கற்றுத் தந்தபாடம் அர்த்தமுள தன்றோ ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


விட்டுவிடு என்றால் விட்டுவிட மாட்டார்
செத்திடுவாய் என்றால் செவிமடுக்க மாட்டார்
தொற்றிவந்த கொரனா கற்றுத்தந்த பாடம்
விட்டுவிட்டு விலகி நிற்கவைத்த திப்போ   !

மதுவருந்தும் பலபேர் மாறிவிட வைத்து                                 
புகைவிரும்பும் பலபேர் அதைநினையா நிற்க                            
தனிமை எனும்பாடம் தந்ததிந்த கொரனா                                    
அதுவெமது வாழ்வில் அதிகநன்மை யன்றோ !

சூழல் தூய்மையாக துணையாக நின்று                                
வீடு கோயிலாக ஆகிவிட வைத்து                                    
பாடசாலை வீட்டில் புகுந்திடவே வைத்த                               
பாடமது எமக்கு நல்திருப்பம் அன்றோ    !

கடை  உணவெமது வயிறடையா வண்ணம்                             
வீட்டுணவு உடலைக் காத்திடவே வைத்து                                  
கூட்டமதில் இணையா குடும்பதில் இணைய                           
காட்டி நின்றபாடம் கருத்தினிலே கொள்வோம் !


கிண்ணமதில் மதுவை ஊற்றித்தரும் கடைகள்
கிளர்ச்சியுடன் நடனம் ஆடிநிற்கும் இடங்கள்
அத்தனையும் மறக்க அமைந்திந்த தனிமை
கற்றுத்தந்த பாடம் கருத்தேற்றி வைப்போம் ! 


சாதியெனும் சண்டை தனையிழந்து போக                             
மதபேதம் அதனை மனமெண்ணா நிற்க                                  
காதலுடன் குடும்பச் சூழலெமை கெளவ                               
கற்றுத் தந்தபாடம் கருத்தை விட்டுபோமா  !               


அயலவரின் தொல்லை எமக்கு வரவில்லை                            
ஆசாரம் வீட்டில் அனுசரித்தே நின்றோம்                              
விழிப்புணர்வு மனதை நிறைத்தபடி இருக்க                             
கற்றுத் தந்தபாடம் அர்த்தமுள தன்றோ     !                           





No comments: