ஒரு சமூகம் தன்னை காப்பாற்றிக்கொள்ளாவிட்டால் ஆண்டவன் கூட அதைக் காப்பாற்ற முடியாது - நிவேதனா அச்சுதன் ( சிரேஷ்ட சட்டத்தரணி)


இன்று  இலங்கை  முழுவதும் நிலவுகின்ற பதட்ட நிலை, தமிழ்-சிங்களம் , இந்து-கிறிஸ்தவ-இஸ்லாமிய-பௌத்த என்ற மொழி, மத  வேறுபாடுகளைத்  தாண்டி எல்லோரையும் பாதித்து இருக்கின்றது. வெளி நாடுகளில் வாழ்கின்ற எம்மில் பலரும் , எமது மக்கள் - எமது நாடு  என்ற துடிப்போடு இலங்கையில்  நடக்கும் சம்பவங்களை அவதானித்து வருகின்றோம்.

கடந்த பத்து வருடங்களாக எவ்வளவோ பெரிய  விலை கொடுத்து, இழக்கமுடியாத-இழக்கக்  கூடாத பலவற்றையும் இழந்து , தக்க வைத்திருக்கின்ற சமாதானமும் அமைதியும் , மீண்டும்  பறிபோய்விடுமோ என்ற வேதனையும் இயலாமையும் எம்மில்  பலரை சூழ்கின்றது . அதே  சமயம் , மீண்டும் எமது நாடு சமூகப்பிளவுகளில் சிக்குண்டு அடுத்த தலைமுறையின் எதிர்காலம் இருண்டு போகக்கூடாது என்ற பொறுப்புணர்வும் மேலோங்குகிறது.

எமது தமிழ் பாடப்புத்தகங்களில் ஒரு பாட்டு உண்டு " சிங்களர்-தமிழர் -முஸ்லீம் யாம் , சீருடன் பயின்று இணைந்தாலே , மங்களம் பொங்கும் நல்லுலகாய் மாண்புடன் விளங்கும் நம் இலங்கை". நம்மை எதிர் கொண்டு இருப்பது ஒரு சமூகப்பிரச்சனை-அது பூதாகரமாக வெடிக்காமல் , முளையிலே கிள்ளி எறிவது, சமூக உணர்வுள்ள ஒவ்வொருவரினதும் சமூகக் கடமை. இதற்கு அரசியல் தலைமைத்துவத்தை  எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல், எம்மால் முடிந்த சமூகத் தலைமைத்துவத்தை ஓருவருக்கொருவர் வழங்க முன்வருவது  எமது கையில் இருக்கின்றது.

வெளி நாட்டில் இருப்பவர்களோ உள் நாட்டில் இருப்பவர்களோ, வெறுமனே தகவல்களை மட்டும் ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ் அப்பிலும் சுடச்சுட பகிர்ந்து  கொண்டு, 'எமோஜிக்களில்' மட்டும் வாழ்க்கையை நடத்தாமல் , நாட்டைப்பற்றிய உண்மையான உணர்வுடன் செயற்பட வேண்டும் .

சமீபத்தில் நடந்த சம்பங்களில் உயிர் இழந்தோ, காயப்பட்டோ , அன்புக்குரியவர்களை இழந்தோ தவிப்பவர்கள் அனுபவிக்கும்  உயிர் வலி, இழப்பைத் தம் வாழ்க்கையில் எதோ ஒரு விதத்தில் எதிர்கொண்ட ஒவ்வொருவருக்கும் முழுமையாகத் தெரியும். இலங்கையை சுற்றுலாப் பயணிகளாகப் பார்க்க வந்து குடும்பத்தினரை  இழந்து இடிந்துபோயிருக்கும் வெளி  நாட்டவர்களும்  சாதாரண மனிதர்கள் தான் . அவர்களது வலியும் வேதனையும் விலை பேச முடியாதவை.

ரொபர்ட் நொக்ஸ் : கைதி மீட்டுத் தந்த வரலாறு - என்.சரவணன்

.

இலங்கையின் வரலாற்றை எழுதுபவர்களுக்கு தவிர்க்க முடியாத பாத்திரம் ரொபர்ட் நொக்ஸ்.  இலங்கையைப் பற்றி வெளியான முதலாவது ஆங்கில நூலை எழுதியவர் அவர் தான். அவரது கதை சுவாரசியம் நிறைந்தது.

1641 பெப்ரவரி 8 அன்று பிறந்த நொக்ஸ் பெரிய தனவந்தரான தனது தகப்பனோடு 14 வயதிலேயே கடற்பிரயாணம். இந்தியாவில் சென்று தங்கியிருந்து வியாபாரங்களை முடித்துக்கொண்டு ஈரான் நோக்கி சென்று கொண்டிருக்கையில் புயலுக்கு அகப்பட்டு கப்பல் சேதமானது. அந்த கப்பல்லுக்குத் தேவையான மரங்கள் இலங்கையின் கிழக்குப் பகுதியில் கிடைப்பதாக அறிந்து கொட்டியாரக்குடாவுக்கு (மூதூரில் உள்ளது) 19.11.1659இல் வந்து சேர்ந்தார். திருத்தப் பணிகளுக்காக அங்கு தங்கியிருந்த வேளை இந்தச் செய்தி அன்றைய கண்டி மன்னன் இரண்டாம் ராஜசிங்கனின் காதுகளுக்கு சென்றது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மன்னருக்கு பரிசுப்பொருட்களை கொண்டு வந்து கொடுக்கும் பழக்கம் இருந்தது. இதை அறிந்திருக்கவில்லை நொக்ஸ் (தகப்பன் மகன் இருவரது பெயரும் ரொபர்ட் நொக்ஸ் தான்). 1960 ஏப்ரல்  மாதம் சிப்பாய்களை அனுப்பி அவர்களை கைது செய்தனர்.

கப்பலில் இருந்த அவர்களை கரைக்கு அழைப்பதற்காக சிப்பாய்கள் முதலில் “வெளிநாட்டவர்களை பரிசுப் பொருட்களைக் கொடுத்து வரவேற்று உபசரிப்பது மன்னரின் வழக்கம்” என்றும் கப்டனை வரும்படி அழைத்தனர். அப்படி வந்த போது 16 பேரையும் கைது செய்து விலங்கிட்டு காடுகள் வழியே கண்டிக்கு நடையாக அழைத்துச் சென்றனர்.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம ஹோமம் - சிட்னி ஸ்ரீ துர்கை அம்மன் திருக்கோவில் 26/05/2019








இலங்கைச் செய்திகள்


தொடர்­கி­றது தேடுதல் வேட்டை இது­வரை 160 பேர் கைது

கடற்படையினரின்  சுற்றிவளைப்புகளில் வெடி பொருட்கள் , இராணுவத்தினரின் ஆடைகள் மீட்பு

வெளியானது தற்கொலைதாரிகளின் பெயர் பட்டியல் 

சஹ்ரானின் சகோதரி வீட்டில் 20 இலட்சம் ரூபா மீட்பு!

60 இலங்­கை­யர்களை திருப்பி அனுப்பிய பிரான்ஸ்!

வவுணதீவு பொலிசார் கொலை :  சஹ்ரானின் இரு சகாக்கள் தடுத்துவைத்து விசாரிப்பு, இதுவரை  7 கைதுப்பாக்கிகள், ஒரு மோட்டார் சைக்கிள் மீட்பு 

சஹ்ரானின் பயங்கரவாத குழுவின் முழு தொடர்புகளையும் கண்டறிந்தது சி.ஐ.டி.

தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் சிரியாவில் பயிற்சி பெற்றார்- சர்வதேச ஊடகம்

வெளியானது விசேட வர்த்தமானி!

குண்டுத்தாக்குதலில்  உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம்  ரூபா இழப்பீடு

 "குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து  12 வெளிநாட்டவர்களை காணவில்லை"

யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர்,செயலாளருக்கு விளக்கமறியல்




தொடர்­கி­றது தேடுதல் வேட்டை இது­வரை 160 பேர் கைது

02/05/2019 தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் தற்­போ­தைய தலைவர் எம்.வை.எம். தெளபீக் மெள­லவி, அந்த அமைப்பின் ஊடக செயலர் மொஹம்மட் லெப்பை அஹமட் பைரூஸ், பொரு­ளாளர் மொஹிதீன் பாவா மொஹம்மட் பைசர் மற்றும் சாய்ந்­த­ம­ருது பகு­தியில் பாது­காப்பு தரப்­பி­ன­ரு­ட­னான  மோதலில் கொல்­லப்­பட்ட நப­ரொ­ரு­வரின் மனைவி எனக் கரு­தப்­படும் பெண் ஆகி­யோரை எதிர்­வரும் 10 ஆம் திக­தி­வரை விளக்­க­மறி­யலில் வைக்க மட்­டக்­க­ளப்பு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

உலகச் செய்திகள்


இந்தியாவுடனான மோதலை பரஸ்பர ரீதியில் கையாள வேண்டும் - இம்ரானிடம் ஷிஜின்பிங்

இலங்கை தற்கொலை தாக்குதலில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்காக வெளிநாட்டில் நிதி திரட்டும் மாணவி

போலாந்தில் வாழைப்பழ ஓவியத்துக்கு தடை

சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்க செய்து பயங்கரவாதிகள் தற்கொலை

 136 பயணிகளுடன் ஆற்றில் விழுந்த விமானம்



இந்தியாவுடனான மோதலை பரஸ்பர ரீதியில் கையாள வேண்டும் - இம்ரானிடம் ஷிஜின்பிங்

29/04/2019 சீனாவின் இரண்டாவது பொருளாதார வழித்தடம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனா சென்றுள்ள பாகிஸ்தான் இம்ரான் கான் சீன ஜனாதிபதி ஷிஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தயுள்ளார்.