ஓடியோடி உழைத்தாலும்
ஒன்றைப்பத் தாக்கினாலும்
உறங்கி யெழுந்திடுதல்
ஒருவருக்குந் தெரியாது
உறங்கினார் உறங்கிவிடின்
உழைத்தவைகள் வாராது
விளங்காமல் வீண்கனவு
மேலோங்கி எழுகிறதே !
ஒன்றைப்பத் தாக்கினாலும்
உறங்கி யெழுந்திடுதல்
ஒருவருக்குந் தெரியாது
உறங்கினார் உறங்கிவிடின்
உழைத்தவைகள் வாராது
விளங்காமல் வீண்கனவு
மேலோங்கி எழுகிறதே !
கறந்தபால் மறுபடியும்
மடியேற மாட்டாது
பிறந்திடலும் இறந்திடலும்
பெரும் புதிராயாகிறது
வருந்தியே அழைத்தாலும்
மரணம் வந்தமையாது
வருகின்ற வேளைதனை
மண்ணுலகில் யாரறிவார் !
நிரந்தரமாய் வாழுகின்றார்
நீள்புவியில் யாருமுண்டோ
அறிந்திருந்தும் பலபேரும்
அதையுணரா ஓடுகிறார்
கிடைக்கின்ற வாழ்நாளில்
கீழ்த்தரமாய் எண்ணாமல்
கடைத்தேறும் வழிநடந்தால்
காலமெமை வாழ்த்திநிற்கும் !
No comments:
Post a Comment