.
முகில் மறைத்த
பௌர்ணமியாக
முழுக்காதலை
மறைக்கின்றாய்
முகம் காணும்
பொழுதெல்லாம்
உன் அகம் காண
விளைகின்றேன்
முகம் காட்டும்
பௌர்ணமியே
அகம் ஒளித்து ஏன்?
நடிக்கின்றாய்
கலங்காதே சொல்
பெண் நிலவே
காலம் தேய் பிறையாய்
கரையிதிங்கே
முகில் கலைக்கும்
காற்றாக
என் முகவாட்டம்
உனை குலைக்கலையா?
முகில் கலைந்த
பௌர்ணமியாய்
உன் முழுக்காதல்
சொல்லாயா?
nantripaarvaiyil.com/
No comments:
Post a Comment