இரத்த நிலா : அரிய சந்திரக் கிரகணம் இன்று 27.09.2015

.
கடந்த 33 ஆண்டுகளிற்குப் பின்னர் தோன்றும் அரிய சந்திரக் கிரகணத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் இன்று கிடைத்துள்ளது. பூமிக்கு மிக அருகே தென்படும் நிலவு கிரகணத்திற்குள் உட்படுவதையே 'இரத்த நிலா" என்று தெரிவிக்கின்றனர்.

1982 ஆம் ஆண்டுக்கு பிறகு சூப்பர் மூன் கிரகணம் நிகழ உள்ளது. கடந்த 115 ஆண்டுகளில் இது 4 ஆவது முறையாகும். இந்த கிரகணத்தின்போது வானில் இருக்கும் நிலா வழக்கத்தைவிட 30 சதவீதம் அதிக பிரகாசமாக இரத்த சிவப்பு நிறத்தில் காணப்படுவதோடு, 14 சதவீதம் அளவில் பெரியதாகவும் காட்சியளிக்கும் என்று நாசா விஞ்ஞானி சாரா நோபல் தெரிவித்துள்ளார். 
இன்று தென்படவுள்ள இந்நிகழ்வை வட, தென் அமெரிக்கக் கண்டங்களிலும் ஐரோப்பிய, ஆபிரிக்க நாடுகளிலும் மேற்கு ஆசிய நாடுகளிலும் பார்க்க முடியும்.
2033ம் ஆண்டுவரை மீண்டும் இதுபோன்று இரத்த நிலா தோன்றுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் வானியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: