்கினார். அது முதற்கொண்டு அங்கேயே வசிக்கலானார். இயற்கை எழில் கொஞ்சும் சரிவுப்பாங்கான அந்தப்பகுதியின் பாதை மருங்கிலும் குகைகளிலும் களிமண்ணினால் ஆன உருவங்களைச் செய்து வைத்தார்.

ஆதிவாசிகளின் நம்பிக்கை வாழ்க்கை முறைகளினால் ஈர்க்கப்பட்ட மிகச்சில வெள்ளை இனத்தவர்களில் இவரும் ஒருவர். விலங்கு தாவரம் மனிதன் இயற்கை – இந்தப்பின்னணியில் இவரது படைப்புகளின் தொனி அமைந்திருக்கும். இவரது கற்பனையில் உருவாகும் படைப்புகளிற்கு பூர்வீகக்குடிகளின் சின்னங்களை குறியீடாகப் பாவித்துள்ளார். இவரது காப்பகத்தின் முக்கியமான படைப்புகள் ஆதிவாசிகளின் உருவங்களாகும். அவை ஆதிவாசிகளினதும், அவர்களுக்கும் பூமிக்குமிடையேயான பரிசுத்தமான தொடர்புகள் பற்றியனவுமாகும்.

13வது திருத்தத்தை என்ன செய்வது?

 

28 Dec, 2024 | 06:55 PM
image

வீரகத்தி தனபாலசிங்கம் 

பதின்மூன்றை துரதிர்ஷ்டம் வாய்ந்த இலக்கம் என்று சொல்வார்கள். அதனால் தான் இலங்கையின் அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்தை 37 வருடங்களாக நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கிறதோ தெரியவில்லை.

அண்மையில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின்போது அவருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு புதுடில்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த  இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதின்மூன்றாவது திருத்தம் குறித்து எதையும் கூறிப்பிடத்  தவறியதை அடுத்து அது குறித்து  ஒரு சலசலப்பு ஏற்பட்டது. ஊடகங்களும் அரசியல் அவதானிகளும்    காட்டிய அளவுக்கு  தமிழ் அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் அதில் அக்கறை காட்டவில்லை.  

இலங்கையின் முன்னைய ஜனாதிபதிகளுடனான  செய்தியாளர்கள் சந்திப்பில் இலங்கை அரசாங்கம் 13  வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தவறாமல்  வலியுறுத்திவந்த   மோடி இந்த தடவை அதை தவிர்த்துக்கொண்டது பிரத்தியேகமான வித்தியாசமாக தெரிந்தது. 

ஆனால், இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மோடி  கூறியிருப்பதால் பதின்மூன்றாவது திருத்தம் குறித்து கூறாதது ஒரு பிரச்சினை அல்ல என்றும் அரசியலமைப்புக்குள் தான் அந்த திருத்தமும் இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

இந்திய பிரதமர் வேறு எந்த நாட்டினதும் தலைவர்களைச் சந்திக்கும்போது அவர்களிடம் தங்களது நாடுகளின் அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துமாறு கேட்பதில்லை. சொந்த அரசியலமைப்பை முழுமையாக  நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மற்றைய நாடுகளின் தலைவர்களுக்கு ஒரு நாட்டின் தலைவர் கூறவேண்டியதுமில்லை. 

ஆனால், இலங்கை ஜனாதிபதிகளிடம் இந்திய தலைவர்கள் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் கேட்பதற்கு 1987  ஜூலை இந்திய --  இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு பிறகு மாகாணசபைகளை அறிமுகப்படுத்துவதற்காக  அரசியலமைப்புக்கு கொண்டு வரப்பட்ட 13  வது திருத்தம் மாத்திரமே  காரணம். அதனால் ஜனாதிபதி திசாநாயக்க முன்னிலையில் அந்த திருத்தம் பற்றி குறிப்பிடுவதை மோடி தவிர்த்தமைக்கு ஒரு பிரத்தியேக காரணம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.