சட்ட நூலுக்கு தமிழ்ப்பேராய விருது



கலாநிதி   சந்திரிகா சுப்ரமணியன் எழுதிய “ இணையக் குற்றங்களும்இணையவெளிச் சட்டங்களும்”  சட்ட  நூலுக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் 2019  ஆம் ஆண்டுக்கான தமிழ்ப்பேராய விருதுகளில் பெ.நா.அப்புசாமி அறிவியல் தமிழ் விருது மற்றும் அப்துல்கலாம் தொழில்நுட்ப விருது வழங்கப்பட்டுள்ளது. தொழில் நுட்ப நூல் வகையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான இந்த விருது  ஒன்றரை லட்ச ரூபாய் பரிசும் , பட்டயமும்  உள்ளடங்கியது.
இவ் விருதினை கலாநிதி   சந்திரிகா சுப்ரமணியனுக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் தா.இரா. பாரிவேந்தர் வழங்கிட பட்டயத்தை கவிப்பேரரசர் பத்ம பூஷன் வைரமுத்து வழங்கி கௌரவித்தார்.  








No comments: