மெல்பன் பாரதி பள்ளியின் 20 வருட நிறைவு விழா புத்தகக் கண்காட்சி

.
         மெல்பனில்  கடந்த  20  வருடங்களுக்கும்  மேலாக  இயங்கும்  பாரதி பள்ளியின் 20  வருட  நிறைவு  விழா  எதிர்வரும்  26-04-2015  ஆம்   திகதி   ஞாயிற்றுக்கிழமை   முற்பகல்  10   மணியிலிருந்து   மாலை  6   மணிவரையில்  Dandenong High School    மண்டபத்தில் (Ann Street, Dandenong - 3175 )  நடைபெறும்.   இவ்விழாவில்  பல்வேறு நிகழ்ச்சிகளுடன்   தமிழ்  புத்தகக்  கண்காட்சியும்  ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில்  தங்கள்  வெளியீடுகளையும்  தங்களிடமிருக்கும் அவுஸ்திரேலியா   அன்பர்களின்  வெளியீடுகளையும்  இடம்பெறச்செய்யலாம்.   கண்காட்சி  10  மணிக்கு ஆரம்பமாகவிருப்பதனால்  நூல்களை   காலை  9   மணியளவில்  கண்காட்சி  அரங்கில்    சேர்ப்பிக்குமாறும்  விழா  நிகழ்ச்சிகளில்  கலந்து  சிறப்பிக்குமாறும்  கேட்டுக்கொள்கின்றோம்.
கண்காட்சி  முடிவுற்றதும்  தங்கள்  நூல்களை   பெற்றுச்செல்ல  முடியும்.
மேலதிக   விபரங்களுக்கு:

லெ.முருகபூபதி :-   04 166 25 766  -   letchumananm@gmail.com

No comments: