மண்ணிலே வாழ்கின்ற மனிதரெல்லாம் நாளும்
கருத்துடன் மனமதில் இருத்த வேண்டும் !
பெண்மையை பழிக்கின்ற செயல்களை என்றுமே
மண்ணுக்குள் புதைந்திட செய்யவேண்டும் நிதம்
புண்படும் வகையிலே பேசிடும் போக்கினை
புறமெனத் தள்ளியே விடுதல் வேண்டும் !
அன்புடன் பேசிடும் ஆற்றலை யாவரும்
அகமதில் இருத்திட விரும்ப வேண்டும்
அறமதை செய்திட நினைத்திடும் பாங்கினை
அனைவரும் ஏற்றிட முனைதல் வேண்டும் !
துட்டராய் இருப்பாரை காணாது என்றுமே
தூங்காமல் விளிப்புடன் இருத்தல் வேண்டும்
முட்டியே மோதிடும் குணமதை வாழ்க்கையில்
வெட்டியே எறிந்துமே நிற்றல் வேண்டும் !
No comments:
Post a Comment