பிஞ்சின் அழுகையே நெஞ்சலாம் ஒலிக்குது ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா... மெல்பேண்... அவுஸ்திரேலியா


       ஆழ்துளைக்குள் அழுகையொலி 
       அனைவரையும் உலுப்பியதே 
       வாழவெண்ணி வந்தவுயிர்
       ஆழத்துள் அடங்கியதே 
       ஓலமிட்டு அழுதிட்டார்
       ஓடியேடி அலைந்திட்டார் 
       நாளைவரும் எனநினைத்தார்
       ஆழ்துழையோ அசரவில்லை !

      தண்ணீரைத் தேடினார்
      கண்ணீரே வந்தது 
      பிஞ்சுக் குழந்தையோ
      பேதலித்து நின்றது 
      கெஞ்சினார் கிண்டினார்
      கேட்கலையே இறைவனுக்கு 
      பிஞ்சுக் குழந்தையோ
      பிணமாகிப் போனதே ! 


      பெற்றாரின் தவறா
      பேணி நிற்கும் 
      பேரரசின் தவறா 
      கற்றாரின் தவறா 
      கடவுளின் தவறா 
      யார்தவறே அறியோம் 
      பிஞ்சின் அழுகையே
      நெஞ்சலாம் ஒலிக்குது ! 
       
-->









No comments: