“அன்சாக்”தினம் தமிழர் கூட்டமைப்பினாலே விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

.

சிட்னியிலே முதன்முதலாக “அன்சாக்தினம் தமிழர் கூட்டமைப்பினாலே விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி அங்கு ஒலித்த தமிழ் வாழ்த்துச் செய்தயை நேயர்களுடன் பகிர்கிறோம்---




 “அன்சாக்” விழாச்சிறக்க ஒற்றுமையாய் வாழ்த்துவமே!

                    --------------  பல்மருத்துவ கலாநிதி இளமுருகனார் பாரதி

       ஆண்டாண்டாய் ஏப்ரல்இரு பத்தைந்தாம் நாளதனில்
             “அன்சாக்”என அரசாங்கம் நினைவுநாளாய்ப் பெயரிட்டு
       கூண்டோடு வீரசுவர்க் கமடைந்த தியாகிகளைக்
              கோலாகலக்  கொண்டாட்ட மாகநினைவு கூருதம்மா!
       மாண்டவீரர் தியாகந்தனை மதித்தேயவர் சமாதிகட்கு
             மலர்வளையஞ் சாத்திமௌன அஞ்சலிசெய் (து)உரையாற்றி
       வேண்டுமட்டும் அன்னாரின் நாட்டுப்பற்றை மெச்சிநிற்கும்
             விழாச்சிறக்க ஒற்றுமையாய்ப் பங்கேற்று வாழ்த்துவமே!
     
       கோரப்போர் செய்து“கலப் பொலி” தன்னைக் கைப்பற்றக்







              கூட்டாக அவுஸ்திரேலியா நி
யுசிலாந்து வீரர்களை
       ஆரவாரத் தொடுசேர்த்;து அணிதிரட்டிப் போர்முனையில்
             அற்புதமாய் எதிரியொடு பொருதிட்ட வேளைதனில்
       தாரத்தையும் பிள்ளையையும் சந்ததியையும் தவிக்கவிட்டுத்
             தாளாத துயரொடு தன்மான வீர ரெண்;ணாயிரம் 
      வீரசுவர்க் கமடைந்த தியாகிகளை நாமின்று
             விருப்போடு நினைவுகூர்ந்து வணங்கியஞ்சலி செய்;திடுவோம்!


  

No comments: