எழுத்தாளர் ஏ.எஸ்.நவாஸ் அவர்கள் காலமானார் - மேமன்கவி

.

நண்பரும் எழுத்தாளருமான  ஏ.எஸ்.நவாஸ்  அவர்கள் காலமான செய்தி பெரும் அதிர்ச்சியை அளித்தது. சுகவீனமுற்ற நிலையில் ஒரு வாரத்திற்கு முன்னதாக அவருடன் தொலைபேசியில் கதைத்து அவரின் நலத்தினை விசாரித்தேன்.
. மேமன் சமூகத்திலிருந்து பத்திரிகைத்துறையிலும் இலக்கியத்துறையிலும் பங்காற்றிக் கொண்டிருந்தவர். பத்திரிகைத்துறையிலான அவரது ஆர்வமும் அத்துறை ஊடாக அவருக்கு வாய்த்த ஊடகங்களின் வழியாக எல்லோருக்கும்  முக்கியத்துவம் கொடுத்தும், மதித்தும், அவர்களை பற்றி எழுதி  வந்தவர். அவரது செய்தி அறிக்கைகள் வெறுமனே செய்தி அறிக்கைகளாக அமையாது இலக்கியத் தரமிக்கவையாக இருந்தன. அதற்கான தரவுகளைத் தேடி அவர் பல  இடங்களில் அலைந்து திரிந்து உழைத்த உழைப்பினை நேரில் கண்டவன். கணிசமான  கலை இலக்கிய நிகழ்வுகளுக்குச் சென்று மிகச் சிறப்பான முறையில் அந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய அறிக்கைகளை விமர்சன முறையில் அவர் முன் வைத்த பாங்கு சிறப்பான முறையில் இருந்தது. இதற்குக் காரணம் அவர் குறிப்பாக எல்லா கலை இலக்கியவாதிகளுடன் நட்பையும் பேணி வந்தவர். என்பதுதான்.
 இப்படியாக அவரைப் பற்றி எழுதிச் செல்ல ஏராளம்.
பிரிந்து துயரில் முழ்கி இருக்கும் அவரது குடும்பத்தின் துயரில் நானும் பங்கேற்றவனாக......
அவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று (22. 03. 2020) பிற்பகல் மாபோல முஸ்லிம் மையவாடியில்;நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக அவரது குடும்ப அங்கத்தினர்  மட்டுமே கலந்துகொள்ளும்  வகையில் நடைபெறும் என நண்பர் நவாஸின்  குடும்ப நண்பர் கிண்ணியா அமீர் அலி எனக்கு அறிவித்துள்ளார்..

No comments: