சக்தியாய் நின்றாய் - Chelliah Paskaran


கண்விழித் தாமரை

 கனிந்து நோக்கிடும்

 என்னுயிர் தாரகை நீ

விண்ணதில் மின்னிடும்

பொன்னொளி காட்டும்

தண்மதி போன்றவள் நீ

வாளெனக் கண் மடல்

வெட்டி மறைத்துதிடும்

விழியினால் கொன்றவள் நீ

பேசிடும் மொழியிலும்

வீசிடும் இலக்கணம்

பொழிப்புரை சொல்பவள் நீ

மானுட வாழ்வில் வென்று நிலைத்திட

வாய்மொழி கொண்டவள் நீ

அடங்கிப் கிடந்தவள்

விழித்து எழுந்திடின்

அகிலம் அதிரும் என்று

செருக்கிடை மேவிய

நிமிர்நடை கொண்டவள்

நேரில் வருகை கண்டேன்

ஆண்மகன் என்றிட்ட

ஆணவம் அழிந்தது

சக்தி என்றே வியந்தேன் .

-

No comments: