தீராத பார்வைகள்...!

.

சங்காத பார்வை
என் உரிமை நீ
என சொல்லாமல்
சொல்லும் பார்வை!

இந்த பெண்ணிற்கென்ற
கனவு உலகில் நுழையும்
அதிகாரம் பெற்று
என் கனவுகளையும்
காட்சிகளாக்கும்!

ஒரு நிமிடப்பார்வை
 உயிர்வரை இனிக்கும்
மறு நிமிடப் பார்வையோ
யுக யுகமாய் நீடிக்கும்!



வார்த்தைகளற்ற பொழுதுகளில்
மனதில் வழியும் நேசம்
க‌ண்க‌ளில் மின்ன
புன்னகைத்து பேசிச் செல்லும்!

உன் விழி தீண்ட‌லில்
என் பெண்மை விழித்துக்கொள்ள‌
வெட்கை போர்வைகொண்டு
உன் முகம் பார்க்க 
முடியாமல் தவிக்க வைக்கும்!

அணைக்க மறந்து
விரல் கூட தீண்டிடாமலே
பார்வை ஸ்ப‌ரிச‌ங்க‌ளாகி
உள்ளம் தொட்டு
உயிரில் தங்கும்!

தீராத உன் பார்வைகள்
தித்திக்கும்
நித்தம் என்னை அழகாக்கும்!

காணும் நொடிகளில்
எனக்குள் உன்னை தேடி
கண்டெடுக்க முடியாமல்
என்னுயுரிலே கலந்து
உணர்வுகளின் உச்சத்தை
தாங்கி நிற்கும்!

பார்வையின் வேகம்
வ‌தைத்தாலும்
செதுக்குகிறது என்னை!

உன் விழித்தீண்ட‌
யாசிக்கும்
என் கவிதைகளானாலும்
கவிதையான
உன் பார்வைகளே
நான் பெற்ற பாக்கியமடா...!

காதல் பூத்திருக்கும்
உன் பார்வையால்
கவிதை எழுதுகிறது
என் கண்கள்!

nantri http://enmanadhilirundhu.blogspot.com.au

No comments: