வெட்டாதே என்கிறது மரம்
வெட்டுங்கள் என்கிறது குளம்
தட்டாதே என்கிறது மனம்
தட்டுவேன் என்கிறது குணம்
முட்டாதே என்கிறது மூப்பு
முட்டுவேன் என்கிறது கொழுப்பு
பற்றாதே என்கிறது ஞானம்
பற்றுவேன் என்கிறது மோகம் !
கெடுக்காதே என்கிறது தருமம்
கெடுத்திடு என்கிறது அதர்மம்
நடிக்காதே என்கிறது நட்பு
நடித்திடு என்கிறது துரோகம்
குடிக்காதே என்கிறது சிறப்பு
குடித்திடு என்பது வெறுப்பு
படிக்காதே என்பது இழப்பு
படித்திடு என்பது மதிப்பு !
வெட்டுங்கள் என்கிறது குளம்
தட்டாதே என்கிறது மனம்
தட்டுவேன் என்கிறது குணம்
முட்டாதே என்கிறது மூப்பு
முட்டுவேன் என்கிறது கொழுப்பு
பற்றாதே என்கிறது ஞானம்
பற்றுவேன் என்கிறது மோகம் !
கெடுக்காதே என்கிறது தருமம்
கெடுத்திடு என்கிறது அதர்மம்
நடிக்காதே என்கிறது நட்பு
நடித்திடு என்கிறது துரோகம்
குடிக்காதே என்கிறது சிறப்பு
குடித்திடு என்பது வெறுப்பு
படிக்காதே என்பது இழப்பு
படித்திடு என்பது மதிப்பு !
சொல்லாதே என்கிறது மனது
சொல்லுவேன் என்கிறது நா
கொல்லாதே என்கிறது கருணை
கொல்லுவேன் என்கிறது கயமை
நில்லாதே என்கிறது மதி
நின்றிடு என்கிறது விதி
தள்ளாதே என்கிறது பாசம்
தள்ளிடு என்கிறது மோசம் !
பார்க்காதே என்கிறது உள்ளம்
பார்த்திடு என்கிறது கள்ளம்
கேட்காதே என்கிறது புத்தி
கேட்டிடு என்கிறது கெடுதி
உண்ணாதே என்கிறது உணர்வு
உண்டிடு என்கிறது ஆசை
எண்ணாதே என்கிறது சித்தம்
எண்ணிடு என்கிறது பித்தம் !
No comments:
Post a Comment