கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை எட்டு ]

  


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

  மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
  மெல்பேண் ... அவுஸ்திரேலியா

 

அசல்பிரதிஅச்சடியோலைஇசையோலை


இணக்கோலைஏடகம்ஏட்டுப்பொறிஒற்றுதல்ஓலைத்தூக்குஓலைநாயகம்ஓலைபோக்குதல்ஓலைப் பாசுரம்ஓலை வாரிகணக்கோலைகம்பைகம்பை கட்டுதல்காணாட்டு,  குறிப்போலைசட் டோலைசந்திரகம்சரவைசரசுவதி பண்டாரம்சிக்குப் பலகைநீட்டுநெட்டோலைபையோலைபொறியொற்றோலைமுறிப்பத்திரம்வெள்ளேடு வெள்ளோலைஎன்று - இங்கே சொல்லப்பட்ட அத்தனையும் கற்பகதருவாம் பனையுடன் இணைந்தே இருக்கின்றன என்பது கருத்திருத்த வேண்டியதே.பனைக்கும் இங்கே காட்டப்பட்ட சொற்களுக்கும் என்ன தொடர்பு என்று எண்ணத் தோன்றுகிற தல்லவா ! அத்தனையும் பனையின் ஓலையால் வந்த சொற்களேயாகும்.

  ஓலையினால் உருவான ஏடு பற்றிப் பார்த்தோம். அந்த


ஏட்டுக்கும் இந்தச் சொற்களுக்கும் மிகவும் நெருக்கம் என்றுதான் சொல்லுதல் வேண்டும்.அசல்பிரதி என்றால் ஓலையில் எழுதப்பட்ட முதற் பிரதியாகிறது.அச்சடி ஓலை என்பது முத்திரை இடப்பட்ட ஓலையினைக் குறிப்பதாகும்.இசையோலை எனும் பொழுது ஒப்பந்த ஓலையும்இணக்கோலை எனும் பொழுது உடன் படிக்கை ஓலையும் என்னும் கருத்தும் வந்து நிற்கிறது. ஏடகம் என்றால் பனை என்றும் பலகை என்றும் கருத்தாய் அமைகிறது. ஏட்டுப்பொறி என்றால் ஓலையில் பதிக்கும் முத்திரைக்குப் பெயராகும்.ஒற்றுதல் என்பதற்கும் ஓலையில் முத்திரை இடல் என்பதும் கருத்தாய் அமைகிறது.

  சீட்டுக் கவி எழுதிக் கொடுப்பதை  ஓலைத்தூக்கு என்று


அழைத்தனர்.தலைமை அமைச்சராக இருப் பவரை ஓலை நாயகம் என்றும்ஓலையில் செய்தி அனுப் புதலை ஓலை போக்குதல் என்றும் சொன் னதாக அறியமுடிகிறது.கடிதச் செய்திகளை அனுப்பியதை ஓலைப்பாசுரம் என்று கூறினார்கள். பொருத் தமாய் ஓலைகளைத் தேர்ந்தெடுத்து அதனை வாருவதற்கு பயன்படுத்தும் கருவியான கத்திக்கு ஓலை வாரி என்று பெயரிட்டழைத்தார்கள்.

  கணக்குகளை எழுதி வைத்த ஏடுகளை கணக்கோலை


என்றார்கள்.ஒலையினால் ஆகிய ஏட்டுச் சுவடிகளின் சட்டங்களுக்கு கம்பை என்றும் சுவடிகளைக் கட்டு வதை கம்பை கட்டுதல் என்றும் அழை த்திருக்கிறார்கள்.ஏட்டுக்கு ஏற்ப ஓலைகளை நறுக்கி எடுப்பதை காணாட்டு என்றும் கணக்குகள் எழுத ப்பட்ட ஓலையினை குறிப்போலை என்றும் அழைத்திருக்கிறார்கள்.

  சட்டோலை என்றால் சட்டம் எழுதுவதற்கு பயன்பட்ட


ஓலையாகும்.எழுதிய ஓலையினை வைப்பதற்கு பயன்படுத்திய ஓலையின் உறைச்சுருளை சந்திரகம் என்னும் பெயரால் அழைத்திருக்கிறார்கள். எழுத ப்பட்ட ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் இடத்துக்கு சரசுவதி பண்டாரம் என்று பெயரி ட்டமை சிறப்பாய் இருக்கிறதல்லவா ! எழுதிய ஓலைச் சுவடிகளைப் படிப்பதுதானே முக்கியம். படிப்பதற்கு ஏடுகளை வைக்க ஒரு பலகையினைப் பயன்படுத்தியதை அறியமுடிகிறது. அப்படி அமைந்த அந்தப் பல கையைத்தான் சிக்குப்பலகை என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

  திருமுக ஓலையினை நீட்டு என்று அழைத்தார்கள்.நெட்டோலை


என்றும் திருமுகத்துக்கு இன்னுமொரு பெயரினையும் கொடுத்திருக்கிறார்கள்.பச்சை ஓலையினை பையோலை என்றும் முத்திரை ஓலையினை பொறியொற்றோலை என்றும் அழைத்திருக்கிறார்கள்.ஒலையில் எழுதப்பட்ட பத்திரத்தை முறிப்பத்திரம் என்றார்கள்.எழுதாமல் இருக்கும் ஓலையினாலான ஏடுகளை வெள்ளேடு என்றும் வெள்ளோலை என்றும் பெயரிட்டு அழைத்தார்கள் என்று அறியக் கூடியதாக இருக்கிறது.

  பனை ஓலையினால் ஆகிய ஏடுகளைக் குறிக்க இன்னும் பல


சொற்களை எங்கள் முன்னோர்கள் தங்கள் வசம் வைத்திருந்தார்கள். அவைபற்றி தனி நூலே எழுதி விடலாம். அசைஇணாட்டுஇருவிளஊக ஆதா ரப்படிஊக மூலப்படிஏடு திருப்புதல்ஓலைதீட்டுதல்ஓலையாள், கணக்காயர், கதம்பை,  கரம்கைமுறிகோணோலை,சுகஸ்த லிகிதம்திருக்கைக் கோட்டிஇப்படி எண்ணில்லாச் சொற்களைப் பெயராக்கி கற்பக தருவாம் பனையின் ஓலையினை அதனால் ஆகிய ஏட்டினை கண்டு மகிழ்ந்து பயனடைந்திருக்கிறார்கள் எங்களின் முன்னோர்கள். அதுமட்டுமல்ல இப்படியும் பனை ஓலையினால் ஆகிய ஏட்டினை அழைத்து மகிழலாம் என்பதற்கும் பல அருஞ் சொற்களை ஆக்கி அளித்திருக்கிறார்கள் என்னும் பொழுது எங்கள் முன்னோர்களின் ஆற்றலை ஆளுமையை வியக்காமல் இருந்திட முடியுமா !

    எண்ணக் கருத்துகளைச் சுமந்து எங்களுக்கு அளித்த பெருமை



ஏட்டுச் சுவடிகளுக்கே உரியது என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை

எனலாம். இன்று நாங்கள் நூல்களாய் கைகளில் வைத்து பயன் அடையும் மூலத்தை அளித்தன ஏடுகள் அல்லவா ! அரிய பெரிய பொக்கிஷங்களையெல்லாம் அழியாமல் காத்த எங்கள் முன்னோரின் தொழில் நுட்ப ஆற்றலையும் வியக்காமல் இருக்கவே முடியாதும் இருக்கிறது அல்லவா ! அத்தனை கருவூலங்களையும் அடக்குவதற்கு கைகொடுத்தது கற்பகதருவாம் பனையின் ஓலைகள் என்னும் பொழுது  = பனை எங்களின் உறவாகி எங்களுடன் இரண்டற இணைந்து விடுகிறது அல்லவா !

  பனையின் ஓலையினால் ஆன ஏடுகள் என்றவுடன் எங்களுக்கு


முன்னால் வந்து நிற்பவை சாதாரண ஏடுகளே. அதாவது நீளமாக ஒரு குறிப்பிட்ட அளவில் வெட்ட ப்பட்ட நறுக்குகளாகவே அவைகள் இருக்கும். அவற்றையே நாம் கண்டிருப்போம். ஆனால் ஏட்டுச் சுவடிகள் பல வடிவங்களில் இருப்பதை நம்மில் எத்தனைபேர் அறிவோம். சிறியபெரிய சுவடிகள்பம்பரச்சுவடிகள் . அது மாத்திரமல்ல சிவலிங்கத்தின் வடிவத்திலும் ஏட்டுச் சுவடிகள் அமைந்திருக்கின்றன. திருமுருகாற்றுப்படை என்பது முருகப் பெருமான் பெருமை கூறும் நூலாகும்..முருகனை அடை வதற்கு வழிகாட்டும் அதாவது ஆற்றுப்படுத்தும் நூல் என்பது அதன் அர்த்தமாகும். இந்த நூல் வட்டவடிவான மிகச்சிறிய ஓலையில் எழுதப்பட்டிருக்கிறது . இதனை பம்பரச் சுவடி என்றார்கள்.எட்டு சென்டி மீற்றர் நீளமும்முக்கால் சென்டி மீற்றர் அகலமும் கொண்ட சுவடிகள் சிறிய சுவடிகள் என்று அழைக்கப்பட்டன.  ஐம்பது சென்டி மீற்றர் நீளமும்நான்கு சென்டி மீற்றர் அகலமும் உடைய சுவடிகளை பெரிய சுவடிகள் என்று அழைத்தார்கள்   அச்சடித்த நூல்களுக்கு அப்பாவும் அம்மாவுமே எங்களின் பனை ஓலை தந்த ஏடுகளேயாகும். அச்ச டித்த நூல்களை வரிசையாய் அடுக்கி வைத்து அனைவருமே பயன் அடையும் வண்ணம் செய்வதற்கு பெரிய அளவில் நூலகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் பழந்தமிழ் ஏட்டுச் சுவடிகளையும் நூலகத்தில்

பாதுகாத்து பயன் அடையச் செய்திருப்பதையும் அறிந்திரு ப்பது அவசியம் அல்லவா ! சுவடிகளைத் தேடி எடுத்து ஏறக்குறை எழுபது ஆயிரம் சுவடிகளை - அச்சடித்த நூல்களை அலுமாரிகளில் அடுக்கி வைத்திருப்பது போல இந்த நூலகத்தில் அடுக்கி பாதுகாப்புடன் பயன் படுத்தும் வகையில் வைத்திருக்கிறார்கள். சென்னையில் அமைந்திருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலக த்தில் அமைந்திருக்கும் கீழ்த்திசை சுவடிகள் நூலகம்தான் இந்த அரிய பணியினைச் செய்திருக்கிறது.
 ஓலைச் சுவடிகளை ஆராய்கின்ற ஆய்வறிஞர்களுக்கு  அந்த நூலகம் பெருங் கொடையாய் , வரப்பிர சாதமாய் அமைந்திருக்கிறது எனலாம்.நூலகம் என்னும் நிறுவனம் பதினாறாயிரத்து ஐஞ்ஞூறு ஏட்டுச் சுவடிகளைத் தேடி எடுத்துப் பாதுகாத்து வைத்துப் பேணி வருகிறது என்பதும் கருத்திருத்த வேண்டிய தேயாகும்.

     ஓலைச் சுவடிகளின் அருமை தெரியாதவர்கள் அவற்றை அடுப்பு எரிக்கவும் பயன்படுத்தியிருக்கிறா ர்கள். சிலர் ஓலைச் சுவடிகளை ஓடுகின்ற நீர் நிலைகளிலும் விட்டிருக்கிறார்கள். சிலர் தம்வசம் இருந்த ஏட்டுச்சுவடிகளைப் பிரித்துப் பார்க்காமலுங்கூட இருந்திருக்கிறார்கள். சம்பந்தப் பெருமான் காலத்தில் அனல் வாதம் புனல் வாதம் என்னும் போட்டியில் முக்கியம் பெற்றது ஓலைச்சுவடிகளே. மணிவாசகர் திருவாசகத்தை ஓலையில் எழுதி இறைவன் சன்னிதியில் வைக்க அடுத்த நாள் அந்த ஓலை திருத்தமாய் வந்ததாயும் புராணம் செப்புகிறது. " பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக " என்று இறைவன் பணி த்ததாயும் அதற்கு ஒப்ப மணிவாசகரும் திருக்கோவையாரைப் பாடினார் என்றும் அறிகின்றோம். பாவை யும் கோவையும் ஓலையில் தான் எழுதப்பட்டன என்பதும் மனமிருத்த வேண்டியதே.

  ஏடுகளைத் தேடி ஊர் ஊராய் அலைந்து திரிந்தவர்தான் எங்கள் தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்கள். அவர் பசியும் பாராது உடற் களைப்பும் பாராது பழந்தமிழ் ஓலைச் சுவடிகளைத் தேடுவதையே குறிக்கோளாய்க் கொண்டு வாழ்ந்தார் என்பதை யாவரும் அறிவார்கள். அவர் ஓலைச் சுவடிகளைத் தேடிப் போகும் வேளை தாம் கண்டு அனுபவித்த விஷயங்களை மனம் நொந்து எழுதியதையும் நாம் பார்க்கின்றோம்வீட்டில் பழைய ஓலைச் சுவடிகள் இருந்தால் பெருந்தோஷம் என்று எண்ணி அவற்றை நெருப்பில் இட்டும்  நீரில் இட்டும் பலர் செய்ததைக் கண்ணாரக் கண்டு கண்ணீர் விட்டு வேதனை அடைந்ததாகவும்  தமிழ்த் தாத் தாவின் சரித்திரம் எங்களுக்கு சொல்லுகிறது.என்றாலும் அவர்களிடம் கெஞ்சி மன்றாடி பல ஓலைச் சுவடிகளை எடுத்துவந்தார் என்பதையும் அறியமுடிகிறது.சரயான முறையில் பேணிப் பாதுகாக்கப்படாத படியால் எங்களின் பக்திப் பனுவல்களான திருமுறைகள் பல - பூட்டிய அறைக்குள் கறையான்களுக்கு உணவாகிப் போனதையும் மனத்திருத்தல் வேண்டும்சரியான.  முறையில் அந்த ஓலைச் சுவடிகள் காக்கப் பட்டிருந்தால் இன்னும் எத்தனையே அரிய திருமுறைப் பாடல் களை நாம் கண்டு பயன் பெற்றிருந்திரு ப்போம்.ஓலை தந்து அதனை ஏடாக்கி எழுதிட வைத்திட்ட பனைகூட இப்படியான செயல்களைக் கண்டு கண்ணிர் வடித்திருக்கும் என்றுதான் எண்ண வேண்டும் அல்லவா ! தானமாய் தன்னுடைய ஓலைகளைக் கொடுத்து - உங்கள் சிந்தனைகளை மனத்திலே வைக்காமல் வருங்கால சந்ததியினருக்கும் வழங்குங்கள். அப்படி வழங்குவதற்கு நான் என்றும் துணையாக இருப்பேன் என்று கைகொடுத்தது பனை அல்லவா ! அந்தப் பனை - பொறுப்பில்லா மனிதர்களின் செயலினைப் பார்த்து எப்படியெல்லாம் கலங்கி இருக்கும் ! கலங்கினாலும்  , கவலைப் பட்டாலும் தன்னால் எவ்வளவு கொடுக்க முடியுமோ எவ்வளவு உதவிட முடி யுமோ அவ்வளவையும் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. நாங்களோ மரம் என்று பனையினைப் பார்த்து சொல்லி விட்டு " உணர்வில்லா " மனிதர்களாகவே உலவுகிறோம்.

 

              எழுத்தோலைச் சுவடிசெய்யக்

              குருத்தோலை தந்திடுவேன்

              ஏடாக நானெழுந்து

              எல்லோர்க்கும் உதவிடுவேன்

              மனமிருக்கும் கருத்துக்களை

              மற்றவர்க்குக் கொடுப்பதற்கு

              பக்குவமாய் ஓலைதந்து

              பாரெல்லாம் வளர்ந்திடுவேன்

              எத்திசையில் இருப்பார்க்கும்

              இயன்றவரை உதவிடுவேன்

              எனைப்பார்த்து நீங்களுமே

              இயன்றவரை உதவிட்டால்

              நலமுடனே எல்லாரும்

              நன்றாக வாழ்ந்திடலாம்


No comments: