தமிழ் வளர்ச்சி மன்றம் முப்பெரும் விழா

 சிட்னி தமிழ் வளர்ச்சி மன்றம் ஆண்டு தோறும் நடத்தி வரும்


முப்பெரும் விழாவான ' தமிழ் மரபு தினம், தாய்மொழி தினம் மற்றும் திருவள்ளுவர் தினம் - இவற்றை இந்த ஆண்டு அனைத்துலக மகளிர் தினத்தோடு இணைத்து கொண்டாடியது.

இந்த விழாவில் அனைத்துலக மகளிர் தினத்தை ஒட்டி பன்னாட்டு கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் சிங்கப்பூர் மலேசியா அமெரிக்கா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து வந்த பல தமிழ் அறிஞர்கள் | வரதட்சணை ,துன்புறுத்தல், குடும்ப வன்முறை என்ற தலைப்பில் வட்டமேசை மாநாட்டையும், பின்னர் (திருக்குறளும் மகளிரும் ' என்ற தலைப்பிலும் நிகழ்வுகளை நடத்தினர்.

 தொடர்ந்து சங்க கால முதல் இந்த காலம் வரை தமிழ் பெண்கள் என்ற

தலைப்பில் இலக்கியங்கள் சார்ந்து ஒன்பது பேர் உரையாற்றினார்கள்

சிட்வெஸ்ட் பல் கலாச்சார அமைப்பு, வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகம் தவிர்த்து இவற்றோடு கொமன் வெல்த் வங்கி ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்கினார்கள்.


































No comments: