அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் வழங்கும் விவாதப் பயிற்சிப் பட்டறை

 -தகவல் பகிர்வு-


அவுஸ்திரேலியா வாழ் தமிழ் இளைஞர் மத்தியில்,
விவாதத் துறையில் உள்ள நுட்பங்களை எடுத்தியம்பும் வகையில்,
இப்பயிற்சிப் பட்டறை செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதியிலிருந்து தொண்டார்வ ரீதியில் நடாத்தப்பட்டு வருகின்றது.

முதல் இரு நாள் நிகழ்வுகளும் சிறப்புற அரங்கேறியிருந்தன.
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் அகில இலங்கைக் கம்பன்

கழகத்தைச் சார்ந்த,
துறைசார் வல்லுனர்கள், திரு. க. குமாரதாசன் மற்றும் திரு. திருநந்தகுமார் கலந்துகொண்டு,
தம் அனுபவங்களைத் திறம்பட எடுத்துரைத்தனர்.

இந்தியா - இலங்கையைச் சார்ந்த துறைசார் வல்லுனர்கள் ஏனைய தினங்களில் இணையவுள்ளனர்.

📯 பயிற்சிப் பட்டறை, Zoom செயலி வழியாக நடாத்தப்பட்டுவருகின்றது.
📯 16 முதல் 35வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்குரியது.
📯 பயிற்சிப் பட்டறையின் மூன்றாவது நாள் நிகழ்வு நாளை மாலை நடைபெறவுள்ளது.

[1] Saturday 18th of September : 7.00 - 8.00 pm
[2] Friday 24th of September: 7.00 -8.00 pm
[3] Monday 27th of September: 7.00 -8.00 pm
[4] Friday 1st of October: 7.00 -8.00 pm
[5] Monday 4th of October: 7.00 - 8.00 pm

No comments: