தமிழ் வளர்த்த சான்றோர் விழா! 25 – 04 - 2016

.

 எதிர்வரும்   திங்கட் கிழமை 25  04 -  2016 நான்காவது தடவையாக  மேடையேற இருக்கிறது தமிழ் வளர்த்த சான்றோர் விழா! இந்தமுறை உலக் சைவப் பேரவை தவத்திரு யோகர் சுவாமிகளுக்கும் தமிழகத்தைச் சேர்ந்த அமரர் . வே. சாமிநாத ஐயர் அவர்களுக்கும் பெரு விழா எடுக்கவுள்ளது  என்பதை மகிழ்ச்சியுடன் விழாக்குழு தமிழ் அன்பர்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சிகொள்கிறது.

இருபதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த தவத்திரு யோகர் சுவாமிகள் புகழ்பெற்ற சிவஞானி ஆவர்உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் குரு பூசை செய்து வழிபட்டுவரும் மகாயோகி  சைவத்திற்கு மாபெரும் மறுமலர்ச்சியை உண்டுபண்ணி உலகம் முழுவதும் பிற மதத்தவர்களும் சைவசமயத்தின் மகத்துவத்தை உணரவைத்தவர். இவரின் சீடரான சுப்ரமண்யசுவாமிகள் கவாயிலே (அமெரிக்கா)சைவப் பெருங்கோவிலைக் கட்டிச் சைவத்தைப் பரப்பிவந்தமைக்குக் காரணகர்த்தா எமது தவத்திரு யோகர் சுவாமிகளே. 3000க்கும் அதிகமான பாடல்களை இயற்றிச் சைவ தத்துவங்களையும் நற்சிந்தனையைப் பரப்பியவர். கடவுளை வேறெங்கும் தேடவேண்டாம். இறைவனை உனக்குள்ளே தேடு என்று  போதித்தவர் எமது சற்குருஞானி. அவரின் ஞானக் கருத்தகளை நினைவுகூர்ந்து இந்துக்களிடையே ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் -----






பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர் . வே. சாமிநாத ஐயர்.  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் . வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும்  செழுமையையும் அறியச் செய்தவர். .வே.சா  90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தவர் . வே. சாமிநாத ஐயர் அவர்கள்      
                               
,lk; --23 Nwh]; fpwnrd;w; - wPad;]; ghu;f;fpy; mike;Js;s jkpou; kz;lgk; (mUs;kpF Ju;f;if mk;kd; jpUf;Ndfhapy; tshfk;)
jpfjp  25  04 - 2016
Neuk;  khiy 5.30  - 9kzp
jkpo; md;gu;fs; Mu;tyu;fs;  Mjuthsu;fs; ahtiuAk; cyfr; irtg; Nguit (mT];jpNuypah) md;Gld; miof;fpwJ.

தமிழையும் சைவத்தையும் வளர்த்த இந்த முhபெரும் தவத்திரு யோகர் சுவாமிகளுக்கும் தமிழ்ப்பேரறிஞர் . வே . சாமிநாத ஐயர் அவர்களுக்கும் எடுக்கும் தமிழ் விழா!. தமிழ் ஆர்வலர்கள் சைவ அபிமானிகள் ஆதரவு தரவேண்டிய விழா!