எப்படி இருக்கப்போகிறார் புதிய ஜனாதிபதி?


25/11/2019  ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் வெற்­றி­யுடன், துட்­ட­கை­மு­னுவின் வர­லாறு மீண்டும் ஆரா­யப்­பட்டு வரு­கி­றது.
யார் இந்த துட்­ட­கை­முனு, அவ­ருக்கு ஏன் கோத்­தா­பய ராஜபக் ஷ முக்­கி­யத்­துவம் அளிக்­கிறார் என்­றெல்லாம், ஆய்­வா­ளர்கள் ஆராயத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள்.
இதற்கு முக்­கி­ய­மான காரணம், புதிய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ அநு­ரா­த­பு­ரத்தில் உள்ள ருவன்­வெ­லி­சாய விகா­ரையில் பத­வி­யேற்றுக் கொண்­டது தான்.
இலங்­கையின் பெரும்­பா­லான அரச தலை­வர்கள் கொழும்பில் தான் பத­வி­யேற்றுக் கொண்­டி­ருக்­கி­றார்கள். அந்த விதியை உடைத்­த­வர்கள் மூன்றே மூன்று பேர் தான்.
முத­லா­மவர் ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன. இரண்­டா­மவர் ரண­சிங்க பிரே­ம­தாஸ. மூன்­றா­மவர் கோத்­தா­பய ராஜபக் ஷ.
1977ஆம் ஆண்டு பொதுத்­தேர்­தலில் வெற்­றி­பெற்ற ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன, கண்டி தலதா மாளி­கையின் பத்­தி­ரிப்பு மண்­ட­பத்தில் இலங்­கையின் ஏழா­வது பிர­த­ம­ராகப் பத­வி­யேற்றுக் கொண்டார்.
அதற்கு முன்னர், 30 ஆண்­டு­களில் பிர­தமர் பத­வியில் இருந்­த­வர்கள் அனை­வரும் கொழும்­பி­லேயே பத­வி­யேற்றுக் கொண்­டனர்.
தலதா மாளி­கையில் பிர­த­ம­ராகப்  பத­வி­யேற்றுக் கொண்ட ஜே.ஆர் ஜெய­வர்த்­தன, அதற்குப் பின்னர் நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக 1989 ஜன­வரி 1ஆம் திகதி வரை – கிட்­டத்­தட்ட 12 ஆண்­டுகள் பத­வியில் இருந்தார்.
ஜே.ஆருக்குப் பின்னர், 1988 தேர்­தலில் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்ட ரண­சிங்க பிரே­ம­தா­ஸவும், தலதா மாளி­கையின் பத்­தி­ரிப்பு மண்­ட­பத்­தி­லேயே பதவிப் பிர­மாணம் செய்து கொண்டார்.
அவரே, கொழும்­புக்கு வெளியே பத­விப்­பி­ர­மாணம் செய்து கொண்ட முத­லா­வது ஜனா­தி­ப­தி­யாக இருந்தார்.
அதற்குப் பிறகு, கோத்­தா­பய ராஜபக் ஷ அநு­ரா­த­பு­ரத்தில் வர­லாற்றுப் புகழ்­பெற்ற ருவன்­வெ­லி­சாய விகா­ரையில் பதவிப் பிர­மாணம் செய்து கொண்­டி­ருக்­கிறார்.
இது வெறு­மனே ஒரு நிகழ்வு மாத்­தி­ர­மல்ல, இதற்குப் பின்னால் ஒரு வர­லாறு இருக்­கி­றது. அதனை மீள நினை­வு­ப­டுத்தி, குறிப்­பு­ணர்த்தும் செய்­திகள் பலவும் இருக்­கின்­றன.
கொழும்­பையோ அல்­லது கண்­டி­யையோ விட்டு விட்டு அநு­ரா­த­பு­ரத்தில், அதுவும், ருவன்­வெ­லி­சா­யவில் துட்­ட­கை­முனு மன்­னனின் சிலைக்கு முன்­பாக கோத்­தா­பய ராஜபக் ஷ பத­வி­யேற்றுக் கொண்­டதை சாதா­ரண விட­ய­மாக எடுத்துக் கொள்ள முடி­யாது,
ருவன்­வெ­லி­சாய விகா­ரையைக் கட்­டி­யது, துட்­ட­கை­முனு மன்னன். காமினி அபய என்ற பெயரைக் கொண்ட அரச வம்­சத்தைச் சேர்ந்த இள­வ­ரசன் துட்­ட­கை­மு­னு­வாக போற்­றப்­ப­டு­வ­தற்குக் காரணம், அந்த விகா­ரையைக் கட்­டி­யதால் அல்ல.
சோழ மன்­ன­னான எல்­லா­ளனை தோற்­க­டித்து, அநு­ரா­த­பு­ரத்தை தலை­ந­க­ராக கொண்டு ரஜ­ரட்ட ஆட்­சியை மீள நிறு­வி­யதால் தான், துட்­ட­கை­மு­னு­வுக்கு அந்தப் புகழ் இருக்­கி­றது,
கி.மு 205ஆம் ஆண்டில் எல்­லாளன், அநு­ரா­த­பு­ரத்தில் ஆட்­சி­ய­மைத்­தி­ருந்த நிலையில், கி.மு 161 அல்­லது கி.மு 162இல் விஜி­த­புர போரில், எல்­லா­ளனைத் தோற்­க­டித்த துட்­ட­கை­முனு, கி.மு 137 வரை ஆட்சி செய்­த­தாக மகா­வம்சம் கூறு­கி­றது.
இந்தக் காலத்தில் துட்­ட­கை­முனு தனது ஆட்­சியை இலங்கை முழு­வ­தற்கும் விரி­வு­ப­டுத்திக் கொண்­ட­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.
எல்­லா­ளனைத் தோற்­க­டித்த துட்­ட­கை­முனு, அநு­ரா­த­பு­ரத்தில் எல்­லா­ள­னுக்கு நினைவுச் சின்­னத்தை அமைத்து, அதற்கு அனை­வரும் மரி­யாதை செலுத்த வேண்டும் என்று உத்­த­ர­விட்டான் எனவும் வர­லாற்றுக் குறிப்­புகள் உள்­ளன.
விஜி­த­புர போரில் பெற்ற வெற்­றியை நினைவு கூரும் வகையில் துட்­ட­கை­முனு ருவன்­வெ­லி­சாய விகா­ரையைக் கட்­டி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது. எனினும், அந்த விகாரை கட்டி முடிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னரே, துட்­ட­கை­முனு கி,மு 137 இல் மர­ண­மா­ன­தாக கூறப்­ப­டு­கி­றது.
தமிழ் மன்­ன­னான எல்­லா­ளனைத் தோற்­க­டித்த துட்­ட­கை­மு­னுவின் சிலைக்கு முன்­பாக, கோத்­தா­பய ராஜபக் ஷ பத­வி­யேற்றுக் கொண்­டது மாத்­தி­ர­மன்றி, துட்­ட­கை­மு­னுவின் சிலைக்கு முன்­பாக தாம் பத­வி­யேற்­ப­தற்­காக பெருமை கொள்­வ­தாக தனது உரை­யிலும் குறிப்­பிட்­டி­ருந்தார்.
பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்னர் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்ட போரை வழி­ந­டத்­தி­யவர் என்று உரிமை கோரு­பவர் கோத்­தா­பய ராஜபக் ஷ.
அவரே போரை வென்­றவர் என்ற அடை­யா­ளப்­ப­டுத்தும் நோக்­கி­லேயே ‘கோத்­தாவின் போர்’ என்ற நூல் வெளி­யி­டப்­பட்­டது.
தமி­ழர்­க­ளுக்கு எதி­ராகப் போரை நடத்­த ­வில்லை என்றும், பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரா­கவே போரை நடத்­தி­ய­தா­கவும், கோத்­தா­பய ராஜபக் ஷ கூறிக் கொண்­டாலும், எல்­லா­ளனைப் போலவே, வடக்கு, கிழக்கில் செல்­வாக்குப் பெற்ற ஒரு தலை­வ­னாக- – தள­ப­தி­யாக விளங்­கிய புலி­களின் தலைவர் வே.பிர­பா­க­ரனைத் தோற்­க­டித்­தி­ருந்தார்.
அதனை மையப்­ப­டுத்­தியே அநு­ரா­த­பு­ரத்தில்- – ஏற்­க­னவே ஒரு தமிழ் மன்­ன­னான எல்­லாளன் தோற்­க­டிக்­கப்­பட்ட இடத்தில்,  அவனைத் தோற்­க­டித்த துட்­ட­கை­மு­னுவின் சிலைக்கு முன்­பாக பத­வி­யேற்றுக் கொண்­டி­ருக்­கிறார் அவர்.
அதுவும், அவர் தமிழ், முஸ்லிம் மக்­க­ளினால் ஆத­ரிக்­கப்­பட்ட ஒரு தலை­வ­ராக பத­வி­யேற்றுக் கொள்­ள­வில்லை. அவரை தெரிவு செய்­த­வர்கள் முற்­று­முழு­தாக சிங்­கள பௌத்­தர்­களே.
தாம் சிங்­கள பௌத்த வாக்­கு­களால் தான் வெற்றி பெற்­றி­ருந்தேன் என்­பதை அவர் பெரு­மை­யோடு தனது முத­லா­வது உரையில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.
ஜனா­தி­பதித் தேர்­தலில் சிறு­பான்­மை­யி­னரின் ஆதிக்­கத்தை உடைத்து, தனி சிங்­கள பௌத்த வாக்­கு­களால் வெற்­றியை பெற்­றதை அநு­ரா­த­புர மண்ணில் பத­வி­யேற்றுக் கொண்­டதன் மூலம் அவர் இன்னும் பெரு­மைக்­கு­ரி­ய­தாக மாற்ற முற்­பட்­டி­ருக்­கிறார்.
தம்மை ஒரு நவீன துட்­ட­கை­மு­னு­வாக சித்­தி­ரித்துக் கொள்­வது கோத்­தா­பய ராஜபக் ஷவின் இலக்­காக இருக்­கலாம். அல்­லது துட்­ட­கை­மு­னுவைப் போன்று ஒரு ஆட்­சியை நிறு­வு­கின்ற- வர­லாற்றில் இடம்­பி­டிக்­கின்ற இலக்கு அவ­ருக்குள் இருக்கக் கூடும்.
ஏனென்றால், துட்­ட­கை­மு­னுவின் ஆட்சி அநு­ரா­த­புர அரசின் பொற்­கா­ல­மாக – பௌத்த மதத்தின் எழுச்சிக் கால­மாக பார்க்­கப்­ப­டு­கி­றது. நாடெங்கும் துட்­ட­கை­மு­னுவின் ஆட்சி பர­வி­யி­ருந்­தது.
சிங்­கள பௌத்த  பேரெ­ழுச்­சியின் அடை­யா­ள­மாக இன்­றைக்கும் என்­றைக்கும் துட்­ட­கை­முனு போற்­றப்­படும் நிலை உள்­ளது.
இவ்­வா­றா­ன­தொரு வர­லாற்று பின்­ன­ணியில் தான் கோத்­தா­பய ராஜபக் ஷவும், தன்னை நவீன துட்­ட­கை­மு­னு­வாக நிலை­நி­றுத்திக் கொள்ள எத்­த­னிப்­ப­தாகத் தெரி­கி­றது.
விடு­தலைப் புலி­களைத் தோற்­க­டித்த வர­லாற்றுப் பெரு­மையை தனக்­குக்­கு­ரி­ய­தாக்கிக் கொண்டு, இப்­போது, சிங்­கள பௌத்த மக்­களின் ஏகோ­பித்த ஆத­ரவைப் பெற்ற தலை­வ­ராக அவர் எழுச்சி பெற்­றி­ருக்­கிறார்.
அவ­ரது இந்த எழுச்­சியைக் கொண்டு எதிர்­கா­லத்தில் எதனைச் செய்யப் போகிறார் என்­பது தான் முக்­கி­ய­மான கேள்வி.
துட்­ட­கை­முனு தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான மனோ­நி­லை­யி­லேயே சிறு வயதில் இருந்து வளர்ந்து வந்­த­தா­கவும், அதன் தொடர்ச்­சி­யா­கவே, எல்­லா­ளனை தோற்­க­டித்து அநு­ரா­த­புர அரசை நிறு­வி­ய­தா­கவும் வர­லாற்றுக் குறிப்­புகள் உள்­ளன.
ஆனாலும் தன்னால் தோற்­க­டிக்­கப்­பட்ட எல்­லா­ள­னுக்கு நினைவுச் சின்னம் அமைத்து, அதனை அனை­வரும் வணங்க வேண்டும் என்று கட்­ட­ளை­யிட்ட துட்­ட­கை­மு­னுவின் செயல் இன்று வரை பாராட்­டப்­படும் ஒன்­றா­கவே இருந்து வரு­கி­றது.
நவீன துட்­ட­கை­மு­னு­வாக உரு­வெ­டுக்கும் கோத்­தா­பய ராஜபக் ஷவும் அவ்­வா­றான ஒரு­வ­ராக இருக்கப் போகி­றாரா அல்­லது, தனி சிங்­கள பௌத்த மக்­களின் தலை­வ­னா­கவே செயற்­படப் போகி­றாரா என்ற கேள்­வியே பிர­தா­ன­மாக இருக்­கி­றது.
அவர் தனது முத­லா­வது உரையில், தான் சிங்­கள பௌத்த வாக்­கு­களால் தெரிவு செய்­யப்­ப­டுவேன் என்று தெரிந்­தி­ருந்தும்- அந்த வெற்­றியில் பங்­கா­ள­ரா­கு­மாறு தமிழ், முஸ்­லிம்­களை அழைத்தேன், ஆனால் பயன் கிடைக்­க­வில்லை என்று கூறி­யி­ருந்தார்.
எனினும், வாக்­க­ளித்­த­வர்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி வாக்­க­ளிக்­கா­த­வர்­க­ளுக்கும் தாம் ஜனா­தி­ப­தி­யாக செயற்­படப் போவ­தா­கவும், தம்­முடன் இணைந்து கொள்ள முன்­வ­ரு­மாறும் அவர் அழைப்பு விடுத்­தி­ருக்­கிறார்.
இந்த அழைப்பு எப்­ப­டிப்­பட்ட மனோ­நி­லையில் இருந்து விடுக்­கப்­ப­டு­கி­றது என்­பது முக்­கியம்.
10 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் போரில் வெற்­றி­யீட்­டிய பின்னர் மஹிந்த ராஜபக் ஷவும், பயங்­க­ர­வா­தத்தை தோற்கடித்து விட்டோம், இனி எங்களுடன் இணைந்து செயற்பட வாருங்கள் என்று தான் கூறினார்.
ஆனால் அவர் தமிழ் மக்களை அரவணைத்துச் செல்லவோ, அவர்களுக்கான உரிமைகளை வழங்கவோ தயாராக இருக்கவில்லை.
வெற்றியின் மேலாதிக்கத்தில் இருந்து தமிழர்களை ஆட்சி செய்யவே விரும்பினார்.
அதனால் தான், அவர், 2009இற்குப் பின்னர் தமிழர்களால் ஒவ்வொரு தேர்தல்களிலும் தோற்கடிக்கப்பட்டு வருகிறார். கோத்தாபய ராஜபக் ஷவைக் கூட தமிழர்கள் நம்புகின்ற மனோநிலையில் இல்லை என்பதை தேர்தலின் மூலம் காட்டியிருந்தனர்.
ஏனென்றால், எல்லாளனைத் தோற்கடித்த பின்னர் துட்டகைமுனு நடந்து கொண்டது போல, மஹிந்த ராஜபக் ஷவோ, கோத்தாபய ராஜபக் ஷவோ நடந்து கொள்ளவில்லை.
இப்போது, கோத்தாபய ராஜபக் ஷ தமிழர்களை மாத்திரமன்றி முஸ்லிம்களையும் அரவணைத்துச் செல்லும் ஒருவராக மாறுவாரா அல்லது சிங்கள  பௌத்த மேலாதிக்கத்தின் அடையாளச் சின்னமாக நிலைபெறப் போகிறாரா ?- பொறுத்திருந்து பார்க்கலாம்.
- என். கண்ணன் - நன்றி வீரகேசரி 












No comments: