ஈழத்துப் பிரபல எழுத்தாளர் செங்கையாழியான் இயற்கை எய்தினார்

.

ஈழத்துப் பிரபல எழுத்தாளர் செங்கையாழியான் இயற்கை எய்தினார். ஈழத்து மூத்த எழுத்தாளரும், யாழ்.இந்துக் கல்லூரி பழைய மாணவனுமாகிய செங்கையாழியான் எனும் புனைபெயரால் அறியப்படும் கந்தையா குணராசா சுகவீனம் காரணமாக இயற்கை எய்தினார். இவர் மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார். 

யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றார். புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் க.குணராசாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.