கலியுகத்தில் உனையன்றி வேறுதுணை ஏதையா ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


                  ஈராறு முகமுடைய  இனியதமிழ் கந்தவேளே 
                        தீராதவினை யனைத்தும் தீர்த்துவிடும் கந்தவேளே 
                 மாறாத சூரரது மனந்திருந்தும் வகையினிலே 
                        மயில் சேவலாக்கி வரங்கொடுத்தாய் கந்தவேளே  !
            
                   போராடும் குணமனைத்தும் போக்கிவிடு கந்தவேளே
                         பொய்களவு எனுமனைத்தும் பொசுக்கிவிடு கந்தவேளே 
                  ஆராத காதலுடன் அனுதினமும் வணங்குகிறோம் 
                           ஐயாநீ ஓடிவந்து அரவணைத்துக் காத்துவிடு    !


                 உண்ணாமல் நாமிருந்து உனைப்போற்றி நிற்கின்றோம் 
                      எண்ணமெலாம் உன்நினைப்பே எப்போதும் இருக்குதையா 
                 பண்கொண்டு உனைப்பரவி பாடியாடி நிற்கின்றோம் 
                         பார்த்துவிடு திருக்குமரா பதம்பணிந்தே தொழுகின்றோம்  !
               
                   மண்மீது பிறந்துநாம் வாழ்கின்ற பொழுதெல்லாம் 
                             உன்மீது புலன்செல்ல உமைமைந்தா அருளிவிடு 
                    கண்திறந்து பார்க்கையிலே கந்தாநீ வரவேண்டும் 
                               கலியுகத்தில் உனையன்றி வேறுதுணை ஏதையா   ! 


-->

No comments: