நீ முதல் நான் வரை

.

வெற்றி பெற 
வாழ்த்துகிறேன் 

வெளிப்படையாய் 
கைகுலுக்குகிறேன் 

வெற்றிபெற்று வருகையிலோ 
உள்ளுக்குள் பொருமுகிறேன் 
உதட்டளவில் பாராட்டுகிறேன் 

என்னிலும் ஒருபடி 
ஏறிவிடாதபடி 
எச்சரிக்கையாய் இருக்கிறேன் 

முட்டி மோதி 
மூச்சுத் திணறுகையில் 
குழிபறிக்க வழிபார்க்கிறேன் 

முயன்று முன்செல்கையில் 
குறிவைக்க வெறி கொள்கிறேன் 

எல்லாரையும் விழுங்கி ஏப்பம் விடும் 
இந்த மனித நாடகத்தில் 
என் பாத்திரம் எம்மாத்திரம் ? 

அதைமட்டும் ஏனோ 
அவ்வப்போது மறந்துவிடுகிறேன். 
சகாரா 
http://kavithai.com/