கற்பதருவினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை இருபத்து ஒன்பது ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 

     பனை விதைகளை எடுத்து நோக்கினால் அவை


தொண்ணூறு
 விகிதத் துக்குக்கு மேல் முளைக்கும் நிலை யிலேதான் இருக்கின்றன என்று அறந் திட முடிகிறது.பாத்தியிலே அடுக்கப்பட்ட பனங்கொட்டைகள் நிலத் தில் விடுகின்ற வேரானது நாங்கள் சுவைத்து உன்னும் கிழங்காகவே வருகிறது என்பதுதான் மிகவும் முக் கிய நிலையாகும்.பாத்தியில் அடுக்கப்பட்ட பின்னர் கிழங்கு பிடுங்கும் நிலை மூன்று மாதங்களின் பின் னரே வாய்க்கிறது.

நிலத்திலிருந்து பனக்கிழங்கினைப் பிடுங்கி வெளியே எடுக்கும் பொழுது பேரானந்த மாகவே இருக்கும். தோலுடன் கிழங்கு வந்து எம்மைப் பார்ர்த் தபடி நிற்கும்.கிழங்கினைப் பாதுகாக்கும் கவசத்தைப்போலவே மேல்த் தோலிருக்கும். அந்தத் தோலினைத்
  தோகை என்று பெயரிட்டு அழைப்பார் கள்.வெளித்தோலான தோகையினை உரித்தபின் கிழங்கினைப் பார்க்கை யில் பரவசமே ஏற்படும். அதன் திரட்சியும்நிறமும் மனத்தை நிறைத்தே விடும்.

  பனங்கிழங்கினைக் பச்சையாகவே இரண்டாகக் கிழித்து வெய்யிலில் காய விட்டு பின்னர் அதனை மாவாக்கி பலவிதமாகச் சாப்பிடுகிறோம்.இது ஒரு முறையாகும். பானைகளில் நீரில் வைத்து அவித்தும் சாப்பிடுவதும் ஒரு முறையாகும். அவித்த கிழங்கினை வெய்யிலில் காயவைத்து பின் எடுத்துச் சாப்பிடு வதும் ஒரு முறையாகவே இருக்கிறது.மூன்று நிலைகளில் பனங்கிழங்கினை சாப்பிடுவதற்கு பழக்கப் படுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் இங்கு முக்கிய கருத்தெனலாம்.

  பச்சைப் பனங்கிழங்கினை வெய்யிலில் காயவைத்து எடுத்த பின்னர் அத னை மாவாக்கி எடுக்கும் பொழுது அந்த மாவினையே ஒடியல் மா என்கி றோம். இந்த மாத்தான் பல உணவுப் பதார்த்தங்களைச் செய்வதற்கு மூல மாக வந்தமைகிறது என்பது முக்கியமாகும்.

  ஒடியற் கூழ் என்றவுடன் நாவெல்லாம் ஊறுகிறதல்லவா ஒடியல்


மா தான் இக்கூழின் கதாநாயனாகும். ஒடியல்மாவுடன் அவரவர்க்கு விரும் பிய காய்கறிகளைச் சேர்த்து மரக்கறிக் கூழ் காய்ச்சுவார்கள். பயற்றங்காய்கீரைபலாக்காய்மரவள்ளிபலாக்கொட்டை ஆகியன சிறப்பாக இடம்பெற் றிருக்கும். உப்புப்,புளிஉறைப்புடன் இந்தக் கூழிருக்கும். சுடச் சுடக் குடிக் கும் பொழுது எற்படும் சுவையினைச் சொல்லவே முடியாது. அக்கூழி னைக் குடித்துச் சுவைத்து உணர்ந்தால்த்தான் அதனை மனமிருத்திட முடி யும்.மரக்கறிகளுக்குப் பதிலாக அசைவம் விரும்புவர்கள் கூழுக்கு எந்தவி தாமனவை பொருந்துமோ அவற்றை அவர்கள் போட்டுக் கூழைச் செய்து சுவைத்து மகிழுவார்கள்.

  ஒடியல் மாவிலே கூழ் காய்ச்சிக் குடிப்பதை ஒரு கூட்டமாகவே


சேர்ந்து மகிழுவதையும்காணக் கூடியதா கவே இருக்கிறது. கூழ் காய்ச்சவேண்டும் என்னும் எண்ணமானது எழுந்தவுடனேயே அங்கு ஒன்று சேர்க்கும் நிலை தான் முதலில் அமையும். அதன் பின்னர்தான் எத்தகைய கூழினைக் காய் ச்சுவது என்று - அதாவது மரக்கறிக் கூழா அல்லாத கூழா என்று தீர்மா  ம் எடுக்கப்படும். மேற்குலக நாடுகளிலே கூட்டமாகச் சேர்ந் திருந்து குடி த்து மகிழ்வதுபோல எங்கள். பிரதேசங்களிலே ஒடியற் கூழ் காய்ச்சிச் சேர் ந்தி ருந்து குடித்து மகிழும் நிலையினை எடுத்துக் கொள்ளலாம். அந்தளவுக்கு ஒயற் கூழானது ஒரு சமூகத்தின் உணவாக விரும்பி எடுக்கும் உண வாக வே அமைந்திருக்கிறது என்பது கருத்திருத்த வேண்டியதேயாகும்.   உறவின   ர்கள் ஒன்றுகூடிக் ஒடியற் கூழ் குடித்து மகிழ்வதும் நிகழ்ந்த படியே இருப் பதுவும் குறிப்பிடத்தக்கதாகும்.

                       

அல்லையுற்று இரத்தினபுரி அண்டி அப்பாலே நிவிற்றிக்கொல்லை

அடைந்த அலுப்புக் கொண்டதற்கு - கல்லடியான்
வண்டாரும் மாலை அணி மற்புயற் சுப்பையுடன்
கொண்டாடினான் ஒடியற் கூழ் 

 

 ஈழத்தைச் சேர்ந்த ஆசுகவியான கல்லடி வேலுப்பிள்ளை என்பவர் கூழை யும் ,தனக்குக் கூழ்குடிக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தையும் சுவையாக இப்பா டலின் வாயிலாக வெளிப்படுத்தி நிற்கிறார்.

    பனங்கிளங்கானது பல மருத்துவ குணங்களைக் கொண்டதாகவே இரு க்கிறது என்பதை மனமிருத்தல் அவசியமாகும். பச்சைக்கிழங்கினைச் சுத் தம் செய்தெடுத்து


பின்னர் அதனை உரலிலிட்டு இடித்து எடுக் க வேண்டும். இடித்து எடுத்ததை நீரில் கரைத்து பின்னர் அந்தக்கலவையினை வடித்து எடுக்க வேண் டும். வடித்தெடுத்ததை வெய்யிலில் உலரவைக்க வேண்டும். உலர்ந்த பின்னர் வருகின்ற அந்தமாவனது பாலூ ட்டும் தாய்மார்களுக்கு உகந்ததாக இருக்கிறது என்பது மனமிருத்த வேண்டிய   கருத் தாகும். ஒடியற் கூழா னது உணவாக இருக்கிறது. நல்ல சுவையினையும் கொடுக்கிறது. அதற்கு அப்பாலும் உடலின் ஆரோக்கி யத்துக்கும் கைகொடுக்கும் நிலையி லும் இருக்கிறது என்பதுதான் மிகவும் முக்கி யமாகும்.ஒடியற் கூழி னைக்

குடிப்பதால் பல நன்மைகளையும் தருகிறது என்பதைக் கருத்திருத்தல் வேண்டும். வாயுத் தொல் லைகள் அனைவரையும் வாட்டி வதைக்கும் ஒன்
 றாகும்.வாயுவினால் உடம்பில் உளைவுகள் ஏற்படும் நிலை உருவாகிறது. வாயு அல்லாத நிலையில் வேறு காரணத்தாலும் உடலில் உளைவு ஏற்ப டவும் கூடும். கை கால்களில் பிடிப்பு ஏற்படும். மலமானது வெளியேறாமல் பெரும் வேதனையும் ஏற்படும். இப்படியான வேளைகளில் கைகொடுத்து உதவிடும் கைகண்ட மருந்தாக ஒடியற்கூழ் விளங்கு கிறது என்பது மிகவும் முக்கியமான செய்தியாகும். இதன் காரணமாக " தாலமூல கீரசூரண தை லம் " என்று ஒடியற்கூழைச் சொல்லுவதும் நடைமுறையில் இருக்கிறது என்றும் அறிந்திட முடிகிறது. அந்த அளவுக்கு ஒடியற்கூழ் மருந்தாகவும் அமைகிறது என்பதுதான் முக்கியமாகும்.

 

                 கொழுக்கியெனும் பூச்சிகளைக் கொலு மொடியற்

                          கூழினையுண் புழுக்கொடியல் கொறிநீமாலை

                    வழுக்கிவிழுங் காலைமல வாசலூடே

                          வைத்தியனுந் தேவையிலை வயிற்றின் கண்ணே

                    அழுக்கணுவுங் குடலகத்தி லணுகிடாது

                            ஆகாரம் பசிகடுப்ப வதிகஞ் செல்லும்

                    கொழுப்பொடியற் புட்டினையுண் கூடவேறும்

                                குறுமுனிவர் கூற்றிவைகைக் கொள்ளுவீரே

 

                  கிண்டிப் பிடுங்கிக் கிழித்து உலர்த்தி

                        வாலொடுத்துததன் பின்

                    துண்டப் படுத்தி இடித்து அரித்து

                            நற் கூழுமிட்டே

                    வண்டுக்கடி கிழங்காகிடாப்

                          பூரானதையு மிட்ட

                  சண்டக் குழம்புக்கு எதிர்வருமோ

                          சின்னப் பொடியனுமே

 

என்று ஒடியற் கூழினைப்பற்றி பனை இராசன் நாடகம் பார்க்கும் பார்வை  யும் ஒடியற்கூழின் மகத்துவத்தை வெளிக்காட்டி நிற்கிறதல்லவா!

  கூழ் குடித்து மகிழ்ந்தோம். அதுவும் ஒன்றாகவே கூடியிருந்து நண்பர்கள் கூட்டத்துடனும் கூழ் குடித்தோம். உறவுகளுடன் இணைந்தும் கூழினைக் குடித்து மகிழ்ந்தோம். ஒடியல் மாவில் கூழ் மட்டுமல்ல பிட்டும் அவை த்துச் சுவைத்துச் சுவைத்து உண்டு மகிழலாம்.ஒடியல் மாவிலே பிட்டு அவித்தால் நல்ல வாசனை அங்கே வரும். அதுவும் பனை ஓலையினால் செய்யப்பட்ட நீத்துப்பெட்டியில் அவிக்கும் பொழுதுதான் அந்தச் சுக மான சுவையான வாசனை வந்து நிற்கும்.அந்த வாசனையினை நுகர்ந்தாலே ஒரு தனி இன்பமாகத்தானி ருக்கும். அனுபவித்தர்களுக்கு மட்டுமே அது தெரியவரும். கீரை போட்டு பிட்டு அவிக்கும் முறையும் இருக் கிறது.கீரை சேர்க்கும் பொழுது பிட்டின் சுவை மேலும் அதிகரிக்கும் என்பதை அதனைச் சாப்பிட் டவர்க ளுக்கே தெரியும்.குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் நிலையில் தாய்மார்களுக்கு பால் சுரப்பதில் சிக்கல் ஏற்படும் நிலையி னைக் காணக்கூடியதாக இருக்கிறது. அப்படியான நிலையில் ஒடியல் பிட் டினைச் சாப் பிட்டால் தாய்ப்பால் நன்றாகவே சுரக்கும் நிலை ஏற்படுகிறது என்பது மிகவும் முக்கியமாகும்.

  ஒடியல்மா பிட்டு ஏழைகளின் உணவாக இருக்கிறது என்பதும் குறிப்பிடப் படவேண்டிய ஒரு முக்கிய செய்தியாகும். ஏழைகளின் உணவாக மட்டும ன்றி பசியினைப் போக்கும் உணவாயும்வலிமைதரும் உணவாயும் அமை கிறது என்பதையும் கருத்திருத்தல் வேண்டும். தேங்காய்ப்பாலினைச் சேர்த் தும் சிலர் ஒடியற் பிட்டினை அவிக்கிறார்கள். நெய்யினைக் கலந்தும் அவி ப்பதும் நடை முறையில் காணப்படுகிறது. இதனைவிட இன்னுமொரு மு றையும் ஒடியற் பிட்டு அவிப்பதில் கையாளப்படுகிறது. தேங்காய்ப்பூமிள குஉப்புமிளகாய்சீரகம்அரிசி மாஇவை அத்தனையையும் ஒடியல் மாவு டன் கலந்து அவிப்பதுதான் அந்த முறையாகும். ஒடியல் பிட்டினை இனிப் புடன் சாப்பிட்டது இன்னும் என் நினைவில் இருக்கிறது. பனங்கட்டியுடன் ஒடியற் பிட்டினைச் சுடச்சுடச் சாப்பிடுவதே ஒரு தனிச்சுவைதான். விரும் பினால் நீங்களும் ஒடியல் மாவினை வாங்கி அவித்து பனங்கட்டியுடன் சாப்பிட்டுத்தான் பாருங்களேன்!

  எண்பத்து ஒரு விகித அளவில் மாச்சத்தினையும்நான்கு புள்ளி எட்டு விகித அளவில் புரத சத்தினையும்,   இரண்டு விகிதம் அளவில் உலோகப் பொருள் சத்தினையும்சைபர் புள்ளி மூன்று விகிதம் அளவில் கொழுப் புச்சத்தும் ஒடியல்  உணவில் இருக்கின்றது என்று அறியக்கூடியதாக இருக்கிறது.

 

     ஒடித்துய ரொடியலென்ன உரலிட்டு லக்கை கொண்டு

     இடித்துநற் சுளகாற்றெள்ளி எஞ்சிய மாவைப் பிட்டாய்
     அடுப்பேற்றி நீற்றுப்பெட்டியாலதை யிறக்கி வெண்ணெய்
     இடுத்து நீருண்பீரானா லில்லை யினிப்பின் ரோகம்

 

          சீவசத்தில் உணவுகளின் சிரசாய் நின்று

                தீங்குதரு சலரோகம் பாண்டு குன்மம்

          ஆயகெட்ட நோய்களென்றும் அணுகிடாது

                  ஆதரிக்கு மரிய பெரும் ஆற்றலுற்றுத்

            தாயகத்தி லரியபெரும் உணவாய்த் தோன்றித்

                    தஞ்சமிலா ஏழைமக்கள் தமையுந் தேற்றி

              மாயவித்தை போன்றேனென் மாவின் சத்தை

                    மாநிலத்தில் உணராதார் மாக்கள் தானே

 

என்று இப்பாடல்களும் ஒடியல் மாவின் மகத்துவத்துக்குச் சான்று பகரு வதாய் வந்தமைகிறது என்பதையும் கருத்திருத்தல் அவசியமாகும்.

  பனங்கிழங்கினை உணவாக எடுப்பது மட்டுமேதான் எங்களுக்குத் தெரி யும். ஆனால் அதில் அடங்கியிருக் கும் மருத்துவ குணங்களை அறிந்திட் டால் பனங்கிழங்கினப் பொக்கிஷமாகவே நாங்களனைவருமே போற்றி நிற் போம்.பனங்கிழங்கினைப்  பற்றி பழைய வைத்திய நூல்கள் சிறப்பாக எடுத் துக் கூறுகின்றன. அந்த வகையில் சித்தவைத்தியத்தில் முன்னணி வகித்த வர்களான போகர் புலிப்பாணியார்கொங்கணர் ஆகியோர் கருத்துக்கள் மனமிருத்த வேண்டிய கருத்துக்களாகவே இருக்கின்றன. பனங்கிழங்கில் இரசாய னப் பொருட்கள் பல இருக்கின்றன என்பது மிகவும் முக்கியமான செய்தியாகும்.சிறு பிள்ளைகளுக்கு குட லில் நாடாப்புழுபாண்டுக்கிருமிகீரைப்பூச்சிதானப்புழு என்பனவற்றால் தாக்கம் ஏற்பட வாய்ப்பிருக் கிறது. அப்படி ஏற்படும் பொழுது அதனை நீக்கிட கைகொடுத்திடும் மருத்துவம் தன்மையினைனைப் பனங் கிழங்கில் இருக்கும் இரசாயானப் பொருட்கள் கொண்டிருக்கின்றன என்பதுதான் இங்கு கருத்திருத்த வேண்டியதாகும். பனங்கிழங்கினைச் சாப்பிடுவதால் இப்படியான பூச்சிகள் அனைத்துமே உட லைவிட்டு வெளியேறும் நிலை ஏற்படுகிறது என்பதுதான் மிகவும் முக்கிய செய்தியாகும்.சிறிய பிள்ளைகளுக்கு மருந் தாக உதவுவதோடு நின்று வி டாது பெரியவர்களுக்கும் மருந்தாக உதவி நிற்கிறது. மேககரணம்வெள்ளை,   வெட்டைநீர்க்கடுப்புசருமத்தில் ஏற்படுகின்ற நிறமாற்ற ம்ஆகிய நோய்களை அகற்றிடும் வகையிலும் பனங்கிழங்கு இருக்கிறது என்பதை யும் கருத்திருத்தல் அவசியமேயாகும்.பனங்கிழங்கானது அத்துடன் அமை யாது மேலும் பல நிலைகளிலும் மருந்தாகி நிற்கிறது. அந்திரச்சூடு தணி கிறது. பித்தம் அகல்கிறது. குளிர்ச்சியையும் வனைப்பையும் தந்தும் நிற்கி றது  அதுமட்டுமின்றி ; அதி மூத்திரம்,  அரிப்பு,  ஆசனக் கடுப்பு,  ஆசன வெடி ப்பு, இரத்தப்பித்தம், இரத்தமூலம்,  உள்மூலம், கரப்பான், கருஞ்சொறி,  காளாஞ்சுப் படை,   கிரந்தி, கிரந்திப்புண், குடற்புரட்டல், குறிகரணம், சிறுநீர் எரிச்சல், சீழ் மூலம், சூதக வயிற்றுவலி சொட்டு மூத்திரம், தண்டு வீக்கம், சொறி, படர்தாமரை, படை, பவுத்திரம்,  பித்தமயக்கம், மாதவிடாய் சிக்கல்,   யோனிநோய்கள், வெட்டைநோய், ஆகியவற்றையும் குணமாக்கும் மருந்தாகவும் அமைந்திருக் கிறது என்பது நோக்கத்ததாகும். 

        நேர்ந்தவுட் சூடும் நீஅர்ந்தபன் மேகமுடன்

        சேர்ந்தபல வீனம் சுகமாகும்- ஓர்ந்து
        பலமறிந்து பேசும் பனங்கிழங்கிற் குள்ள
        நலமிதுவாம் நாட்டிற் பகர் 

       பனங்கிழங் காலத்தி வெப்பம் பன் மேகமும்போ
       மினுங் குளிர்ச்சி யோடழகு மெய்துங்தின நன்மையும்
       புண்ணுங் கரப்பானும் பூரிக்கு மெய்யுலா
       நுண்ணும் ஓடி கிழங்கினால்

No comments: