மலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை இல-4 திருமதி.சுபாஜினி சிறீரஞ்சன்டென்மார்க்

.
என்னுள் தீண்டிய உணர்வுகள்
எண்ணைச்  சுரங்கமாய்......
அள்ள குறையா அமிர்தமாய்
வேண்டுமே

ஐம்புலனும் அடங்கி அள்ளிப் பருகும்
ஊற்றாய் பாய்ந்து
தேனாய் இனித்து
தினம் பார்க்கும் மலர்ந்த
முகமாய் வேண்டுமே..........

கலைகள் பெருகிட
காலமெலாம் படைத்து
புதிதாய்  முகம் காட்டி
மலரும் முகமாய் வேண்டுமே......

பிறமொழிக் கலைகளை பெயர்த்து
நுகர்ந்;;து இன்பம் எனச் சொல்லி....
இணையவலையில் நிலையாய்
தமிழே நின் முகமே வேண்டுமே.......

அழகு மொழி கற்றும்
அதில் ஏதும் உணராத
உயிரோடும் கலக்காத
உணர்வுகளை தந்த
தமிழே என்றும்
தொடுகை(ஸ்பரிச)இல்லா
தீண்டலாக வேண்டுமே.........

No comments: