ஈழமென்னும் பெயரைச் சொன்னால்
ஆளுகின்றார் எண்ணம் மாறின்
அனை
நாளும் மக்கள் வாழ்விலென்றும்
நன்
வானில் உறையும் தேவன்தன்னை
வரம் கொடுக்க வேண்டுவோம் !
ஈழம்தன்னில் இயற்கை வளம்
எங்கும் நிறைந்து இருக்குதே
ஆழக்கடல் சூழ்ந்து நின்று
அரணையாய் அமைந்து இருக்குதே
வாழவெண்ணி மக்கள் எல்லாம்
நாளும் பொழுதும் உழைக்கிறார்
மக்கள் ஆட்சி மலரவேண்டி
மனதில் எண்ணி நிற்கிறார் !
செந்தமிழை பேசும் மக்கள்
சிந்தை கலங்கி வாழ்கிறார்
சிங்களத்தைப் போல தமிழும்
சிறந்து விளங்க நினைக்கிறார்
மங்கலமாய் இரண்டு மொழியும்
வாழ்வில் இணைந்து நின்றிடின்
மாறுபட்ட நிலைகள் யாவும்
கூறு பட்டுப் போகுமே !
எவர் என்று பார்ப்பதில்லை
ஆழக் கடல் வளமும்
அனைவருக்கும் உதவி நிற்கும்
இயற்கை அன்னை ஒருகாலும்
இனம் பார்த்து நடப்பதில்லை
இங்குள்ள சில பேரால்
இடர் எழுந்து வருகிறதே !
இந்துமதம் புத்த மதம்
இஸ்லா மொடு கிரிஸ்தவமும்
சொந்தம் எனக் கொண்டுபலர்
ஈழம் அதில் வாழ்கின்றார்
இம் மதத்து தத்துவங்கள்
என்றும் பகை சொன்னதில்லை
ஏன் பகைகள் வருகிறதோ
இறைவன்தான் சொல்ல வேண்டும் !
No comments:
Post a Comment