.
பட்டாடை கண்ணில் பளபளக்க
பட்டாசுகளின் ஊர்வலத்தில்
பறித்திடும் வண்ணங்களில்
பரவசமாக்கும் இன்பத்தீபாவளி!
எண்ணங்களனைத்தும் நல்லவை நிறைய
வண்ணங்களாய் மத்தாப்பூக்கள் ஒளிர
சின்னத்தீபங்களில் சிரிக்குமின்பதீபாவளி!
காணும் மனிதரிடை கபட இருள் விலகிட
பேணும் மாந்தரிடை பேதங்கள் மறைந்து
பேரொளியாய் பெருமகிழ்வு நிறைந்திட
ஓரொளியாய் சிற்றகலில் சிறகடிக்கும் தீபாவளி!
ஒளியாய் நம்முள் ஒளிந்திட்ட தமிழே
ஒளிர்விளக்காய் என்றும் நீ ஒளிர்ந்திட
ஓயாமல் உழைத்து உலகத் தமிழரெல்லாம்
ஒன்றா(க்)கி உயர்சிகரத்தில் உனை ஏற்றும் நாள்
இன்றாகி நின்றால்
அன்றே எமக்கது
அதிர்வெடி தீபாவளி!
வாழ்த்திடும் அன்பன்..
Dr பாலு விஜய்
தமிழ் இலக்கிய பேரவை
சிட்னி!
பட்டாடை கண்ணில் பளபளக்க
பட்டாசுகளின் ஊர்வலத்தில்
பறித்திடும் வண்ணங்களில்
பரவசமாக்கும் இன்பத்தீபாவளி!
எண்ணங்களனைத்தும் நல்லவை நிறைய
வண்ணங்களாய் மத்தாப்பூக்கள் ஒளிர
சின்னத்தீபங்களில் சிரிக்குமின்பதீபாவளி!
காணும் மனிதரிடை கபட இருள் விலகிட
பேணும் மாந்தரிடை பேதங்கள் மறைந்து
பேரொளியாய் பெருமகிழ்வு நிறைந்திட
ஓரொளியாய் சிற்றகலில் சிறகடிக்கும் தீபாவளி!
ஒளியாய் நம்முள் ஒளிந்திட்ட தமிழே
ஒளிர்விளக்காய் என்றும் நீ ஒளிர்ந்திட
ஓயாமல் உழைத்து உலகத் தமிழரெல்லாம்
ஒன்றா(க்)கி உயர்சிகரத்தில் உனை ஏற்றும் நாள்
இன்றாகி நின்றால்
அன்றே எமக்கது
அதிர்வெடி தீபாவளி!
வாழ்த்திடும் அன்பன்..
Dr பாலு விஜய்
தமிழ் இலக்கிய பேரவை
சிட்னி!
No comments:
Post a Comment