ஈழவரைபடம் கூறுவது என்ன ?



09/12/2019 ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வு­களை வெளிப்­ப­டுத்தும் வரை­ப­டத்­துக்கும், விடு­தலைப் புலி­களின் ஈழ வரை­ப­டத்­துக்கும் இடையில் தொடர்­புகள் இருப்­ப­தாக, அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெல கூறி­யி­ருக்­கிறார்.

தேர்தல் முடி­வு­களை அடிப்­ப­டை­யாக வைத்து, கணினி வரை­கலை மூலம் தயா­ரிக்­கப்­பட்ட, வண்ண வரை­ப­டங்கள் பல ஊட­கங்­களில் உலா­வின. ஆனால் யாரும் அதனை அப்­போது ஈழ வரை­ப­டத்­துடன் ஒப்­பீடு செய்­தி­ருக்­க­வில்லை. தேர்­த­லுக்குப் பிறகு, மூன்று வாரங்கள் கழித்து அமைச்சர் ரம்­புக்­வெ­லவே, இவ்­வா­றா­ன­தொரு ஒப்­பீட்டை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.





எதற்­காக அவர் தேர்தல் முடி­வையும், ஈழ வரை­ப­டத்­தையும் இணைத்து கருத்து வெளி­யிட்­டி­ருக்­கிறார்? இதற்குப் பின்னால் ஒரு அர­சியல் சூழ்ச்சி இருக்கக் கூடும்.



விடு­தலைப் புலி­க­ளையும், ஈழத்­தையும் இழுத்து வந்து அர­சியல் செய்­வது சிங்­கள அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு கைவந்த கலை. அவர்கள் கடந்த பல தசாப்­தங்­க­ளா­கவே இத்­த­கைய அர­சி­ய­லுக்குப் பழக்­கப்­பட்டுப் போன­வர்கள்.



எதற்­கெ­டுத்­தாலும், புலிகள், ஈழம் என்று பிர­சாரம் செய்து அதனை வாக்­கு­க­ளாக மாற்­று­வதில் அவர்கள் எப்­போதும் கெட்­டித்­தனம் மிக்­க­வர்­க­ளா­கவே இருந்து வந்­தி­ருக்­கி­றார்கள். அதிலும், பொது­ஜன  பெர­மு­ன­வினர் இன்னும் வீரி­ய­மாகச் செயற்­படக் கூடி­ய­வர்கள் என்­பதை செய­ல­ளவில் நிரூ­பித்­த­வர்கள்.
ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வுகள் அவர்­களால் ஜீர­ணிக்க முடி­யாத ஒன்­றா­கவே இருக்­கி­றது. ஏனென்றால் சிறு­பான்­மை­யின மக்கள் இந்­த­ள­வுக்கு மோச­மான வெறுப்பைக் காட்­டு­வார்கள் என்­பதை அவர்கள் எதிர்­பார்க்­க­வே­யில்லை.



ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ, சிங்­கள பௌத்த மக்­களின் வாக்­கு­களால் வெற்றி பெற்­ற­தாக கூறு­வதில் இருந்தே அதனை உணர்ந்து கொள்ள முடியும். சிங்­கள பௌத்த வாக்­கு­களால் பெற்ற வெற்­றியைத் தக்க வைத்துக் கொள்­வ­தற்கும், அதே வெற்­றி­ந­டையைத் தொடர்­வ­தற்கும், பொது­ஜன பெர­மு­ன­வி­ன­ருக்கு ஈழம், விடு­தலைப் புலிகள் போன்­றவை தேவைப்­ப­டு­கின்­றன.
ஜனா­தி­பதித் தேர்தல் வரைக்கும் அவர்கள், நாட்டின் பாது­காப்பு ஆபத்தில் உள்­ளது, இந்த நிலையில் நாட்டைப் பாது­காக்கக் கூடிய ஒரே ரெர்­மி­னேற்றர் கோத்­தா­பய ராஜபக் ஷ தான் என்று பிர­சாரம் செய்­தார்கள்.



அதற்கு மக்­களின் ஆணை கிடைத்து விட்­டது. அவர் ஜனா­தி­ப­தி­யாகி விட்டார், மஹிந்த ராஜபக் ஷ பிர­த­ம­ராகி விட்டார். அவர்­களின் அர­சாங்கம் தான் ஆட்­சி­யிலும் இருக்­கி­றது.
இந்­த­நி­லையில், போய் மீண்டும் பாது­காப்பு என்ற விட­யத்தை முன்­னி­றுத்தி பிர­சா­ரத்தை செய்ய முடி­யாது. அவ்­வாறு பிர­சாரம் செய்தால், ரெர்­மி­னேற்­றரை தெரிவு செய்தோம் அவர் என்ன செய்­கிறார் என்று கேள்வி எழுப்­பு­வார்கள்?
அதனால், பாது­காப்பு தொடர்­பான அச்­சத்தை ஏற்­ப­டுத்­து­வதில் ரம்­புக்­வெல போன்­ற­வர்கள் இறங்­கி­யுள்­ளனர்.



ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐ.தே.க. வெற்றி­பெற்ற இடங்கள், வடக்கு- கிழக்கு மற்றும் நுவ­ரெ­லியா ஆகி­ய­வற்றில் தான்.



இதனை அடிப்­ப­டை­யாக வைத்து, சஜித் பிரே­ம­தாஸ வெற்றி பெற்ற இடங்­களை காட்டும் வண்ண வரை­ப­டமும், விடு­தலைப் புலி­களின் ஈழ வரை­
ப­டமும், ஒன்­றல்ல.



விடு­தலைப் புலி­களின் ஈழ  வரை­ப­டத்தில், நுவ­ரெ­லியா போன்ற மலை­யகப் பகு­திகள் இல்லை. இது முத­லா­வது விடயம் ஆனால் ஈரோஸ் அமைப்பின் ஈழ வரை­படம், மலை­ய­கத்­தையும் உள்­ள­டக்­கி­யி­ருந்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.



அடுத்து, ஜனா­தி­பதித் தேர்­தலில் அளிக்­கப்­பட்ட வாக்­குகள் ஈழ வரை­ப­டத்தை வெளிப்­ப­டுத்­து­கி­றது என்ற அமைச்சர் ரம்­புக்­வெ­லவின் கருத்து, ஈழம் என்ற கருத்­தியல் இன்­னமும் உயிர்ப்­புடன் இருக்­கி­றது என்ற அச்­சத்தை ஊட்­டு­வ­தற்­காக உரு­வாக்­கப்­ப­டு­வ­தா­கவே தெரி­கி­றது.



தற்­போது ஆட்­சியில் இருக்கும் மஹிந்த ராஜபக் ஷவும், கோத்­தா­பய ராஜபக் ஷவும், 2009ஆம் ஆண்டு மே மாதம், விடு­தலைப் புலிகள் இயக்கம் அழிக்­கப்­பட்டு விட்­ட­தாக அறி­வித்­தி­ருந்­தார்கள். விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­கரன் கொல்­லப்­பட்டு விட்டார் என்றும், அவ­ருடன் அவ­ரது ஈழக்­க­னவும் புதைக்­கப்­பட்டு விட்­டது என்றும் அவர்கள் பிர­க­டனம் செய்­தி­ருந்­தார்கள். ஈழக்­க­னவு என்­பது விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் கனவு மாத்­தி­ரமே என்­பது போலவே, அப்­போது அர­சாங்கம் அறி­வித்­தி­ருந்­தது.
“விடு­தலைப் புலி­களை தமிழ் மக்கள் ஆத­ரிக்­க­வில்லை, தமிழ் மக்­களை அவர்கள் பணயக் கைதி­க­ளாக வைத்­தி­ருந்­தார்கள், அவர்­களின் பிடியில் இருந்து தமிழ் மக்­களை மீட்­கவே போரை நடத்­தினோம்”, என்­றெல்லாம் அர­சாங்கம் அப்­போது, போரை நியா­யப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.



தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராகப் போர் நடத்­தப்­ப­டு­கி­றது என்­பதை மறைக்­கவும், இதனை ஒரு பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான போராக சர்­வ­தேச சமூ­கத்­துக்கு காண்­பிக்­கவும் இவ்­வாறு கூறி­யி­ருந்­தது.
அதனால் விடு­தலைப் புலி­க­ளையும், தமிழ் மக்­க­ளையும் வேறு­ப­டுத்திக் காண்­பிக்க முயன்­றது. ஈழக்­க­னவு என்­பது தமிழ் மக்­களின் நிலைப்­பாடு அல்ல, தமிழ் மக்கள் ஈழத்தைக் கேட்­க­வில்லை, அதற்­காக போரா­ட­வில்லை என்­றொரு நியா­யத்தை நிறுவ முயன்­றது.



ஈழக்­க­னவை  பிர­பா­க­ர­னுடன் மட்டும் சுருக்கி, அவ­ருடன் சேர்த்தே புதைத்து விட்­ட­தா­கவும் எண்­ணி­யது.
அதே அர­சாங்­கத்தில் உள்ள அமைச்சர் ஒருவர் தான், இப்­போது  ஜனா­தி­பதித் தேர்­தலில் அளிக்­கப்­பட்ட வாக்­கு­களின் வரை­படம், ஈழ வரை­ப­டத்தை நினை­வு­ப­டுத்­து­வ­தாக கூறி­யி­ருக்­கிறார்.



பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்னர் அழிக்­கப்­பட்டு விட்­ட­தாக கூறிய அதே ஈழக்­க­னவை அவர்­க­ளுக்கு இந்த வரை­படம் நினை­வு­ப­டுத்­து­கி­றது. அவ்­வா­றாயின், ஈழக்­க­னவு என்­பது பிர­பா­க­ர­னு­டை­யது மட்டும் தானா அல்­லது தமிழ் மக்­க­ளு­டை­ய­துமா என்ற கேள்வி எழும். இந்தக் கேள்­விக்கு, தமிழ் மக்­களின் கனவு என்று கூறு­வ­தற்கு ஆட்­சி­யா­ளர்கள் தய­ாராக இருக்­க­மாட்­டார்கள். அவ்­வாறு கூறினால் ஈழக்­க­னவை தோற்­க­டிப்­ப­தற்கு தவ­றி­விட்­டார்கள் என்­பதை ஒப்புக் கொள்ள வேண்­டி­ய­தாகி விடும்.



ஆனால், அவர்கள் இந்த ஈழ வரை­ப­டத்தை காண்­பித்து, நாடு பிள­வு­பட்டுக் கிடக்­கி­றது என்­பதை கூறி சிங்­கள மக்­களை உசுப்­பேற்றப் போகி­றார்கள். தமி­ழர்கள் இன்­னமும், பிரிந்து போய் தனி­நாட்டை உரு­வாக்கும் சிந்­த­னையில் தான் இருக்­கி­றார்கள் என்று பிர­சாரம் செய்­வார்கள்.



ஐ.தே.க. ஆட்­சிக்கு வந்தால், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பலம் பெற்று விடும் என்றும், அது நாட்டின்  இறை­மைக்கும், சுதந்­தி­ரத்­துக்கும் ஆபத்தை ஏற்­ப­டுத்தும் என்றும் கூறு­வார்கள். இதன் மூலம் அடுத்த  பாரா­ளு­மன்றத் தேர்­த­லையும், மாகா­ண­சபைத் தேர்­தலை­யும் அவர்­களால் இல­கு­வாக எதிர்­கொள்ள முடியும். அதுவே அவர்­களின் இலக்­கா­கவும் இருக்­கி­றது.



தேர்தல் முடி­வுக்கும் ஈழ வரை­ப­டத்­துக்கும் தொடர்பு இருக்­கி­றதோ இல்­லையோ, தமிழ்ப் பேசும் மக்­களின் மன­நிலை, சிங்­கள பௌத்­தர்­களின் மன­நி­லையில் இருந்து வேறு­பட்­டி­ருக்­கி­றது என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.



இந்த வேறு­பாடு எங்­கி­ருந்து எப்­படி உரு­வாக்­கப்­பட்­டது என்­பது தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும்.       போர் முடி­வுக்கு வந்த பின்னர், தனி­நாட்டுக் கோரிக்­கையை எந்­த­வொரு தமிழ் அர­சி­யல்­வா­தியும் வலி­யு­றுத்­த­வில்லை. அது­பற்றி பேசு­வதும் இல்லை.



தேர்தல் முடிவு வெளி­யான பின்னர் கூட, யாருமே தப்பித் தவ­றியும் ஈழ வரை­ப­டத்­துடன் ஒத்­தி­ருக்­கி­றது என்று கூற­வில்லை.  
ஏனென்றால், அது தமிழ் மக்­களின் எதிர்­கா­லத்­துக்கு, நலன்­க­ளுக்கு ஆபத்­தாக அமையும் என்­பதை அவர்கள் அறி­வார்கள். ஒரு­மித்த நாட்­டுக்குள் சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான தீர்வு ஒன்றை எட்­டு­வ­தற்கே எல்லா தமிழ் அர­சி­யல்­வா­தி­களும் முனை­கி­றார்கள்.



ஆனால், ஒரே நாட்­டுக்குள் தமிழ் மக்­க­ளுடன் அதி­கா­ரங்­களைப் பகிர்ந்து கொள்ள விரும்­பா­த­வர்­க­ளாக சிங்­கள அர­சி­யல்­வா­திகள் இருக்­கி­றார்கள். அதுவே பிரச்­சி­னை­க­ளுக்கும் பிள­வு­க­ளுக்கும் காரணம்.
தமிழ் மக்­களோ, தமிழ் அர­சி­யல்­வா­தி­களோ ஈழ­வ­ரை­படம் ஒன்றை வெளிப்­ப­டுத்தும் எண்­ணத்தை கொண்­டி­ருக்­க­வில்லை.



இன நல்­லி­ணக்­கத்தைப் பேசிக் கொண்டே, இனங்­க­ளுக்­கி­டையில் சமத்­துவம், நீதி, உரி­மை­க­ளுடன் கூடிய ஒரு தீர்­வுக்கு இணக்க மறுக்­கின்ற சிங்­கள அர­சி­யல்­வா­தி­களால் தமிழ் மக்­களை நெருங்க முடி­ய­வில்லை. அதுவே தேர்தல் முடி­வு­களில் பிர­தி­ப­லித்­தி­ருக்­கி­றது.



தேர்தல் முடி­வு­களை எந்­த­ள­வுக்கு ஏற்­றுக்­கொள்ள முடியாமல் இருக்கிறதோ, அதுபோலவே அவர்களின் கண்களுக்குத் தெரிகின்ற ஈழ வரைபடத்தையும் அவர்களால் மறக்க முடியாமல் இருக்கிறது.
இந்த கோடுகளைப் போட்டது நிச்சயமாக தமிழ்ப் பேசும் மக்கள் அல்ல. அதனை கீறி விட்டது சிங்கள பௌத்த பேரினவாதிகள் தான். அவர்கள் தமது அரசியல் நலன்களுக்காக உருவாக்கிய மாயைகள் இன்று அவர்களையே துரத்துகின்றன.



ஈழக் கனவோ, ஈழ வரைபடமோ எதுவாயினும், அதனை தீர்மானிப்பது தனிநபர்களல்ல மக்கள் தான்.
இதை, தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியிருந்தாலும், தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளையும், உரிமைகளையும் நிறைவேற்றும் வாய்ப்பும் சூழலும் இன்னமும் இருக்கிறது என்பதை சிங்கள அரசியல் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.



அதற்கு மாறாக, ஈழ வரைபடத்தை வைத்து தெற்கின் வாக்குகளை அறுவடை செய்வதற்கு  முயன்றால், இந்த வரைபடத்தில் உள்ள கோடுகள் அழிக்க முடியாதபடி இன்னும் உறுதிபெற்று விடும்.


- சத்ரியன் -  நன்றி வீரகேசரி 














No comments: