.
உள்ளத்தில் உவகைவந்தால்
உன்வாழ்வு உயர்ந்துநிற்கும்
கள்ளங்கள் நிறைந்துவிட்டால்
கஷ்டத்தில் அமிழ்ந்துபோவாய்
நல்லதை நாடிநின்றால்
நம்மிடம் சொர்க்கமாகும்
அல்லவை தவிர்த்தால்வாழ்வு
ஆனந்தம் நிறைந்தேநிற்கும் !
மற்றவர் உன்னைப்பார்த்து
மனவெறுப் படையாவண்ணம்
சொற்களை எந்தநாளும்
சுவைபடப் பேசவேண்டும்
கற்பன கற்கவேண்டும்
கவனத்தில் கொள்ளல்வேண்டும்
அற்பங்கள் அகற்றிநின்று
அன்பையே பகிர்தல்வேண்டும் !
சிரிப்பினைப் பேணவேண்டும்
உள்ளத்தில் உவகைவந்தால்
உன்வாழ்வு உயர்ந்துநிற்கும்
கள்ளங்கள் நிறைந்துவிட்டால்
கஷ்டத்தில் அமிழ்ந்துபோவாய்
நல்லதை நாடிநின்றால்
நம்மிடம் சொர்க்கமாகும்
அல்லவை தவிர்த்தால்வாழ்வு
ஆனந்தம் நிறைந்தேநிற்கும் !
மற்றவர் உன்னைப்பார்த்து
மனவெறுப் படையாவண்ணம்
சொற்களை எந்தநாளும்
சுவைபடப் பேசவேண்டும்
கற்பன கற்கவேண்டும்
கவனத்தில் கொள்ளல்வேண்டும்
அற்பங்கள் அகற்றிநின்று
அன்பையே பகிர்தல்வேண்டும் !
சிரிப்பினைப் பேணவேண்டும்
சிறப்பினை நாடவேண்டும்
பொறுப்புடன் நல்லவற்றை
போற்றியே நிற்றல்வேண்டும்
செருக்கினை ஒதுக்கவேண்டும்
சினமதை ஒழித்தல்வேண்டும்
அடுத்தவர் மகிழ்ச்சிபார்த்து
ஆனந்தம் அடைவாயென்றும் !
வாழ்த்துகள் வழங்கவேண்டும்
மகிழ்ச்சியைப் பெருக்கவேண்டும்
ஆத்திரம் அடக்கவேண்டும்
அன்பினை அளிக்கவேண்டும்
வேற்றுமை தவிர்க்கவேண்டும்
விருப்பமாய் பழகல்வேண்டும்
சாற்றிடும் சொற்கள்யாவும்
சந்தோஷம் தருதல்வேண்டும் !