தாய்வீடு அச்சுப் பத்திரிகை இனி ஒலி இதழாகவும் - படிக்கலாம் & கேட்கலாம் - கானா பிரபா


கனடாவில் இருந்து வெளிவரும் “தாய்வீடு” மாதப் பத்திரிகை பல்லாண்டுகளாக நடப்புச் செய்தி விமர்சனங்கள், வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு குறித்த திரட்டுகளோடு வெளிவரும் கனகாத்திரமான இதழாகும்.

இன்று தொழில் நுட்பத்தின் அடுத்த பாய்ச்சலாக ஒலிப்புத்தகங்கள் பெருகி வரும் சூழலில் தாய்வீடு பத்திரிகை இந்த ஜூன் மாத இதழில் இருந்து ஒலியிலும் பயணிக்க ஆரம்பிக்கிறது. அதாவது குறித்த பத்திரிகையின் கட்டுரைகளை அழுத்தும் போது அது ஒலி ஊடகம் வழியாக வாசிக்கின்றது. விளம்பர பக்கத்தை அழுத்தினால் குறித்த விளம்பரதாரரின் இணையப் பக்கம் செல்கிறது.

தமிழை வாசிக்கப் பழகுவோருக்கும்மொழியைச் செவி வழியாக உய்த்துணர்வோருக்கும் இந்த ஒலி இதழ் முயற்சி ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கின்றது.

பத்திரிகைத் துறையில் புதுமை படைத்திடும் தாய்வீட்டுக்கு நன்றியும் பாராட்டுகளும்.

இந்த ஒலி வழி வாசிப்புச் செயன்முறை குறித்த என் காணொளிப் பகிர்வு இது.






No comments: