சொல்லத்துடித்த வானம் செ .பாஸ்கரன்

.

Image may contain: sky, cloud, night, outdoor and nature

மலை முகட்டை
தென்றல் தழுவியது
தளராத மலைகூட
தடுமாறியது
தென்றல் சிரித்தது
ஊ ஊ என்று 
ஊதித்தள்ளியது
தள்ளி நின்று
பார்த்த மேகம்
மலை முகட்டை காணாது
துடித்தது 
கண்ணீர் விட்டு அழுதது
தென்றல் அல்ல 
புயல் என்று 
தெரிந்து கொண்டபோது
சிகரத்தை இளந்திருந்தது
மலை

No comments: