சிட்னியில் ஊடகவியலாளர் ஹேமா சச்சிதானந்தன் அவர்கள் காலமானார் - .செ .பாஸ்கரன்

 .

சிட்னியில் ஊடகவியலாளர் ஹேமா சச்சிதானந்தன் அவர்கள் காலமானார் .


ஹேமா அவர்கள் சிட்னியில் பலரும் அறிந்த ஒரு ஊடகவியலாளர். வானொலி

நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் நீண்டகாலமாக பணிபுரிந்தவர். இவர் சென்றவாரம் (06.03.2022 ) மறைந்துவிட்டார்.


சிட்னியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இவரும் இவரது மகனும் காலனால் கவர்ந்து

கொள்ளப்பட்டார்கள். ஹேமா ஆரம்பத்தில் இன்பத் தமிழ் ஒலி வானொலியில்

அறிவிப்பாளராக பணிபுரிந்தவர். அதன்பின்பு அவுஸ்ரேலிய தமிழ்

ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நீண்டகாலமாக அறிவிப்பாளராக,

நிகழ்ச்சி தயாரிப்பாளராக குறிப்பாக வியாழன் காலையிலே அவருடைய

நிகழ்ச்சியை பலரும் கேட்டு வந்திருக்கிறார்கள். அன்பாக பேசி, உறவாடி

ஒரு இனிய நிகழ்வை படைத்துக் கொண்டிருந்தவர்.


மென்மையான குரல் மட்டுமல்ல மென்மையான உள்ளம் படைத்தவர.

ஹேமா சச்சிதானந்தன் அவர்களுடைய நிகழ்வை கேட்கின்றவர்கள்

கவலையில் ஆழ்ந்துள்ளார்கள். அவர் பேசும்போது சிரித்துக்கொண்டே

உரையாடுவார் அவருடைய இறப்பு வானொலி ரசிகர்களுக்கும்

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணியாளர்களுக்கும்

மிகப் பெரும் இழப்பாக இருக்கின்றது.


எல்லோருடனும் அன்பாக பழகுகின்ற ஒரு பெண்ணாக அனைவரையும்

கவர்ந்த ஒருவராக வாழ்ந்து வந்த ஹேமா அவர்கள் சென்ற வாரம்

சிட்னியில் இடம்பெற்ற பெரு வெள்ளப் பெருக்கில் காலமாகிவிட்டார் என்ற

செய்தி பலரையும் துன்பத்தில் ஆழ்த்தி விடுகின்றது. அவருடைய ஆத்மா சாந்தி

அடைய நாங்கள் வேண்டுகின்றோம் அவரது பிரிவால் துயருற்றிருக்கும்

அவரது குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.


தமிழ்முரசு அவுஸ்திரேலியா

No comments: