.
- இளமையிலும் காதல் வரும்முதுமையிலும் காதல் வரும்எக்காதல் இனிமை என்றுஎல்லோரும் எண்ணி நிற்பர்இளமையிலே வரும் காதல்முதுமையிலும் தொடர்ந்து வரின்இனிமை நிறை காதலெனஎல்லோரும் மனதில் வைப்போம்காதலுக்கு கண்ணும் இல்லைகாதலுக்குப் பேதம் இல்லைகாதல் என்னும் உணர்வுதனைகடவுள் தந்தார் பரிசெனவெகாதலிலே மோதல் வரும்காதலிலே பிரிவும் வரும்என்றாலும் காதல் எனில்எல்லோரும் விரும்பி நிற்பார்காதல் என்று சொன்னவுடன்கவலை எல்லாம் ஓடிவிடும்கனவுபல தோன்றி வந்துகண்ணுக்குள் புகுந்து நிற்கும்கற்பனையில் உலா வந்துகளிப்புடனே நாம் இருப்போம்காதல் என்னும் உணர்வில்லார்கல்லினுக்கே சமம் ஆவார்காவியத்தில் காதல் வரும்ஓவியத்தில் காதல் வரும்கல்வியிலும் காதல் வரும்காசினிலும் காதல் வரும்அக்காதல் கொள்ள மனம்ஆசை பட்டு நின்றாலும்அழகு மங்கை தரும்காதல்அனைவருக்கும் பிடிக்கும் அன்றோமனித குலம் முழுவதற்கும்மகிழ்வு எனும் மருந்தாகவரமாக காதல் அதுவந்து அமைந்து இருக்கிறதுபுவிமீது நாம் வாழபொலிவு தரும் அமிர்தமெனகாதல் எனும் கனியமுதைகடவுள் எமக் களித்துள்ளார்
No comments:
Post a Comment