அழகே அழகே.. - வித்யாசாகர்!

.

படபடவென 
புத்தகத் தாள்கள் போலவே 
படபடக்கிறது மனசு;

ஒவ்வொருப் பக்கத்திலும் 
எழுதிவைத்துக்கொள்கிறேன்
உனது சிரிப்பை..

ஒவ்வொரு
நட்சதிரங்களையும்
உடைத்து உடைத்து  -

வேறென்ன செய்யப்போகிறேன் 
உன் -
பெயரெழுதுவதைத் தவிர..


முன் பேருந்தில் நீ 
பின் பேருந்தில் நான்,

படியேறி 
படியேறி நிற்கிறது மனசு 
உன்னிடம்..

நீ நிலா அல்ல 
நதி அல்ல 
அன்னமோ தென்றலோ அல்ல 

ஆனால் எல்லாமே நீ 
ஏனெனில் அது நீ..

தண்ணீரை கலைக்கிறேன் 
உன் முகம் தெரிகிறது;

மீண்டும் 
தண்ணீரைக் கலைக்கிறேன் 
உன் முகம் தெரிகிறது;

அம்மா 'என்னடா பைத்தியமா உனக்கு'
என்கிறாள்,

நான் இல்லையென்றெல்லாம்
சொல்லவில்லை, 

மீண்டும் தண்ணீரைக் கலைக்கிறேன் 
உன் முகம் பார்க்க!!
-------------------------------------------------------------------------------
வித்யாசாகர்

No comments: