இது யாழ்பாணமா ?அல்லதுகேரளவா ? அல்லது தமிழ் நாட்டு பொள்ளச்சியா?
வலைந்து ஓடும் நீ நிரம்பிய வாய்க்கால் . அதில் துள்ளி குதிக்கும் மீன்கள் . வாய்க்கால் அருகே பசுமை நிறைந்த வயல்கள் . வாய்க்காலின் இரு பக்கத்திலும் ஓங்கி வளர்ந்த சடைத்த பல வருட வயசு உள்ள மரங்கள் வாய்காலுக்கு அருகே ஒரு கோவிலும். A9 பெரும் பாதையும் அமைந்த தென்மராட்சி சாவகச் சேரியில் உள்ள இல்வாரை பகுதி புதிய சுற்றுலா மையமாக உருமாற்றம் அடைகிறது என்றால் நம்புவீர்களா? ஒரு காலத்தில் யாவகர் தேசத்து மன்னன் சந்திரபானுஆட்சி செய்து யாவகர் வாழ்ந்த இடம் இது .மருவி யாவகர் சேரி சாவகச்சேரி ஆயிற்று மகாவம்சத்தில் ,குறிப் பிட்டப்படி ஜாவானிய ஆட்சியாளரான சந்திரபானுவின் படைகள் கி.பி 13 ஆம் நூற்றாண்டில் திருகோமலை ஊடாக உள்ளே நுழைந்தன. மற்றும் அடி குழாய்கள் மற்றும் விஷ அம்புகளைப் பயன்படுத்தி, யாழ்ப்பாணத்தை கைப்பற்றி ஆட்சி செய்தான்.
சொடுக்கி பாருங்கள்
No comments:
Post a Comment