.
இறைவனக் காண நினைத்தேன்உன்திருமுகம் காணும் முன்பாக..உணரத் துடித்தேன் சொர்க்கமதை,உன்னிரு பாதங்களில் பணியும் முன்பாக..எழுத வார்த்தைகள் இல்லையம்மா..வளர்த்த விதம் சொல்வதற்கு..பாடிட சொற்கள் கிடைக்கவில்லை..பாடுபட்டு படிக்க வைத்ததற்கு!விறகடுப்பின் புகையில்நீவெந்துஎம் பசிபோக்கினாய்!வியர்வை நீரூற்றி எங்களைவளர்த்து ஆளாக்கினாய்!பட்டங்கள் பெறவைத்துப்பார்த்துப் பூரித்துப்போனாய்!வெற்றிகள் பலகொடுத்துவேதனைகளை விரட்டினாய்!கவிதைகளால் தாலாட்டிகண்ணுறங்கச் செய்தாய்!வர்ணனைகள் பலதந்து என்னுள்வாழ்ந்துகொண்டுதானிருக்கிறாய்!பாரங்களை இறக்கிடஉன் பாதங்கள் வேண்டும்சுகமாக தூங்கியெழஉன் மடிவேண்டும் ஒரு நொடி!
சோகங்கள் தீர்த்திட - உன்தோள்கள் தான்வேண்டும்!கண்ணீரைத் துடைத்திட – உன்கைகள் மட்டுமே வேண்டும்!ஆறுதல் கூறிட..அன்பால் அரவணைக்கதைரியம் தந்திடதேற்றி நிமிர்த்திட..தாயே! என்னருகேநீ வேண்டும்! நீ வேண்டும்!தாயான பின்பும்தாய்மைக்காக..தவித்திடும் சேய்..
No comments:
Post a Comment