கு.ப.ரா என்று அறியப்பட்ட கு. ப.ராஜகோபாலன் அவர்கள் எழுதிய சிறுகதையொன்றை அண்மையில் வாசித்தது பற்றிய சிறு குறிப்புகளே இவை.
தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடிகளில் ஒருவர் என்று
இவரைக் குறிப்பிடுகிறார்கள். 42 வருடங்கள் மட்டுமே வாழ்ந்து மறைந்த கு.ப.ரா வின் சில சிறுகதைகளை வலைத்தமிழ் என்ற இணையத் தளத்தில் அண்மையில் காண முடிந்தது.
'விடியுமா?' என்ற கதை எழுதப்பட்டு எப்படியும் இப்போது 80 வருடங்கள் கடந்திருக்க வேண்டும். ஏனென்றால் கு.ப.ரா 1944 யிலேயே இறந்து விட்டார்.
தந்திகள் அவசரச் செய்திகளைத் தாங்கி வந்த காலத்தை நினைவூட்டுகிறது கதை. தந்திச் செய்தியைக் கேட்டு கதை சொல்லி தனது தமக்கையுடன் ரயிலில் பயணிக்கும் பின்னணியில் கதை நகருகிறது.
No comments:
Post a Comment