மாத்தளை சோமு அவர்களின் இரண்டு நாவல்களுக்கு கிடைத்த பரிசு

.

அவுஸ்திரேலியாவில் வசிக்கின்ற எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்களின் இரண்டு நாவல்களுக்கு பரிசு கிடைத்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தியாகும் . தமிழக அரசின் கீழ் இயங்கும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த அயலக நாவலுக்கான பரிசு மாத்தளை சோமு அவர்களின் கண்டிச்சீமை நாவலுக்கு கிடைத்திருக்கின்றது . அடுத்ததாக அவர் எழுதிய பாலி முதல் மியன்மார்வரை என்ற பயணக் கட்டுரை நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த பயண நூல் என்பதற்கான பரிசிலை பெற்றிருக்கின்றது. நூல்களை பதிப்பித்து வெளியிட்ட தமிழ்க்குரல் பதிப்பகம் இதனால் பெருமை கொள்கின்றது. அதுமட்டுமல்ல அவுஸ்ரேலிய தமிழர்களாகிய நாங்களும் நிச்சயமாக பெருமை கொள்ளலாம். மாத்தளை சோமு அவர்களை தமிழ்முரசு அவுஸ்திரேலியா வாழ்த்துகின்றது




 


No comments: