.
பசிக்கு சோறில்லை
பார்க்க ஆளில்லை
குடிக்க கூழில்லை
படிக்க முடியல்லை
வன்னி மண்ணில
வாழ வழியில்லை
போரின் கொடுமையில்-மண்
வீழ்ந்து கிடக்கு
வீடு குளங்களும்
அழிஞ்சு போச்சு
புலம்பெயர்ந்து போனவர்
வந்து போகிறார்-சிலர்
அள்ளிக் கொடுத்துமே
அரவணைக்கிறார்
பார்த்துப் பார்த்துமே
பரிதவிக்கிறார்-சிலர்
அரவணைப்பாதாய்
அள்ளிப் புளுகிறார்
வெயில் காலமாம்
விடுமுறைக்கு வருகிறார்
காட்சிப் பொருளாக-எமை
கண்டு கழிக்கிறார்
அன்னையும் இல்லை
தந்தையும் இல்லை
அனாதை என்ற பெயர்
சூட்டி அழைக்கிறார்
போரின் கொடியரை
அணுகி வாழ்வதா
போனவர்களை
நினைத்து அழுவதா
பாம்பின் வாலென்று-எதனை
பார்ப்பது-மீனின்
தலை என்று –எதனை
ஏற்பது-எங்கள்
இழிநிலை எங்கு உரைப்பது.
எவர் வந்து எமக்கு
வாழ்வு தருவரோ.....
கவிஞர் ஆவூரான்.
No comments:
Post a Comment