மலரும் முகம் பார்க்கும் காலம் 21 - தொடர் கவிதை

.
மலரும் முகம் பார்க்கும் காலம் கவிதையின் இருபத்திரண்டாவது(22) கவிதையை எழுதியவர் டென்மார்க்கைச் சேர்ந்த படைப்பாளி திரு.இணுவையூர் சக்திதாசன் அவர்கள்.

வீணாகிப் போகும் எம் வாழ்வும் சாவுமென்று
விலகி நடக்கையிலும் வீணர்களின் நடத்தையிலே
வீணாகிப் போகிறதெம் வாழ்வு
தேனான வாழ்வென்று திரவியமாய் - நாம்
தேடியவை யெல்லாம் திட்டு திட்டாய் விட்டு
வீணாகிப் போகிறதெம் வாழ்வு

குண்டு வெடி வானைத் துளைக்க
குருதி நெடில் நாசைத் துளைக்க
நின்ற விடத்தில் நின்று சிறகு முளைக்க
வங்க கடல் தாண்டி வாழ்வெடுக்க பறந்து
தங்க சுரங்கத்து சிற்பங்களாகி
அங்கம் வருந்திப் பெற்ற குழவிகாள்

பங்கமில்லாத் தமிழை  மீட்டெடுத்து
மலரும் முகம் பார்க்கும் காலம் வரணும்

மூத்த மொழி  - எம்தமிழ்
முகம் மலரும் முகநூலால் வியர்த்த கவி
மூத்தவரும் இளையவரும் கை கோர்க்க
முடி சு10டும் நாள் பார்த்து
வெண் மேகம் தூவும் வெண் பனிக்குள்ளே
என் தேகம் புதை பேனா ? எடுப்பேனா ?

No comments: