காதலிக்கப்படும் போது......கவிதை.

.

இரு கண்களில்
ஓர் அழுகை

உள்ளங்களிரண்டில்
ஒரு புன்னகை

உதடுகளிரண்டில்
ஒரு உச்சரிப்பு

இரண்டு என்றவைகளுக்கெல்லாம்
ஒன்று என்ற பொருள்

காதுமடல்களில்
செல்லப்பெயர்களின்
தேடல்


மறந்துவிட்டு
வாழும் வாழ்க்கை

வாழ்கையில் சிக்கிய
தேவை

சிக்கலில் சிக்கி 
அவிழ்க்கும் முடிச்சுகள்

காதலிக்கப்படும் போது......


நன்றி:sidaralkal.blogspot

No comments: