ஆசிரியர்  குழு
அவுஸ்திரேலியா  தமிழ்முரசு   இணைய   இதழ்
அன்புடையீர்   இந்தவாரம்  வெளியாகியிருக்கும்  தங்கள்  தமிழ்முரசு  இணைய  இதழில் நான்  எழுதிவரும்  திரும்பிப்பார்க்கின்றேன்   தொடரின்  10  ஆவது  அங்கத்தில்   பதிவுசெய்யப்பட்டுள்ள  குத்துவிளக்கு  திரைப்படம்   தொடர்பாக  வாசகர்களுக்கு  தவறான  தகவலை  தந்திருப்பதாகவும்   தற்பொழுது  உயிரோடு  இல்லாதவர்கள்  பற்றி எழுதுவதில்  அவதானம்தேவை  என்ற  குரலோடு   தமது கருத்தினை   ஒரு  வாசகர் பதிவுசெய்துள்ளார்.
எனது  தொடரை  படித்துவரும்  அந்த  வாசகருக்கு   முதலில்   எனது மனமார்ந்த  நன்றி.  குறிப்பிட்ட  தொடர்   இருப்பவர்களையும்   எம்மைவிட்டு   மறைந்தவர்களையும்  பற்றியதுதான்.   உண்மையான   தகவல்கள்  ஆதாரங்களுடன்தான்  அதனை  எழுதிவருகின்றேன்.   எனது  தொடரின்  உண்மைத்தன்மை  பற்றி  என்னுடன்  தொலைபேசி   ஊடாகவும்   மின்னஞ்சலூடகவும்   நேரில்  சந்தித்தும்  ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளமுடியும்.
மறைந்தவர்களைப்பற்றி  எழுதும்பொழுது  அவர்களின்  மேன்மையான  பக்கங்களை  பதிவுசெய்வதே   எனது  பண்பும்   பழக்கமும்  ஆகும்.  பலமும்  பலவீனங்களும்  நிரம்பியவர்கள்   மனிதர்கள்.  எனினும்   அவற்றின்  ஊடாக  தெரிவுசெய்வது  மேன்மையான   பக்கங்களை  மாத்திரமே.
குத்துவிளக்கு   தொடர்பாக  தாய்வீடு   என்ற  இணையத்தில்   இலங்கையின்  பிரபல  எழுத்தாளர்  திரு.  தெளிவத்தை ஜோசப்  அவர்கள்    சில்லையூர்  செல்வராசன்  பற்றி  எழுதியிருக்கும்  கட்டுரையை  குறிப்பிட்ட  வாசகர்  படிக்கவேண்டும்  என்பதே  எனது  பதிலாகும்.  தாய்வீடு  இணையம்:  றறற.வாயiஎநநனர.உழஅ
முருகபூபதி

No comments: